பொய்யை பரப்பும் பிபிசி, 300-க்கும் மேற்பட்ட பிரபலங்கள் கடும் எதிர்ப்பு !

பிரதமர் மோடி குறித்து திட்டமிட்டு வன்மத்தை பரப்பும் பிபிசி வெளியிட்ட ஆவணப் படத்துக்கு முன்னாள் நீதிபதிகள் உட்பட 300-க்கும் மேற்பட்ட பல்துறை பிரபலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், ‘பரவலாக பேசப்பட்ட செய்திகள்’, ‘நம்பத் தகுந்த வட்டாரங்கள்’ என்ற சொற்றொடர்களை அந்த ஆவணப்படத்தில்  பயன்படுத்திக் கூறியுள்ளனர்.

கலவரத்தில் அப்போதைய குஜராத் முதல்வர் மோடிக்கு எந்த தொடர்பும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் சந்தேகத்துக்கு இடமின்றி தீர்ப்பளித்துள்ளது.

இந்த ஆவணப் படம் எங்களது நாட்டின் தலைவருக்கு எதிராக உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது.

தேசப்பற்றுள்ள, ஒரு இந்திய குடிமகனால், வேண்டுமென்றே திரிக்கப்பட்டு வெளியிடப்படும் ஆவணப் படங்களை ஒருபோதும் ஏற்க முடியாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளனர். இந்த அறிக்கையில் ராஜஸ்தான் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அனில் தயோ சிங், உள்துறை முன்னாள் செயலர் எல்எஸ்.கோயல், ரா உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் சஞ்சீவ் திரிபாதி, தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ) முன்னாள் தலைவர் யோகேஷ் சந்தர் மோடி, உ.பி. முன்னாள் டிஜிபி ஓபி சிங் உட்பட முக்கிய பிரபலங்கள் கையெழுத்திட்டுள்ளனர். இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பிபிசியின் இந்த ஆவணப்படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இந்திய உச்ச நீதிமன்றம் பிரதமர் மோடிக்கும், கோத்ரா ரயில் சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை என தீர்ப்பு வழங்கி அந்த வழக்கினை முடித்துவைத்துள்ள நிலையில், இன்னொரு நாட்டு பிரதமரை, உலகம் போற்றும் மோடியை பிபிசி திட்டமிட்டு கலங்கப்படுத்தி வருவது ஏன் ? பின்னணியில் காங்கிரஸ் உள்ளதோ என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

கடந்த 2002ல் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கலவரமும், கலவரத்தைத் தொடர்ந்து அதற்கு மோடி மீது குற்றம் சுமத்தியதையும் உச்ச நீதிமன்றம் அனைத்து குற்றச் சாட்டுகளிலிருந்தும் மோடியை விடுவித்ததும் நாடறிந்த விஷயம். இந்தநிலையில் அக்கலவரம் பற்றியும், அந்த கலவரத்துக்கும் அப்போது முதல்வராக இருந்த பிரதமர் மோடிக்கும் தொடர்பு இருப்பது போன்றும் ‘இந்தியா – மோடி கொஸ்டியன்’ என்ற தலைப்பிலான பி.பி.சி தயாரித்த ஆவணப்படத்தில் கருத்துகள் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. இதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவின் 13 முன்னாள் நீதிபதிகள், 133 ஓய்வு பெற்ற தூதரக உயரதிகாரிகள், 156 ராணுவ உயரதிகாரிகள் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பிரபலங்கள் ஆவணப் படத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து அவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. பிரதமர் மோடி பற்றிய பிபிசி ஆவணப்படம் தவறான, பாரபட்சமானதாக உள்ளது. மேலும், இந்திய சுதந்திரத்தின் அடித்தளத்தையே கேள்விக்குறியாக்கும் ஆவணப்படமாக உள்ளது. இந்தியா மீதான பாரபட்சமான அணுகுமுறையை மீண்டும் வெளிப்படுத்துவதாக பிபிசி.யின் ஆவணப்படம் உள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top