மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி : தேசிய ஜனநாயக கூட்டணிக்கு378 இடங்கள் கிடைக்கும் : புதிய கருத்துக்கணிப்பில் தகவல்!

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 378 இடங்களில் வெற்றிப்பெற்று மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பார் என இந்தியா, சி.என்.எக்ஸ் தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

பா.ஜ.க., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தமுள்ள 543 இடங்களில் 378 இடங்களில் வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், புள்ளி வச்ச இ.ண்.டி. கூட்டணிக்கு 98 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்பது கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

பிப்ரவரி 5 முதல் 23 வரை 543 பாராளுமன்ற தொகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பா.ஜ.க. கடந்த பாராளுமன்ற தேர்தலைக் காட்டிலும் இப்போது நடைபெறும் தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ல் பா.ஜ.க. 303 இடங்களில் வெற்றி பெற்றது. 2024 தேர்தலில் இந்த எண்ணிக்கை 335-ஆக அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, குஜராத் (26), மத்திய பிரதேசம் (29), ராஜஸ்தான் (25), அரியானா (10), டெல்லி (7), உத்தரகாண்ட் (5), இமாச்சல பிரதேசம் (4) ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்து மக்களவை தொகுதிகளையும் பாஜகவே கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகாரில் 40 தொகுதிகளில் 17 இடங்களையும், ஜார்க்கண்டில் 14-ல் 12 தொகுதிகளிலும், ஒடிசாவில் 21-ல் 10 இடங்களிலும் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க., ஆளும் கட்சியாக உள்ள அசாமில் 14 தொகுதிகளில் 10 இடங்கள் கிடைக்கும். மகாராஷ்டிராவில் 48-ல் 25 தொகுதிகளையும், மேற்கு வங்கத்தில் 42-ல் 20 தொகுதிகளையும் பா.ஜ.க. கைப்பற்றும். திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 21 இடங்களைப் பெறும் என்று இந்தியா டி.வி- சி.என்.எக்ஸ் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த கருத்துக்கணிப்பை தாண்டி பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என பாஜக தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை நம்பிக்கையுடன் தெரிவித்து வருகின்றனர். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top