தி.மு.க.வின் தவறான ஆட்சியால் மக்கள் விரக்தியடைந்து விட்டனர்: பிரதமர் மோடி!

நமோ செயலி மூலம் இன்று மாலை 5 மணிக்கு “எனது பூத் வலிமையான பூத்” என்ற தலைப்பில் தமிழக பா.ஜ.க. தொண்டர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி ‛எக்ஸ்’ வலைத்தளப்பதிவில் கூறியுள்ளதாவது:-

இன்று மாலை 5 மணிக்கு நமோ செயலி ஆப் வாயிலாக எங்களின் கடின உழைப்பாளிகளாக விளங்கும் தமிழக பாஜக தொண்டர்களுடனான ‘எனது பூத் வலிமையான பூத்’ உரையாடலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

தமிழ்நாட்டில் உள்ள நமது தொண்டர்கள் நமது கட்சியின் நல்லாட்சி குறித்து மாநிலம் முழுவதும் திறம்பட பரப்பப்படுவதை உறுதி செய்வதும் மக்கள் மத்தியில் பணியாற்றுவதும்   பாராட்டுக்குரியது.

தி.மு.க.வின் தவறான ஆட்சியால் தமிழகம் விரக்தியடைந்து எங்கள் கட்சியை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்நோக்குகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top