மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தி வழங்க பிரதமர் மோடி உத்தரவு!

மத்திய அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான, அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி வழங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த ஜூலை 1ம் தேதி முதல் முன் தேதியிட்டு இது வழங்கப்பட உள்ளது. ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று (அக்டோபர் 18) நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் பற்றி மத்திய செய்தி, ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளதாவது:

மத்திய அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி 42 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 46 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இது ஜூலை 1ம் தேதியில் இருந்து முன் கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.

இதன் மூலமாக 48.67 லட்சம் ஊழியர்கள் மற்றும் 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவர். இதனால் ஆண்டுக்கு 12 ஆயிரத்து 857 கோடி ரூபாயை மத்திய அரசு கூடுதலாக செலவிட உள்ளது. ரயில்வே 2022 – 2023 நிதியாண்டில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. 650 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். மேலும் 1.50 லட்சம் கோடி கிலோ எடையுள்ள சரக்குகளை கையாண்டுள்ளது. இதையடுத்து பணித் திறனுக்கேற்ப 78 நாட்கள் போனஸ் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top