இந்தியாவுடன் மீண்டும் இணைய விரும்புகிறாரா கனடா பிரதமர்: ஹிந்துக்களுக்கு நவராத்திரி வாழ்த்து!

கனடா – இந்தியா இடையே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் ஹிந்துக்கள் பண்டிகையான நவராத்திரிக்கு கனடா பிரதமர் வாழ்த்து கூறியுள்ளார்.

வட அமெரிக்க நாடான கனடாவில், கடந்த ஜூன் மாதத்தில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில், இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதனை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது. இதன் காரணமாக இருநாட்டின் உறவில் விரிசல் ஏற்பட்டது.

இந்த நிலையில், ஹிந்துக்கள் கொண்டாடும் நவராத்திரி பண்டிகைக்கு கனடா பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட பதிவில், ‘‘இந்திய சமூகத்தினருக்கும் நவராத்திரி திருவிழா கொண்டாடும் அனைவருக்கும் எனது நவராத்திரி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஹிந்து மத நம்பிக்கையில் புனிதமான ஒரு பண்டிகையாக நவராத்திரி கருதப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

கனடாவில் குறிப்பிட்ட அளவிற்கு இந்தியர்கள் வசிப்பதால் நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைகளுக்கு கனடா அரசு வாழ்த்து சொல்வதை வழக்கமாக கொண்டிருந்தாலும், இரு நாட்டுக்கு இடையிலான பிரச்னைக்கு மத்தியில் சொல்லப்பட்ட இந்த வாழ்த்து முக்கியமாக பார்க்கப்படுகிறது.

விபரீதம் புரியாமல் இந்தியா மீது வீண்பழி சுமத்தியதால் கனடாவிலேயே ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் எப்படியாவது மீண்டும் இந்தியாவுடன் நட்பை தொடர வேண்டும் என ஜஸ்டின் ட்ரூடோ முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ஹிந்துக்களுக்கு வாழ்த்து சொல்வதன் மூலம் இரு நாட்டு விரிசலை சரிசெய்ய ட்ரூடோ முயற்சிப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top