நாளை வெளியாகிறது நாடாளுமன்ற தேர்தல் தேதி : தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

நாடாளுமன்ற தேர்தல் தேதி நாளை (மார்ச் 16) மாலை 3 மணிக்கு அறிவிக்கப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மக்களவையின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. இதனால், ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், மக்களவை மற்றும் சில மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி நாளை மதியம் 3 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு நேரலை செய்யப்பட உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top