ராஜராஜ சோழனின் 1038-வது சதய விழா: அண்ணாமலை பெருமிதம்!

தஞ்சாவூர் பெரிய கோவிலில் இன்று (அக்டோபர் 25) கொண்டாடப்படும் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1038வது சதய விழா வெகு சிறப்பாக நடந்தேற தமிழக பாஜக சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: இன்று தஞ்சாவூர் பெரிய கோவிலில் கொண்டாடப்படும் மாமன்னர் ராஜராஜ சோழன் அவர்களது சதய விழா வெகு சிறப்பாக நடந்தேற, தமிழக பாஜக சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சோழ மரபின் பொற்காலமான மாமன்னர் ராஜராஜ சோழன் ஆட்சியில், மக்கள் நலன், நுண்கலை, கட்டிடக்கலை, விவசாயம் என அனைத்துத் துறைகளும் சிறந்து விளங்கியது. காலாட்படை, குதிரைப்படை, யானை படை, மற்றும் வலிமையான கப்பற்படையும் உடையவராக விளங்கினார். உலகின் பல பகுதிகளையும் சோழர் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தவர்.

ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் அனைவரும் மகிழ்வுடன் கொண்டாடி வரும் சதய விழா, மாமன்னர் ராஜராஜ சோழன் புகழைக் கூறும். அனைவரும் மகிழ்வுடன் சதய விழா கொண்டாட மனமார்ந்த வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top