தஞ்சாவூர்: மத்திய அரசின் நலத்திட்ட பயனாளிகளிடம் பிரதமர் மோடி கலந்துரையாடல்: மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்பு!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள வலையப்பேட்டை கிராமத்தில் மத்திய அரசின் நலத்திட்டம் பெற்ற பயனாளிகளிடம் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.

இது தொடர்பாக அண்ணாமலை கூறியிருப்பதாவது:

வளர்ச்சியடைந்த பாரதமே நமது லட்சியம் என்ற நோக்கோடு, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் முன்னெடுத்திருக்கும் விக்சித் பாரத் சங்கல்ப யாத்திரையின் ஒரு பகுதியாக, மத்திய அரசு நலத்திட்டங்களின் பயனாளிகளோடு இன்றைய தினம், மாண்புமிகு பிரதமர் அவர்கள் நேரடியாக உரையாடினார்.

ஒவ்வொருவருக்கும் மருத்துவ வசதிகளை உறுதி செய்யும் ஆயுஷ்மான் பாரத் திட்டம், ஒவ்வொரு வீட்டுக்கும் குழாயில் குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டம், இலவச சமையல் எரிவாயு இணைப்பு, வீடற்றவர்களுக்கு பிரதமரின் வீடு வழங்கும் திட்டம், ஒவ்வொரு வீட்டுக்கும் கழிப்பறை வசதி என, ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை முற்றிலுமாக உயர்த்தியுள்ள மத்திய அரசின் நூற்றுக்கும் மேற்பட்ட திட்டங்களின் பயனாளிகள், நாடு முழுவதுமிருந்து இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள வலையப்பேட்டை கிராமத்தில், பயனாளிகள், பொதுமக்கள், தஞ்சை வடக்கு மாவட்டத் தலைவர் திரு சதீஷ் மற்றும் பாஜக சகோதர, சகோதரிகளுடன் இணைந்து, மாண்புமிகு பாரதப் பிரதமர் உரையைக் கேட்டு மகிழ்ந்தோம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top