பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டவர்: முன்னாள் எம்.எல்.ஏ., வேலாயுதன் மறைவுக்கு தலைவர் அண்ணாமலை இரங்கல்!

தமிழகத்தின் முதல் பாஜக எம்.எல்.ஏ., வேலாயுதன் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

தமிழக பாஜகவின் முதல் சட்டமன்ற உறுப்பினரும், கட்சியின் முன்னோடிகளில் ஒருவருமான, ஐயா திரு.சி.வேலாயுதன் அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

கட்சியின் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டவர். கொள்கைப் பிடிப்பு மிக்கவர். கடினமான உழைப்பாளி. தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கான நம்பிக்கையை விதைத்தவர்.

ஐயா திரு வேலாயுதன் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா, இறைவனடி சேர வேண்டிக் கொள்கிறேன்.

ஓம் சாந்தி !

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top