தமிழகத்தில் போட்டியிடும் பாஜக, தேசிய ஜனநாயகக்  கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி கடிதம்!

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள வேட்பாளர்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை (19-ம் தேதி) தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதன்படி நாடு முழுவதும் முதல் கட்டமாக நாளை முதல் கட்ட தேர்தல் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் நடைபெறுகிறது.

இந்நிலையில் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் போட்டியிடும் அனைத்து பா.ஜ.க., மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கும், பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி உள்ளார்.

இதுதொடர்பாக அந்த கடிதத்தில், இது சாதாரண தேர்தல் அல்ல, மக்களின் ஆசீர்வாதத்துடன், பாரதிய ஜனதா கட்சி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைப்பார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, வேட்பாளர்கள் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில்  வாழ்த்தியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top