காமராஜர் குறித்து பேச திமுகவுக்கு அருகதை இல்லை – நாடார் பேரவை தலைவர் கண்டனம்

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் கலை பண்பாட்டு இயக்கம் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழா, இசை சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தி.மு.கவின் 2 ஜி புகழ் ஆ. ராசா ” காமராஜருக்கு பல பெருமைகள் இருந்தாலும், அவர் தமிழ்நாடு என்ற பெயரை சொல்லவில்லை. அவருக்கு வீழ்ச்சி துவங்கியது. இன்று சிலர் சொல்ல மறுக்கிறார்கள் அவர்களுக்கும் வீழ்ச்சி துவங்கியுள்ளது என எப்போதும் போல் தனது உளறலை வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு நாடார் பேரவை தலைவர் என். ஆர். தனபாலன் கடும் கண்டனத்தை பதிவுசெய்துள்ளார்.

சென்னையிலுள்ள நாடார் சங்க நிர்வாகிகள் கூட்டம் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் ன்.ஆர்.தனபாலன் தலைமையில் அசோக்நகர் என்.ஆர்.டி.டவரில் நடந்தது. அதில், பெருந்தலைவர் காமராஜர் குறித்து தவறாக பேசிய தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘பெருந்தலைவர் காமராஜர் பற்றி பேசுவதற்கு இன்றைய தி.மு.க. நிர்வாகிகள் யாருக்கும் தகுதியோ, அருகதையோ இல்லை என்பதால் காமராஜர் பற்றி பேசுவதை தி.மு.க. நிர்வாகிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும். பொய்யான தகவல்களை பொது மேடைகளில் பேசி அதை மெய்யாக்கி முந்தைய வரலாற்றை மாற்றிதாங்கள்தான் உத்தமர்கள் என்ற  மாயையை பரப்பும் தி.மு.கவினரின் முகமூடியை கிழித்தெறிய வேண்டும் என அனைத்து கட்சியினரையும் கேட்டுக்கொள்கிறோம்.

காமராஜர்பற்றி பொய்யான கருத்துக்களை பரப்பிவரும் ஆ. ராசா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். தவறும் பட்சத்தில் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் அவருக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டமும் நடத்துவோம். தொடர்ந்து, கர்மவீரர் காமராஜரின் வரலாற்றை திரித்து தவறுதலாக பேசி வரும் தி.மு.க நிர்வாகிகள் மீது அதிருப்தி கொண்டுள்ள பெருந்தலைவர் தொண்டர்களும், பக்தர்களும் ஒருபோதும் தி.மு.கவை மன்னிக்க மாட்டார்கள். தமிழகம் முழுவதும் தி.மு.கவிற்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்படும்’ என்று இந்த கூட்டத்தில் தீர்மானம் முன்மொழியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஹிந்துக்களை வேசி மகன் என்று திமுகவின் ஆ. ராசா இழிவுபடுத்தியதும், செல்லும் இடமெல்லாம் ஹிந்து தெய்வங்களை நிந்திப்பதும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. தற்போது, கர்மவீரர் காமராஜர் குறித்த பேச்சும் மக்களிடையே திமுக மீது பெரும் கோவத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top