தற்காலிக ஆசிரியர்களுக்கு சம்பளம் தராமல் இழுத்தடிக்கும் விடியல் அரசு!

தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 37,554 அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதில் 52.75 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு 2.24 லட்சம் ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். இதற்கிடையே அரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை சமாளிப்பதற்காக தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக் கொள்வதற்கு பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கியது.

அதன்படி நடப்பு கல்வியாண்டில் (2023-24) அரசுப் பள்ளிகளில் இருந்த ஆசிரியர் காலிப் பணியிடங்கள் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிகமாக அடிப்படையில் நிரப்பப்பட்டுள்ளன. ஆனால் அந்த  ஆசிரியர்களுக்கு ஊதியம் முறையாக தரப்படுவதில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது பற்றி  பெயர் கூற விரும்பாத ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: ‘அரசுப் பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் சரியாக வழங்கப்படுவதில்லை. 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒருமுறைதான் வழங்கப்படுகிறது. இதனால் இந்த வேலையை நம்பியுள்ள பட்டதாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. பள்ளிக்கு செல்வதற்கான போக்குவரத்துக்குகூட கடன் வாங்கிச் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே ஊதியத்தை மாதம், மாதம் சரியாக வழங்கினால் நன்றாக இருக்கும். கடந்த ஆண்டை போன்று தற்போதும் தாமதமாக ஊதியம் வழங்கி வருகின்றனர். கோடைக்காலம் முடிந்து பள்ளிகள் திறந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகப் போகின்றன, இன்னும் ஊதியம் வழங்கப்படவில்லை. இந்த அரசு இப்போதாவது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top