தென்காசியில் ஜான்பாண்டியனுக்கு ஆதரவாக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பரப்புரை!

தென்காசியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஜான்பாண்டியனுக்கு தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று (ஏப்ரல் 16) தேர்தல் பரப்புரை செய்து தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

தமிழகத்தில் நாளை மறுநாள் (ஏப்ரல் 19)தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மீண்டும் மூன்றாவது முறையாக நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமையும் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. இருந்தபோதிலும் 400 தொகுதிகளுக்கு மேல் இந்த முறை வெற்றிப்பெற வேண்டும். அதற்காக பாஜக தலைவர்கள், தொண்டர்கள், நிர்வாகிகள் தீவிர களப்பணி ஆற்றி வருகின்றனர்.

அந்த வகையில், இன்று தமிழகத்தில் பரப்புரை மேற்கொண்டிருக்கும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தென்காசி தொகுதியில் ஜான்பாண்டியனுக்கு ஆதரவாக திறந்த வாகனத்தில் சென்று தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

இது தொடர்பாக தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான்பாண்டியன் தனது எக்ஸ் வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:

பாஜக தேசிய தலைவர் திரு.ஜே.பி.நட்டா அவர்கள் தென்காசி பாராளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் ஜான்பாண்டியன் அவர்களை ஆதரித்து தென்காசியில் பரப்புரை செய்தார் எனக்குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top