பொது இடங்களில் கவனமுடன் பேச ராகுலுக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை!

பொது இடங்களில் பேசும்போது அநாகரிகமான சொற்களை பயன்படுத்த கூடாது, கவனமுடன் பேச வேண்டும் என ராகுலுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மக்களால் நிராகரிக்கப்பட்டதால் காங்கிரஸ் கட்சியில் உள்ள ஒரு சிலர் மிகவும் அநாகரிகமான முறையில் பாஜக தலைவர்களை பேசி வருகின்றனர். அந்த வகையில் அரசியல் முதிர்ச்சியற்றவராக ராகுல் உள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பரில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல், பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்களை ‘பிக்பாக்கெட்’ எனக் குறிப்பிட்டு விமர்சித்திருந்தார். இதனை எதிர்த்து ராகுலுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ராகுல் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் அறிவுறுத்தியது.

அதன்படி பொது இடங்களில் பேசும்போது அநாகரிகமான சொற்களை பயன்படுத்த கூடாது. அதிக கவனமுடன் பேச வேண்டும் என ராகுலுக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top