அபுதாபியில் ஹிந்து கோயில் திறப்பு : பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க அழைப்பு!

அபுதாபியில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ள ஹிந்து கோயில் திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை கோயில் நிர்வாகிகள் பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினர்.

ஐக்கிய அமீரக எமிரேட்சின் அபுதாபியில் பாப்ஸ் அமைப்பு சார்பில் மிக பிரமாண்டமான முறையில் ஹிந்து கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவில் 2024 பிப்ரவரி மாதம் திறக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், கோவில் நிர்வாகிகள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பிதழ் வழங்கினர். அதனை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.

முன்னதாக கோவில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் கோவிலுக்கான இடத்தை வழங்கிய அமீரக அரசுக்கு ஏற்கனவே நன்றி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top