சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் உருவாக்கிய அக்னிபான் ராக்கெட் விரைவில் விண்ணில் ஏவப்படுகிறது!

சென்னை ஐஐடி மாணவர்களால் உருவாக்கப்பட்ட நிறுவனமான,  அக்னிகுல ஸ்டார்ட் அப் நிறுவனம் 3டி பிரிண்டிங் முறையிலான ‘அக்னிபான’ என்ற ராக்கெட்டை உருவாக்கியுள்ளது.

பெரிய அளவிலான செயற்கை கோள்களை இஸ்ரோ மூலம்  அனுப்பி வருவது போல அக்னிபான் ராக்கெட் மூலம் 30 கிலோ முதல் 300 கிலோ வரையிலான சிறிய அளவிலான செயற்கை கோள்களையும் விண்ணில் ஏவ முடியும்.

இவ்வகை செயற்கை கோள்களை விண்ணில் 500 முதல் 700 கிலோ மீட்டர் தொலைவில் பூமியின் கீழ் புவி வட்டப் பாதையில் நிலை நிறுத்தவும் முடியும். இதனால் குறைந்த செலவில் செயற்கைக் கோள்களை ஏவலாம். இதற்கான ராக்கெட் ஏவுதளம் (அக்னிகுல) இஸ்ரோவில் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த ராக்கெட்டின் இரண்டு பாகங்கள் தயார் செய்யப்பட்டு பரிசோதனைகள் முடிக்கப்பட்டது.

இந்த நிலையில் முதல் பாகம் 3டி பிரிண்டிங் முறையில் தயார் செய்யப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையை தளமாக கொண்ட ராக்கெட் ஸ்டார்ட் அப் அக்னி குல காஸ்மோஸ் நிறுவனம், ஆந்திராவின் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள தனது ஏவு தளத்தில் அதன் தொழில்நுட்ப சோதனையின் ஒரு பகுதியாக ராக்கெட்டை ஒருங்கிணைக்கும் செயல் முறையை தொடங்கியுள்ளது.

இதனால் அக்னிபான் ராக்கெட் விரைவில் விண்ணில் ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top