Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • கெட்அவுட் ஸ்டாலின்: தருமபுரி பாஜக சார்பில் முழக்கம் அரசியல்
  • பிரதமர் மோடியை சந்தித்தார் அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்டு இந்தியா
  • பஹல்காமில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் வெறியாட்டம்; ‘‘நீ ஹிந்துவா?’’ என கேட்டு, கேட்டு 28 சுற்றுலாப்பயணிகளை கொன்ற கொடூரம் இந்தியா
  • தமிழகத்தில் புனரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார் இந்தியா
  • நரேந்திர மோடி ஆட்சியில் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது : தருமபுரியில் எஸ்.ஜி.சூர்யா அரசியல்
  • திருவள்ளுவரையும், திருக்குறளையும் களவாட நினைப்பதே திமுக கூட்டம்தான்: ஸ்டாலினுக்கு, வானதி சீனிவாசன் பதிலடி அரசியல்
  • பிரதமர் மோடியை சந்தித்தார் எலான் மஸ்க் உலகம்
  • இந்திய ராணுவத்திற்கு உயிரை கொடுக்கத் தயார்: சண்டீகரில் குவிந்த இளைஞர்கள் இந்தியா

22 லட்சம் மரங்களை நட்டு சாதனை: வனத்துக்குள் திருப்பூர் அமைப்புக்கு தலைவர் அண்ணாமலை பாராட்டு

Posted on March 1, 2025 By admin No Comments on 22 லட்சம் மரங்களை நட்டு சாதனை: வனத்துக்குள் திருப்பூர் அமைப்புக்கு தலைவர் அண்ணாமலை பாராட்டு

முன்னாள் ஜனாதிபதி, அமரர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஐயா அவர்கள் நினைவாகத் தொடங்கப்பட்ட வனத்துக்குள் திருப்பூர் அமைப்பு, கடந்த பத்து ஆண்டுகளில் திருப்பூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் 22 லட்சம் மரங்களை நட்டு சாதனை படைத்திருக்கிறது என அந்த அமைப்புக்கு தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்: இன்றைய தினம், வனத்துக்குள் திருப்பூர் அமைப்பின் பத்தாம் ஆண்டு விழாவில், தினமலர் நாளிதழின் இணை ஆசிரியர், மதிப்பிற்குரிய கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு அவர்களுடன் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி.

நமது முன்னாள் ஜனாதிபதி, அமரர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஐயா அவர்கள் நினைவாகத் தொடங்கப்பட்ட வனத்துக்குள் திருப்பூர் அமைப்பு, கடந்த பத்து ஆண்டுகளில், திருப்பூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும், 22 லட்சம் மரங்களை நட்டு சாதனை படைத்திருக்கிறது. மேலும் இந்த 2025 ஆம் ஆண்டு நிறைவைடையும்போது, 25 லட்சம் மரங்கள் என்ற உயரிய இலக்குடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சிறப்பான செயல்பாடுகளுக்காக, வெற்றி அறக்கட்டளை வனத்துக்குள் திருப்பூர் அமைப்பின் தலைவர் சிவராம் அவர்கள், கொடையாளர்கள், தன்னார்வலர்கள் என அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருப்பூரை மையமாகக் கொண்டு செயல்பட்டாலும், அருகிலுள்ள மாவட்டங்களை உள்ளடக்கி, சுமார் 100 கி.மீ. தொலைவுக்கு, வனத்துக்குள் திருப்பூர் அமைப்பு பரவியுள்ளது பாராட்டத்தக்கது. சூழலியல் மாற்றத்தைச் சரி செய்ய, மரங்களால் மட்டும்தான் முடியும். எனவே, இந்த மரம் நடும் பணி, இன்னும் பல மாவட்டங்கள், மாநிலங்களைக் கடந்து செல்ல வேண்டும், இளைஞர்கள் அனைவரும் இதற்காக முன்வர வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைக்கிறேன்.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, நிறுவனங்களின் பங்கு மகத்தானது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, குடும்பங்களின் பொருளாதார வளர்ச்சி, நாட்டின் முன்னேற்றம் என அனைத்திற்கும், நிறுவனங்களின் வளர்ச்சி முக்கியப் பங்கு வகிக்கிறது. உலக அளவில், புதிய நிறுவனங்களின் எண்ணிக்கையிலும், அவற்றில் முதலீடு செய்யப்பட்டுள்ள நிதியும், நமது நாட்டில்தான் அதிகம்.

தமிழகத்திலும், திருப்பூர் உள்ளிட்ட கொங்கு பகுதிகளை மையமாகக் கொண்டு, புதிய நிறுவனங்கள் உருவாக வேண்டும். இதன் மூலம், நம் மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர வேண்டும். அதே நேரத்தில், சுற்றுச் சூழலைப் பாதுகாத்து, நம் அடுத்த தலைமுறைக்குச் சிறந்த, வாழத் தகுந்த சூழலை உருவாக்கிப் பேணுவதும் நமது முக்கியக் கடமையாகும்.

நாட்டின் வளர்ச்சிக்கும், சூழலியல் பாதுகாப்புக்கும் உறுதுணையாக இருக்க,  இளைஞர்கள் அனைவரும் உறுதி ஏற்போம். இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழ்நாடு Tags:#Annamalai, #Bjp, #Tamilnadu, oreynaadu

Post navigation

Previous Post: தருமபுரி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.,க்கு மிரட்டல்: திமுக மாவட்ட பொறுப்பாளர் மீது பாஜக புகார்
Next Post: கடலூர் மாவட்ட பாஜகவினர் கைது : தலைவர் அண்ணாமலை கண்டனம்

Related Posts

  • ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கருணாநிதி வரவேற்றார்; ஸ்டாலின் எதிர்க்கிறார் : பவன் கல்யாண் தமிழ்நாடு
  • புதிய பாம்பன் ரயில் பாலத்தை ராம நவமி நாளில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி தமிழ்நாடு
  • நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த நெல்லை மாணவர் தமிழ்நாடு
  • தலைவர் அண்ணாமலை விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதி வெற்றி: டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்த மத்திய அரசு தமிழ்நாடு
  • சமூக வலைத்தளத்தில் அவதூறு பதிவு : சுந்தரவள்ளி மீது தருமபுரி எஸ்.பி., அலுவலகத்தில் பாஜக மகளிர் அணி புகார் தமிழ்நாடு
  • ராணி அஹல்யாபாய் ஹோல்கர் 300வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டது பெருமை: நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • மக்கள் அனைவரும் யோகா செய்ய வேண்டும் : சர்வதேச யோகா தினத்தில் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்
  • இளைஞர்கள் யோகாவை வாழ்நாள் முழுவதும் ஒருதுணையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி
  • நரேந்திர மோடி ஆட்சியில் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது : தருமபுரியில் எஸ்.ஜி.சூர்யா
  • மாம்பழ விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் திராவிட மாடல் : நயினார் நாகேந்திரன்
  • காசி தமிழ் சங்கமம் 3.0 அனுபவப் போட்டி: 46 பேருக்கு பரிசுகளை வழங்கினார் ஆளுநர்

Recent Comments

No comments to show.

Archives

  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த நெல்லை மாணவர் தமிழ்நாடு
  • ராமஜென்ம பூமிக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் ஆச்சார்யா மகந்த் ஸ்ரீசத்யேந்திர தாஸ் : ஹெச்.ராஜா இந்தியா
  • தருமபுரி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.,க்கு மிரட்டல்: திமுக மாவட்ட பொறுப்பாளர் மீது பாஜக புகார் அரசியல்
  • பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு இந்தியா
  • கந்த புராணமும், கந்த சஷ்டி கவசமும் இருப்பது போல் கந்தர் மலையும் இந்துக்களுக்காக இருக்கும் : ஹெச்.ராஜா அரசியல்
  • டெல்லியில் வென்றது சாதாரண வெற்றி அல்ல; வரலாற்று சிறப்புமிக்கது: பிரதமர் மோடி பெருமிதம் அரசியல்
  • திமுக அரசு செய்த தவறை மறைக்க ஊடகங்களை தவறாக பயன்படுத்தி வருகிறது : கே.பி.ராமலிங்கம் நாடு
  • மகாத்மா காந்தி நினைவு தினம்: ராஜ்காட்டில் பிரதமர் மோடி மரியாதை இந்தியா

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme