சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் உண்டியல் கள்ளச்சாவி போட்டு திறப்பு!

சேலத்தில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவில் உண்டியலை கள்ளச்சாவி போட்டு திறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாநகரில், பழைய பேருந்து நிலையம் அருகே கோட்டை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் ஆங்காங்கே உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியலை திறப்பதற்கு இரண்டு சாவிகள் உண்டு. அறங்காவலர் குழு தலைவரிடம் ஒன்றும், கோவில் ஆய்வாளரிடம் மற்றொன்றும் இருக்கும்.

கோவில் உண்டியலை அறங்காவலர் குழுவினர், அறநிலையத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் முன்னிலையில் மட்டுமே திறக்க வேண்டும். 

இந்த நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் இல்லாமல் கோவில் உண்டியலுக்கு கள்ளச்சாவி தயாரிக்கும் பணி நேற்று (ஆகஸ்ட் 24) நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. 

விடியல் ஆட்சியில் இந்து அறநிலையத்துறையின் கீழ் கோவில் பாதுகாப்பாக இருப்பதே கேள்விக்குறியாக உள்ளது.  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top