பெண்களை மையப்படுத்தி மத்திய அரசு திட்டங்கள்! பிரதமர் மோடி பேச்சு!

பெண்களை மையப்படுத்தி மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என தமிழக பாஜக தொண்டர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடிய போது பிரதமர் மோடி கூறினார்.
தமிழக பாஜக நிர்வாகிகளுடன், ‛எனது  ஓட்டுச்சாவடி, வலிமையான ஓட்டுச்சாவடி’ என்ற நிகழ்ச்சி வாயிலாக நமோ செயலி மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:

தமிழக மக்கள் எனக்கு அளித்த வரவேற்பை பார்த்து வியந்து போனேன். நமோ செயலி வாயிலாக தொண்டர்களை சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களின் உழைப்பால் கட்சி வளர்ந்து வருகிறது. தொண்டர்களுடன் கலந்துரையாடும் போது பூத் கமிட்டி அளவில் எண்ணங்களை அறிய முடிகிறது. ஒவ்வொரு தொண்டரும் எவ்வளவு பணியாற்றுகிறீர்கள் என்பதை தெரிந்து கொண்டேன். பெண்களை மையப்படுத்தி மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தமிழகம் வரும்போது வணக்கம் சொல்லி பேச்சை தொடங்குகிறேன். ஆனால் இன்று நான் சொல்லும் வணக்கம் வித்தியாசமானது. ஒரு தொழிலாளி மற்றொரு தொழிலாளிக்கு சொல்லும் வித்தியாசமான வணக்கம் இது.

உங்களைப்போலவே வாழ்க்கையின் பெரும் பகுதியை பாஜக தொண்டனாக கழித்திருக்கிறேன். கடின உழைப்பு நம் அனைவரையும் வளர்ச்சிக்கு அழைத்து செல்லும் என்றார்.

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில் அரசு கவனம் செலுத்துவதைக் குறிப்பிட்ட மோடி, பெண்களால் அதிகம் விரும்பப்படும் மற்றும் பேசப்படும் திட்டங்களை பெண் தொண்டரிடம் தெரிந்து கொள்ள முயன்றார். கட்சித் தொண்டர்கள் அடிமட்ட அளவில் பணியாற்றி வருவதாகவும் பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.

தமிழகத்தில் பாஜக , ஆட்சியை புரட்டிப் போடப் போவதாக அனைத்து அரசியல் கருத்துக்கணிப்புககளும் தெரிவிக்கின்றன என்றும், ஆளும் கட்சி மீதான கோபம் தேர்தலின் போது வெளிப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

மேலும் இந்த கலந்துரையாடலில், ஓட்டுச்சாவடியில் மத்திய அரசின் எந்த திட்டம் மக்களுக்கு சென்றடைந்துள்ளது என்பது குறித்தும் பூத் நிலவரம் குறித்தும் கேட்டறிந்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top