மீனவர்களை தாக்கியவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுங்கள்; அண்ணாமலை கடிதம்

நேற்று நாகப்பட்டினத்தை சேர்ந்த திருமுருகன் உள்ளிட்ட 6 மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இலங்கையில் இருந்து படகுகளில் வந்த கொள்ளையர்கள் சிலர், நாகை மீனவர்களை தாக்கியதுடன், திருமுருகன் என்பவரின் விரல்களையும் வெட்டியுள்ளனர். மேலும் படகுகளில் வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களையும் எடுத்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் இந்த அராஜக செயலில் ஈடுபட்ட இலங்கை கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு, இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்க இலங்கை அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார். மேலும் மீனவர்கள் உடைமைகளை மீட்டுத் தர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top