அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீரை பெருக்குவது அவசியம் – பிரதமர் மோடி !

தண்ணீர் குறித்த முதலாவது அகில இந்திய மாநில அமைச்சர்களின் மாநாட்டில் காணொளிக் காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (05.01.23) உரையாற்றினார்.

தண்ணீர் தொலைநோக்கு @ 2047 என்பது இம்மாநாட்டின் கருப்பொருளாகும். நீடித்த வளர்ச்சி மற்றும் மனித வளர்ச்சிக்காக நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பது குறித்த வழிவகைகளை விவாதிக்க முக்கியக் கொள்கை இயற்றுவோரை ஒருங்கிணைப்பது இம்மாநாட்டின் நோக்கமாகும்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், தண்ணீர் பாதுகாப்புக்காக இந்தியா மேற்கொண்டுள்ள அளப்பரிய பங்களிப்பு குறித்து பேசி, நாட்டின் நீர் வளத்துறை அமைச்சர்களின் முதலாவது அகில இந்திய மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.

நமது அரசியலமைப்பில், தண்ணீர் என்ற பொருள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது, நாட்டின் கூட்டு இலக்குகளை அடைய மாநில அரசுகளின் நீர் பாதுகாப்புக்கான முயற்சிகள் பெரிதும் உதவும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

“அடுத்த 25 ஆண்டுகளுக்கான அமிர்தப் பெருவிழாவின் பயணத்தின் முக்கியமான பரிமாணமாக தண்ணீர் தொலைநோக்கு @2047 உள்ளது”.
முழு அரசு’ மற்றும் ‘முழு நாடு’ என்ற தனது தொலைநோக்கை வலியுறுத்திய பிரதமர், நீர் வள அமைச்சகம், பாசன அமைச்சகம், வேளாண் அமைச்சகம், ஊரக, நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சகம் போன்ற மாநில அரசுகளின் பல்வேறு அமைச்சகங்களுக்கு இடையேயான உரையாடல் அமையும் விதத்தில் அனைத்து மாநிலங்களும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

.இந்தத் துறைகள் ஒன்றுக்கொன்று தொடர்புடைய தகவல்களும், தரவுகளும் இருந்தால் திட்டமிடலுக்கு உதவி கிடைக்கும். அரசின் முயற்சியால் மட்டும் வெற்றி கிடைக்காது என்று குறிப்பிட்ட பிரதமர், பொது மற்றும் சமூக அமைப்புகள் மற்றும் சிவில் சமூகங்களின் பங்கு குறித்து தெரிவித்ததுடன், நீர் பாதுகாப்பு தொடர்பான இயக்கங்களில் அதிகளவில் பங்கேற்வேண்டும். பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதன் மூலம் அரசின் பொறுப்புடைமையை குறைக்காது
என்றும், அனைத்துப் பொறுப்புகளையும் மக்கள் மீது விதிப்பது அர்த்தமல்ல. மேலும், இயக்கத்தில் ஈடுபடும் முயற்சிகள் மற்றும் செலவிடப்படும் பணம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதே பொதுமக்களின் பங்கேற்பின் மிகப்பெரிய நன்மையாகும். “பொதுமக்கள் ஒரு இயக்கத்தில் இணைந்து செயல்படும் போது, அவர்கள் அந்தப்பணியின் தீவிரத்தன்மையையும் அறிந்து கொள்கிறார்கள். இதன் காரணமாக, எந்தவொரு திட்டத்திற்கும் அல்லது இயக்கத்திற்கும் பொதுமக்களிடையே உரிமை என்ற உணர்வு ஏற்படுகிறது. “மக்கள் தூய்மை இந்தியா இயக்கத்தில் இணைந்த போது, மக்களிடையே ஓர் உணர்வு ஏற்படுவதாகவும், இந்திய மக்களின் முயற்சிகளுக்குப் பாராட்டு. அசுத்தங்களை களைவதற்கான ஆதாரங்களை சேகரிப்பது, பல்வேறு நீர்
சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டுவது அல்லது கழிப்பறைகள் கட்டுவது என பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்தது. ஆனால் அசுத்தம் எங்கேயும் இல்லை என்று மக்கள் முடிவு செய்தபோது இந்த இயக்கத்தின் வெற்றி உறுதிசெய்யப்பட்டது. “நீர் விழிப்புணர்வு விழாக்கள் அல்லது’ நீர் விழிப்புணர்வு தொடர்பான நிகழ்ச்சிகள் உள்ளூர் அளவில் நாம் ஏற்பாடு செய்ய முடியும். பள்ளிகளில் பாடத்திட்டம் முதல் செயல்பாடுகள் வரை புதுமையான வழிகள் மூலம் இளைய
லைமுறையினருக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 அமிர்த நீர்நிலைகள் கட்டப்பட்டு வருவகிறது, அதில் இதுவரை 25 ஆயிரம் அமிர்த நீர்நிலைகள் கட்டப்பட்டுள்ளது. தொழில்நுட்பம், தொழில்துறை மற்றும் ஸ்டார்ட்அப்களை இணைக்க வேண்டும்.

ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீரை வழங்குவதற்கான ஒரு மாநிலத்தின் முக்கிய வளர்ச்சி அளவுகோலாக நீர் வள இயக்கம் இருப்பது மிகப்பெரிய வெற்றி. பல மாநிலங்கள் இந்த திசையில் முன்னேறி வரும் நிலையில் பல மாநிலங்கள் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. இந்த அமைப்பு நடைமுறைக்கு வந்தவுடன், எதிர்காலத்திலும் அதன் பராமரிப்பை உறுதி செய்ய வேண்டும். மேலும், தண்ணீரின் தரத்தை உறுதி செய்வதற்காக அவ்வப்போது தண்ணீர் பரிசோதனை செய்யும்
முறையும் உருவாக்கப்பட வேண்டும். “ஒரு துளி அதிகப் பயிர்” என்ற இயக்கத்தின் கீழ் நாட்டில் 70 லட்சம் ஹெக்டேருக்கும் மேலான நிலப்பரப்பு நுண்ணீர் பாசனத்தின் கீழ் இதுவரை கொண்டுவரப்பட்டுள்ளது”. நுண்ணீர் பாசனம் அனைத்து மாநிலங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். அடல் நிலத்தடி நீர் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம், அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீரை பெருக்குவதற்கு பெரிய அளவில் பணிகளை மேற்கொள்வது அவசியமாகிறது. மேலும் மலைப்பாங்கான பகுதிகளில் நீரூற்றுகளை புதுப்பிக்க, வளர்ச்சிப் பணிகளை விரைவுபடுத்த வேண்டியது அவசியம். கிராமங்களில் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு அதற்கான நிதியை பஞ்சாயத்து அளவில் ஏற்படுத்த வேண்டும். அதற்கான பணிகள் நடைபெறுவது குறித்த வழிவகைகளை காண வேண்டும். மழைநீர் சேகரிப்பு போன்ற இயக்கங்கள் மாநில அரசுகளுக்கு அவசியம். அவை ஆண்டு தோறும் மதிப்பிடப்பட வேண்டும். மழைக்காக காத்திருக்காமல், மழைக்கு முன்பாக திட்டப்பணிகளும் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியம். “தூய்மை கங்கை இயக்கத்தை எடுத்துக்காட்டாகக் கொண்டு மற்ற மாநிலங்களும் ஆறுகளின் பாதுகாப்புக்காக அதே போன்ற இயக்கங்களை தொடங்க முடியும்”. தண்ணீர் துறையில் ஒத்துழைத்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அனைத்து மாநில அரசுகளின் பொறுப்பு” என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார். தண்ணீர் குறித்து முதலாவது அகில இந்திய மாநில அமைச்சர்கள் ஆண்டு மாநாட்டில் அனைத்து மாநிலங்களின் நீர்வள அமைச்சர்களும் பங்கேற்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top