Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • இந்தியா உலக வல்லரசாக மாறி வருகிறது : பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா
  • தமிழக அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக இயக்கியதன் விளைவாக அமலாக்கத்துறை சோதனை: அண்ணாமலை நாடு
  • தருமபுரி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.,க்கு மிரட்டல்: திமுக மாவட்ட பொறுப்பாளர் மீது பாஜக புகார் அரசியல்
  • 3 நாளில் பாகிஸ்தானை மண்டியிட வைத்த இந்திய ராணுவம்: ஜம்மு காஷ்மீர் ஆளுநர் இந்தியா
  • திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளது என்பதற்கு ஈசிஆர் சம்பவம் ஓர் உதாரணம் : தலைவர் அண்ணாமலை அரசியல்
  • கோவை சின்னியம்பாளையம் மாரியம்மன் கோவில் சேதம் : அண்ணாமலை கண்டனம் அரசியல்
  • சமூகத்துக்கு ஆர்எஸ்எஸ் செய்த பங்களிப்பு என்ன? லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் கலந்துரையாடலில் பிரதமர் மோடி விளக்கம் இந்தியா
  • டெல்லியில் 67 தொகுதிகளில் டெபாசிட் இழந்த காங்கிரஸ் இந்தியா

முருக பக்தர்களிடம் அத்துமீறிய போலீசார்: செய்தி சேகரித்த ஒரே நாடு பத்திரிகையாளர் செல்போனை பறித்த மதுரை கமிஷ்னர்

Posted on February 5, 2025 By admin No Comments on முருக பக்தர்களிடம் அத்துமீறிய போலீசார்: செய்தி சேகரித்த ஒரே நாடு பத்திரிகையாளர் செல்போனை பறித்த மதுரை கமிஷ்னர்

மதுரை திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்திற்கு நேற்று (பிப்ரவரி 04) வந்த முருக பக்தர்கள் மற்றும் பயணிகளை போலீசார் அராஜகமாக கைது செய்ய முயற்சித்தனர். இதனை ஒரே நாடு செய்தியாளர் தங்கவேல் வீடியோவாக பதிவு செய்தார். அங்கு ஆய்வுக்காக வந்த காவல் ஆணையர் லோகநாதன் செய்தியாளரின் செல்போனை பறித்து அராஜகத்தில் ஈடுபட்டார்.

திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்கவும், மீட்கவும் கோரி நேற்று இந்து விரோத திமுக அரசின் 144 தடையை மீறி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இந்துக்கள் ஒன்று திரண்டு மதுரைக்கு வரத்துவங்கினர். அதுபோன்று வருபவர்களை ரயில் நிலையத்திலேயே போலீசார் அராஜகமாக கைது செய்து வேனில் ஏற்றி அழைத்துச்சென்றனர்.

அதே போன்றுதான் நாகர்கோயிலில் இருந்து கோவைக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று 11:40 மணியளவில் திருப்பரங்குன்றம் ரயில் நிலையம் வந்தடைந்தது. அதில் ஏராளமான பயணிகள் மற்றும் முருக பக்தர்கள் இறங்கி செல்ல முற்பட்டனர்.

அப்போது ரயில் பயணிகளை விட அதிகளவிலான போலீசார் இரண்டு நடைமேடை பகுதிகளிலும் குவிக்கப்பட்டு வரும் பயணிகளை கைது செய்தனர். சிலர் ஏன் எங்களை கைது செய்கிறீர்கள் நாங்கள் என்ன தவறு செய்தோம் என்று போலீசாரிடம் கேள்வி எழுப்பினர். அப்போது அங்கு இருந்த சில போலீசார்கள் பயணிகளிடம் அராஜகமாக நடந்துக்கொண்டனர். இதனை ஒரே நாடு செய்தியாளர் தங்கவேல் செல்போனில் படம் எடுத்தார்.

அப்போது அங்கு ஆய்வுக்காக வந்த மதுரை காவல் ஆணையர் லோகநாதன் ஏன் வீடியோ எடுக்கிறீர்கள் என பத்திரிகையாளர்களிடம் கேள்வி எழுப்பினர். இதுப்பற்றிய செய்தி பொதுமக்கள் மத்தியில் தெரிந்தால் பிரச்சனை ஆகிவிடும் என்று ஒரே நாடு செய்தியாளர் தங்கவேல் அவர்களின் செல்போனை பிடுங்கிக்கொண்டார். அங்கு மற்ற பத்திரிகையாளர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். செய்தி சேகரிப்பது எங்கள் கடமை அதை தடுக்க போலீசாருக்கு உரிமை இல்லை என்று கூறினர். இதன் பின்னர் செல்போனை ஒப்படைத்த காவல் ஆணையர் லோகநாதன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் மட்டுமின்றி விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல் என பல்வேறு மாவட்டங்களில் உள்ள ரயில் நிலையங்களிலும் போலீசார் அத்துமீறி பயணிகளை கைது செய்துள்ளனர். ரயில் நிலையம் முழுவதும் ரயில்வே காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. எப்படி மாநில காவல்துறை ரயில் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து பயணிகளை கைது செய்யலாம். எனவே அத்துமீறிய காவல்துறையினர் மீது ரயில்வே காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தமிழ்நாடு Tags:#Bjp, #Oreynaadu, #Tamilnadu

Post navigation

Previous Post: திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் பிரதமர் மோடி
Next Post: முருக பக்தர்கள் மீது கை வைப்பதா? சேகர்பாபு, ரகுபதியை எச்சரித்த தலைவர் அண்ணாமலை

Related Posts

  • அரசு ரப்பர் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் அரசியல்
  • உள்துறை அமைச்சர் பற்றி அவதூறு பேச்சு: ராசா மீது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் புகார் தமிழ்நாடு
  • நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த நெல்லை மாணவர் தமிழ்நாடு
  • பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கமலாலயத்தில் அஞ்சலி தமிழ்நாடு
  • 22 லட்சம் மரங்களை நட்டு சாதனை: வனத்துக்குள் திருப்பூர் அமைப்புக்கு தலைவர் அண்ணாமலை பாராட்டு தமிழ்நாடு
  • சமூக வலைத்தளத்தில் அவதூறு பதிவு : சுந்தரவள்ளி மீது தருமபுரி எஸ்.பி., அலுவலகத்தில் பாஜக மகளிர் அணி புகார் தமிழ்நாடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, நிகிதாவுடன் தொடர்புபடுத்தி அவதூறு : பாஜக நிர்வாகி ராஜினி காவல்நிலையத்தில் புகார்
  • அஜித்குமார் கொலையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்: நயினார் நாகேந்திரன்
  • உள்துறை அமைச்சர் பற்றி அவதூறு பேச்சு: ராசா மீது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் புகார்
  • உலகின் வலிமைக்கு ஒரு நம்பிக்கை தூணாக இந்தியா உள்ளது : கானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பெருமிதம்
  • திருப்புவனத்தில் காவலர்களால் படுகொலை செய்யப்பட்ட இளைஞர்: பாஜக – அதிமுக இணைந்து ஆர்ப்பாட்டம்

Recent Comments

No comments to show.

Archives

  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • துரு புடிச்சு இத்துப்போன ஸ்டாலினின் இரும்புக்கரம் தமிழ்நாடு
  • மாம்பழ விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் திராவிட மாடல் : நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • அமெரிக்காவின் பொற்காலம் இன்று முதல் தொடங்குகிறது: அதிபராக பதவியேற்ற பின் ட்ரம்ப் உரை உலகம்
  • உங்கள் வீட்டுப் பிள்ளை; நயினார் பேசுகிறேன்; தொடர்பில் இருப்போம்… தொடர்ந்து பேசுவோம்…! அரசியல்
  • போலீஸிடம் வழங்கிய ஆதாரம் ஐடிவிங் நிர்வாகிக்கு சென்றது எப்படி? திமுக நிர்வாகி மீது புகார் அளித்த இளம்பெண் கண்ணீர் தமிழ்நாடு
  • இளைஞர்கள் யோகாவை வாழ்நாள் முழுவதும் ஒருதுணையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு
  • பிரதமர் மோடியை சந்தித்தார் அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்டு இந்தியா
  • தலைவர் அண்ணாமலை விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதி வெற்றி: டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்த மத்திய அரசு தமிழ்நாடு

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme