Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • அனைவருக்கும் பிரதமரின் இனிய 2025 புத்தாண்டு வாழ்த்து இந்தியா
  • இந்தியா உலக வல்லரசாக மாறி வருகிறது : பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா
  • பிரதமர் மோடியை சந்தித்தார் எலான் மஸ்க் உலகம்
  • தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்: சேலத்தில் தலைவர் நயினார் நாகேந்திரன் நாடு
  • தருமபுரி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.,க்கு மிரட்டல்: திமுக மாவட்ட பொறுப்பாளர் மீது பாஜக புகார் அரசியல்
  • அஜித்குமார் கொலையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்: நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • கோவை சின்னியம்பாளையம் மாரியம்மன் கோவில் சேதம் : அண்ணாமலை கண்டனம் அரசியல்
  • பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கமலாலயத்தில் அஞ்சலி தமிழ்நாடு

மாணவி பாலியல் விவகாரத்தில் மக்களை திசை திருப்பும் முதல்வர் ஸ்டாலின்: தலைவர் அண்ணாமலை

Posted on January 9, 2025 By admin No Comments on மாணவி பாலியல் விவகாரத்தில் மக்களை திசை திருப்பும் முதல்வர் ஸ்டாலின்: தலைவர் அண்ணாமலை

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரன் திமுக உறுப்பினர் அல்ல; திமுக ஆதரவாளர் என்று பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் மக்களை திசை திருப்புகிறார் என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் நடைபெற்ற மூவர் படுகொலை சம்பவத்திற்கு நீதி கேட்டு பாஜக சார்பில் இன்று (ஜனவரி 09) மாலை நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, டங்ஸ்டன் விவகாரத்தில் மத்திய அரசு திட்டத்தை செயல்படுத்தாது எனக் கூறிய பின்பும் சட்டப்பேரவையில் அதற்கான தீர்மானம் நிறைவேற்றும் அவசியம் இல்லை எனவும், அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரன் திமுக உறுப்பினர் அல்ல; திமுக ஆதரவாளர் எனக் கூறி முதல்வர் ஸ்டாலின் மக்களை திசை திருப்புவதாகவும் விமர்சித்தார்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கடந்த 15 நாட்களாக திமுக அமைச்சர்கள் பல்வேறு விதமாக கருத்துகளை தெரிவித்து வந்தனர். குறிப்பாக சட்ட அமைச்சர் ரகுபதி, அதன் இரண்டாம் கட்ட தலைவர்கள் ஞானசேகரன் திமுகவில் இல்லை என கூறினர். இப்போது சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின், ஞானசேகரன் கட்சியின் அனுதாபி எனக் கூறி தப்பிக்க முயல்கிறார். மக்களை திசை திருப்புவதற்காக இந்த வார்த்தையை அவர் பயன்படுத்தியுள்ளார்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் காவல் ஆய்வாளர் மீது எந்த தவறும் இல்லை. அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்பட்டது. ஆனால் இப்போது எஸ்ஐடி ஒரு அதிகாரியை கைது செய்துள்ளது. எவ்வாறு மாநில அரசு பொய்யான தகவல் அறிக்கையை கொடுக்க முடியும் என கேள்வி எழுப்பினார்.

மேலும், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மூவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும், அதுவே தீர்வு என இன்று பாஜக சார்பில் போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

டங்ஸ்டன் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாது என மத்திய அரசே கூறியுள்ளது. மேலும், மாநில அரசு இதில் முடிவு எடுக்க வேண்டும், அதற்கு எந்த நிர்பந்தமும் இல்லை எனவும் மத்திய அரசு கூறியுள்ளது. எனவே இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய முதல்வர் ஸ்டாலின் அதை செய்யாமல் உள்ளார். மூத்த அமைச்சர்களை மதுரைக்கு அனுப்பி மக்களோடு பேசி இருந்ததால் இந்த மாபெரும் ஊர்வலம் நடைபெற்று இருக்காது.

ஈவெரா குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசியது குறித்த கேள்விக்கு, ஈவெரா அவ்வாறு பேசியதற்கான ஆவணங்கள் என்னிடம் உள்ளது. அதைக் கொடுக்க தயாராக இருக்கிறேன். ஆனால் அதை இப்போது பொதுவெளியில் பேச வேண்டியதில்லை என கருதுகிறேன். காரணம் பொதுமக்கள் இப்போது அரசியலை மற்றொரு கண்ணோட்டத்தில் பார்க்கத் துவங்கியுள்ளனர். ஈவெரா பேசியதை எல்லாம் இப்போது பேசினால் அது மக்களுக்கு அருவருப்பை தரும். அதே நேரத்தில் சீமான் அவர்களிடம் விசாரணைக்காக காவல்துறையினர் வந்தால் ஈவெரா பேசியதற்கான ஆவணங்களை வழங்கவும் தயாராக உள்ளேன் எனக் கூறினார்.

கோவை உடையாம்பாளையம் பகுதியில் சாலையோர மாட்டிறைச்சி நடத்தி வந்த நபர்களோடு பாஜக உறுப்பினர் வாக்குவாதம் செய்த விவகாரம் குறித்து பேசிய தலைவர் அண்ணாமலை, அந்த காணொளியை தானும் பார்த்ததாகவும், முழு காணொளியை வெளியிடாமல் மாட்டிறைச்சி குறித்து அவர் பேசிய ஒரு நிமிட விடியோ மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதாகவும், இதற்காக பாஜக சார்பில் நடவடிக்கை எடுக்கக் கூறி காவல்துறையினிடனும் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். அந்த பகுதியில் கோவிலின் அருகே மாட்டிறைச்சி உட்பட எல்லாவித அசைவ உணவுகளும் விற்க வேண்டாம் என கேட்டுக் கொண்டதாகவும், அதுவே அந்த பாஜக தொண்டரின் நிலைப்பாடாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

யுஜிசி விவகாரத்தைப் பொறுத்தவரை பிப்ரவரி 5 ஆம் தேதி வரை கருத்துகளை அனுப்ப மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, குறிப்பாக புதிய யுஜிசி விதிமுறைகளின் மூலம் பேராசிரியர்களின் பணி உயர்வுக்கான நெட் தேர்வு வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் துணை வேந்தர் தேர்வில் ஆசிரியர் பணி மற்றும் ஆசிரியர் பணி தொடர்புடையவர்கள் நியமிக்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது. துணைவேந்தர் தேர்வில் யுஜிசி, பல்கலைக்கழகத்தின் செனட் மற்றும் ஆளுநர் என மூன்று தரப்பினரின் கருத்துகளும் பரிந்துரைகளும் ஏற்கப்பட்டு துணைவேந்தர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை. பிப்ரவரி 5 ஆம் தேதி வரை எதிர்ப்பதற்கான கருத்துகளை தெரிவிக்கலாம். இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறினார்.

அரசியல் Tags:#Annamalai, #Bjp, #Oreynaadu, #Tamilnadu

Post navigation

Previous Post: குற்றவாளிகளை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்ல திமுக அரசு தயாராக இருப்பதன் மர்மம் என்ன? தலைவர் அண்ணாமலை
Next Post: அனைவரும் பொங்கலை கொண்டாடுங்க, டங்ஸ்டன் சுரங்கம் வராது: விவசாயிகளிடம் உறுதி கொடுத்த தலைவர் அண்ணாமலை

Related Posts

  • அமைச்சர் கமிஷன் காந்தி ஊழலுக்கு சப்பைக்கட்டு கட்டாமல் உடனடியாக பதவி விலக வேண்டும் : தலைவர் அண்ணாமலை அரசியல்
  • நரேந்திர மோடி ஆட்சியில் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது : தருமபுரியில் எஸ்.ஜி.சூர்யா அரசியல்
  • கடலூர் மாவட்ட பாஜகவினர் கைது : தலைவர் அண்ணாமலை கண்டனம் அரசியல்
  • திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளது என்பதற்கு ஈசிஆர் சம்பவம் ஓர் உதாரணம் : தலைவர் அண்ணாமலை அரசியல்
  • யாழ்ப்பாணம் கலாச்சார மையத்துக்கு திருவள்ளூவர் பெயர் : தலைவர் அண்ணாமலை மகிழ்ச்சி அரசியல்
  • தீர்வு கொடுக்காமல் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விஜய்: தலைவர் அண்ணாமலை காட்டம் அரசியல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, நிகிதாவுடன் தொடர்புபடுத்தி அவதூறு : பாஜக நிர்வாகி ராஜினி காவல்நிலையத்தில் புகார்
  • அஜித்குமார் கொலையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்: நயினார் நாகேந்திரன்
  • உள்துறை அமைச்சர் பற்றி அவதூறு பேச்சு: ராசா மீது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் புகார்
  • உலகின் வலிமைக்கு ஒரு நம்பிக்கை தூணாக இந்தியா உள்ளது : கானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பெருமிதம்
  • திருப்புவனத்தில் காவலர்களால் படுகொலை செய்யப்பட்ட இளைஞர்: பாஜக – அதிமுக இணைந்து ஆர்ப்பாட்டம்

Recent Comments

No comments to show.

Archives

  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • அமைச்சர் கமிஷன் காந்தி ஊழலுக்கு சப்பைக்கட்டு கட்டாமல் உடனடியாக பதவி விலக வேண்டும் : தலைவர் அண்ணாமலை அரசியல்
  • டெல்லியில் 67 தொகுதிகளில் டெபாசிட் இழந்த காங்கிரஸ் இந்தியா
  • காசி தமிழ் சங்கமம் 3.0 அனுபவப் போட்டி: 46 பேருக்கு பரிசுகளை வழங்கினார் ஆளுநர் தமிழ்நாடு
  • ராமஜென்ம பூமிக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் ஆச்சார்யா மகந்த் ஸ்ரீசத்யேந்திர தாஸ் : ஹெச்.ராஜா இந்தியா
  • 3 நாளில் பாகிஸ்தானை மண்டியிட வைத்த இந்திய ராணுவம்: ஜம்மு காஷ்மீர் ஆளுநர் இந்தியா
  • இந்திய ராணுவத்திற்கு உயிரை கொடுக்கத் தயார்: சண்டீகரில் குவிந்த இளைஞர்கள் இந்தியா
  • திருவள்ளுவரையும், திருக்குறளையும் களவாட நினைப்பதே திமுக கூட்டம்தான்: ஸ்டாலினுக்கு, வானதி சீனிவாசன் பதிலடி அரசியல்
  • முருக பக்தர்களிடம் அத்துமீறிய போலீசார்: செய்தி சேகரித்த ஒரே நாடு பத்திரிகையாளர் செல்போனை பறித்த மதுரை கமிஷ்னர் தமிழ்நாடு

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme