நீலகிரியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் இறுதிக் கட்ட தேர்தல் பிரச்சாரம்!

நீலகிரி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான எல்.முருகன் இன்று (ஏப்ரல் 17) இறுதி கட்ட வாகனப் பேரணி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். நூற்றுக்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து சென்ற நிலையில் திறந்த வாகனத்தில் பொதுமக்களிடம் எல்.முருகன் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று கோவை மாவட்டம் அன்னூரில் இருந்து உதகை வரை நீலகிரி நாடாளுமன்ற வேட்பாளரும்,மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் கட்சி தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இருசக்கர வாகனப் பேரணி நடத்தி வருகிறார்.

தொண்டர்கள் இருசக்கர வாகனத்தில் செல்ல வேட்பாளரான எல்.முருகன் திறந்த வாகனத்தில் கை அசைத்தவாறு பொதுமக்களிடம் தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார்.

அன்னூர் பேருந்து நிலையம் பகுதியில் இருந்து தொடங்கி மேட்டுப்பாளையம் சாலை வழியாக காரமடை மற்றும் மேட்டுப்பாளையம் நகரம் போன்ற பகுதிகளில் இந்த இருசக்கர வாகன பேரணியானது நடைபெற்று வருகிறது.

அதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையம் நிர்வாகிகள் இருசக்கர வாகனத்தில் நீலகிரி மாவட்ட எல்லை வரை சென்று வழி அனுப்பினர். பின்னர் நீலகிரி பாஜக தொண்டர்கள் அவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

இறுதியாக உதகையில் இந்த இருசக்கர வாகன பிரச்சாரமானது மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top