மக்களவை மூன்றாம் கட்ட தேர்தல்: 64.40 சதவிகித வாக்குப்பதிவு!

நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த 26ம் தேதியும் நடைபெற்றது. இதில் முதற்கட்ட தேர்தலில் 66.14 சதவிகிதமும், இரண்டாம் கட்ட தேர்தலில் 66.71 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.

இதையடுத்து, 93 தொகுதிகளுக்கு நேற்று மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. குஜராத் (25 தொகுதிகள்), கர்நாடகா (14), மகாராஷ்டிரா (11), உத்தரபிரதேசம் (10), மத்திய பிரதேசம் (9), சத்தீஷ்கார் (7), பீகார் (5), அசாம் (4), மேற்கு வங்காளம் (4), கோவா (2), தத்ரா-ஹவேலி-டையூ-டாமன் (2) என 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. ஆனால் ஒருசில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இரவுவரை நீடித்தது.

இந்த நிலையில், மக்களவை மூன்றாம் கட்ட தேர்தலில் 64.40 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. இது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இரவு 11.40 மணி நிலவரப்படி 64.40 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில வாரியாக வாக்குப்பதிவு விவரம்:

அசாம் -81.61, பீகார் -58.18, சத்தீஷ்கார் -71.06, தத்ரா-ஹவேலி-டையூ-டாமன் -69.87, கோவா -75.20, குஜராத் 58.98, கர்நாடகா -70.41, மத்தியபிரதேசம் – 66.05, மகாராஷ்டிரா -61.44, உத்தரபிரதேசம் – 57.34, மேற்குவங்காளம் -75.79 சதவிகிதம் என பதிவாகியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top