மிக்ஜாம் புயல்: மக்களுக்கு தேவையான உதவிகளை பிரதமர் மோடி அரசு வழங்கும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

மிக்ஜாம் புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாக்க பிரதமர் மோடியின் அரசு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும் என முதல்வர் ஸ்டாலினிடம் உறுதி அளித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் அவர் நேற்று (டிசம்பர் 4) பதிவிட்டுள்ள செய்தியில்;

“தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி ஆகியோரிடம் பேசினேன். மிக்ஜாம் புயலால் ஏற்பட்டுள்ள சவாலான சூழலை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தேன். மக்களை பாதுகாக்க பிரதமர் மோடியின் அரசு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும் என உறுதியளித்தேன். ஏற்கனவே தேசிய மீட்பு படையினர் போதுமான எண்ணிக்கையில் அங்கே முகாமிட்டுள்ளனர். கூடுதல் படையினரும் தயார் நிலையில் உள்ளனர்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழில் பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top