காஸா மருத்துவமனை தாக்குதல் சம்பவம்: பிரதமர் மோடி கவலை!

காஸா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

காஸாவில் உள்ள அல் அஹ்லிமருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல், அதில் ஏராளமானோர் உயிரிழந்ததை அறிந்து நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இந்த துயரத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்திக் கிறேன்.

இஸ்ரேல், ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே நடந்து கொண்டிருக்கும் இந்த மோதலில் தொடர்ச்சியாக பொதுமக்கள் உயிரிழப்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாக உள்ளது. மருத்துவமனை மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு சம்பந்தப்பட்டவர்களே  பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மருத்துவமனை மீதான தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார். “காஸாவின் அல் அஹில் மருத்துவமனையைத் தாக்கிய ஏவுகணை குண்டு வெடிப்புக்கு இஸ்லாமிய ஜிஹாத் (ஹமாஸ்) பயங்கரவாத அமைப்புதான் பொறுப்பு எனக் குறிப்பிட்டிருந்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top