மோடியே பிரதமராக தொடர மக்கள் விரும்புகின்றனர்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

மோடியே பிரதமர் பதவியில் தொடர மக்கள் விரும்புவதாக பெங்களூருவில் வரிசையில் நின்று வாக்களித்தபின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் 14 தொகுதிகளில் இன்று (ஏப்ரல் 26) மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக வாக்காளர்கள் காலை 7 மணியில் இருந்தே ஆர்வமுடன் வாக்களித்தனர். இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெங்களூருவில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று மக்களோடு, மக்களாக தனது வாக்கை பதிவு செய்தார்.

வாக்களித்த பிறகு நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

மோடியே பிரதமர் பதவியில் தொடர மக்கள் விரும்புகின்றனர். இன்னும் ஏராளமான மக்கள் வாக்குசாவடிக்கு வந்து தங்களது வாக்கினை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நிலையான ஆட்சி, சிறந்த கொள்கைகள், சிறந்த நிர்வாகம் மற்றும் வளர்ச்சியை மக்கள் விரும்புகின்றனர்.

1968க்கு முன்பாக காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மக்கள் சம்பாதித்ததில் 90 சதவீதத்தை வரியாக செலுத்தினார்கள். அதெல்லாம் இன்றைய தலைமுறையினருக்கு தெரியாது. இப்போது மீண்டும் காங்கிரஸ்ஆட்சிக்கு வந்தால் மீண்டும் அதே நிலைக்கு திரும்புவோம்.

வாரிசுரிமை வரியானது நடுத்தர மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்களை நேரடியாக பாதிக்கும். இந்தியாவை முன்னோக்கிசெலுத்துவது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது போன்ற எதையும் பேசாமல், பிரதமர் மோடியை காங்கிரஸ் தொடர்ந்து தனிப்பட்ட முறையில் தாக்கி பேசி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top