Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • டங்ஸ்டன் சுரங்கம் அமையாது : விவசாய பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சரை சந்தித்தபின் தலைவர் அண்ணாமலை உறுதி இந்தியா
  • மஹா கும்பமேளாவில் புனித நீராடிய தலைவர் அண்ணாமலை இந்தியா
  • முருக பக்தர்கள் மீது கை வைப்பதா? சேகர்பாபு, ரகுபதியை எச்சரித்த தலைவர் அண்ணாமலை அரசியல்
  • திமுக அரசு செய்த தவறை மறைக்க ஊடகங்களை தவறாக பயன்படுத்தி வருகிறது : கே.பி.ராமலிங்கம் நாடு
  • தமிழகத்தை சேர்ந்த 25 பேர் ஐபிஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு: அண்ணாமலை வாழ்த்து அரசியல்
  • மத்திய அரசு வழங்கிய ரூ.1,050 கோடி நிதியை ஏப்பம் விட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் : தலைவர் அண்ணாமலை அரசியல்
  • சசி தரூர், பினராயி விஜயன் இங்கே இருப்பதால் இண்டி கூட்டணியினர் பலர் தூக்கத்தை இழப்பார்கள்: கேரளாவில் பிரதமர் மோடி பேச்சு இந்தியா
  • ஸ்ரீ கந்தர் மலைக்காக சிறைச்சென்று ஜாமினில் வந்த பாஜக நிர்வாகிக்கு உற்சாக வரவேற்பு தமிழ்நாடு

அனைவரும் பொங்கலை கொண்டாடுங்க, டங்ஸ்டன் சுரங்கம் வராது: விவசாயிகளிடம் உறுதி கொடுத்த தலைவர் அண்ணாமலை

Posted on January 11, 2025 By admin No Comments on அனைவரும் பொங்கலை கொண்டாடுங்க, டங்ஸ்டன் சுரங்கம் வராது: விவசாயிகளிடம் உறுதி கொடுத்த தலைவர் அண்ணாமலை

மதுரை மேலூரில் 4979 ஏக்கர் பரப்பளவில் அமைய இருந்த டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டம் முழுவதுமாக ரத்து செய்யப்படும். இதற்கான அறிவிப்பினை மத்திய கனிமம் மற்றும் சுரங்க துறை அமைச்சர் கிஷன் ரெட்டி இந்த மாதம் சென்னை வரும் பொழுது அறிவிப்பார் என தலைவர் அண்ணாமலை பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.

மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த அ.வல்லாளப்பட்டி கிராமத்தில் (ஜனவரி 10) தலைவர் அண்ணாமலை டங்ஸ்ன் தொடர்பான விளக்கக் கூட்டத்தில் பங்கேற்றார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர்.

அப்போது மக்களிடையே தலைவர் அண்ணாமலை கூறுகையில், ‘‘மதுரை மேலூரில் 4979 ஏக்கர் பரப்பளவில் அமைய இருந்த டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டம் முழுவதுமாக ரத்து செய்யப்படும். இதற்கான அறிவிப்பினை மத்திய கனிமம் மற்றும் சுரங்க துறை அமைச்சர் கிஷன் ரெட்டி இந்த மாதம் சென்னை வரும் பொழுது அறிவிக்க வாய்ப்புள்ளது.

அதற்கான உறுதியை தமிழக பாஜக அளிக்கிறது. எனவே மக்கள் உடனடியாக டங்ஸ்டனுக்கு எதிரான போராட்டத்தை கைவிட்டு நல்லபடியாக பொங்கலை கொண்டாட வேண்டும்’’, என கோரிக்கையை முன் வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தலைவர் அண்ணாமலை, ‘‘மக்கள் டங்ஸ்டனுக்கு எதிராக கடந்த இரு தினத்திற்கு முன்பாக 18 கி.மீ தூரம் நடந்தே அறவழியில் போராட்டத்தை நடத்தி முடித்து இருக்கின்றனர். மேலூர் அரிட்டாப்பட்டி, நாயக்கர்பட்டி, கிடாரிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இதில் பங்கேற்றனர்.

மத்திய அரசு இந்த பகுதியில் இருக்கும் டங்ஸ்டனை எடுக்க 4,979 ஏக்கர், 20 ஸ்கொயர் கி.மீ பரப்பளவில் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை நடத்தியது. இதனை ஹிந்துஸ்தான் ஜிங் நிறுவனம் ஏலத்தை எடுத்தது.
இந்த ஏலம் தொடர்பாக கிராம மக்கள் அதிருப்தி தெரிவித்து போராட்டம் செய்ததால் கனிமவளத்துறை சார்ந்த அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு இது தொடர்பாக டிசம்பர் 12ம் தேதி கடிதம் எழுதினோம். அதன் அடிப்படையில் மத்திய அமைச்சர் இந்தப் பகுதியில் அமையவிருக்கும் டாங்ஸ்டன் திட்டம் வேண்டாம் என முடிவை எடுத்து நிறுத்தி இருந்தது.

ஆனால் கிராம மக்கள் தொடர்ந்து பல்வேறு விதமான போராட்டம் நடத்தினர். மத்திய அரசு இந்த திட்டத்தை எதற்காக கொண்டு வந்தது. மாநில அரசு ஏன்? இத்திட்டத்தை எதிர்க்க வில்லை, மாநில அரசு எதிர்க்காததால் மத்திய அரசு ஏலத்தை அறிவித்தது. கடந்த பிப்ரவரி 2024-ல் நடந்த முதல் ஏலத்தில் யாரும் எடுக்கவில்லை. எனவே, இரண்டாவது முறையாக நடந்த ஏலத்தைதான் இந்துஸ்தான் ஜிங் என்ற நிறுவனம் எடுத்தது. அப்பொழுது இது திட்டம் வேண்டாம் என மக்கள் சொல்லிய பிறகு அரசியலைக் கடந்து கட்சியைக் கடந்து, மாநில அரசு, மத்திய அரசு என்பதை கடந்து மக்களின் கோரிக்கை பிரதானமாக இருந்தது.

எனவே, இதனை மத்திய கனிம சுரங்க துறை அமைச்சருக்கு கவனத்திற்கு எடுத்துச் சென்றோம். இத்திட்டத்தால் மத்திய அரசுக்கு ஒரு ரூபாய் கூட வருவாய் கிடைக்காது முழுவதுமாக ஏலத்துக்குப் பிறகு வருவாயை அனுபவிப்பது மாநில அரசு மற்றும் உள்ளூர் பஞ்சாயத்து மட்டுமே. மாநில அரசுதான் பல்வேறு விதமான கிளியரன்ஸை கொடுக்க வேண்டும். அதனை கொடுக்க வேண்டாம் என்று கூறிவிட்டோம். அரிட்டாபட்டி பல்லுயிர் தளம் 477 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.

அதையும் தாண்டி எங்கேயும் வேண்டாம் என பொதுமக்கள் கூறுகின்றனர் மக்களின் கோரிக்கையை மத்திய அமைச்சரிடம் எடுத்துச் சென்றோம். மத்திய கனிம மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி வருகின்ற ஜனவரி 17, 18 ,19 ஆகிய மூன்று நாட்களில் சென்னை வருகிறார். அப்பொழுது அவரை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் அல்லது இந்தப் பகுதியைச் சேர்ந்த 5 பிரதிநிதிகளை டெல்லி அழைத்துச் சென்று சந்திக்க ஏற்பாடு செய்வோம். இந்த பகுதியில் டங்ஸ்டன் திட்டம் வராது என்ற உத்தரவாதத்தை பாரதிய ஜனதா கட்சி சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.

சுரங்கத்துறை அமைச்சரே டங்க்சன் திட்டம் வராது என அறிவிக்க இருக்கிறார். நான் இங்கே வந்ததற்கான மிக முக்கிய காரணம் பொங்கல் பண்டிகை வர இருக்கிறது. அதனைக் கொண்டாடுவதை விடுத்து மக்கள் ஒரு பயத்தோடு அச்ச உணர்வோடு இருக்கின்றனர். இதனை மக்களிடம் தெரிவித்து இருக்கிறோம். மக்கள் மகிழ்ச்சியுடன் கலைந்து சென்று இருக்கிறார்கள். மக்கள் அறப்போராட்டத்தில் நியாயமான கோரிக்கையை முன்னிறுத்தி போராடி இருக்கின்றனர். இதனை தமிழகத்தில் உள்ள அனைவரும் ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இச்சமயத்தில் மாநில அரசுக்கு இரண்டு கோரிக்கைகளை முன்வைக்கின்றேன். ஒன்று அறவழியில் போராட்டம் நடத்தி மதுரை வரை பேரணியாக பொது சொத்துக்கு சேதாரம் இல்லாமல் வந்து, தமுக்கம் மைதானம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போடப்பட்ட வழக்கினை வாபஸ் பெறவேண்டும். அதேபோல் இந்த 20 ஸ்கொயர் கிலோமீட்டர் பரப்பளவில் சொத்தை வாங்க, விற்க முடியாத அளவிற்கு ஈசியை மாநில அரசு பிளாக் செய்து வைத்திருந்தது. அதனை தற்பொழுது நீக்கி உள்ளது. எனவே இனிமேல் மக்கள் இந்த பகுதிக்குள் இடத்தை வாங்க விற்க முடியும்.

அதேபோல் இனிவரும் காலங்களில் ஒரு திட்டம் குறித்து மத்திய அரசு கேட்கிறது என்றால் மாநில அரசு முறையான பதில் கடிதம் வழங்க வேண்டும். இதுபோன்ற ஒரு குழப்பம் மீண்டும் ஏற்பட்டுவிடக் கூடாது. பிரச்சனைக்குரிய இடமாக இருக்கும் பொழுது மக்களை அழைத்துப் பேசி கிராம சபை கூட்டம் நடத்தி அது குறித்த சரியான தகவலை மத்திய அரசிடம் அனுப்பினால் ஏலம் என்ற இடத்திற்கே அது செல்லாது. பிரச்சனைக்குரிய இடமாக இருக்கும் பட்சத்தில் அதனை அப்பகுதி மக்களிடம் கலந்து ஆலோசனை செய்து முறைப்படி செயல்படுத்த வேண்டும் என கோரிக்கையையும் முன் வைக்கிறோம். இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறினார். இப்பேட்டியின் போது பாஜக நிர்வாகிகள், விவசாயிகள், பொதுமக்கள் உடனிருந்தனர்.

அரசியல் Tags:#Annamalai, #Bjp, #Oreynaadu, #Tamilnadu

Post navigation

Previous Post: மாணவி பாலியல் விவகாரத்தில் மக்களை திசை திருப்பும் முதல்வர் ஸ்டாலின்: தலைவர் அண்ணாமலை
Next Post: வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதில் மகளிர் சக்திக்கு பெரும் பங்கு உள்ளது : பிரதமர் மோடி பெருமிதம்

Related Posts

  • தமிழகத்தை சேர்ந்த 25 பேர் ஐபிஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு: அண்ணாமலை வாழ்த்து அரசியல்
  • அமைப்பு பருவம் – 2025 புதிய மாவட்ட தலைவர்கள் பட்டியல் அறிவிப்பு அரசியல்
  • திருவள்ளுவரையும், திருக்குறளையும் களவாட நினைப்பதே திமுக கூட்டம்தான்: ஸ்டாலினுக்கு, வானதி சீனிவாசன் பதிலடி அரசியல்
  • கடலூர் மாவட்ட பாஜகவினர் கைது : தலைவர் அண்ணாமலை கண்டனம் அரசியல்
  • ஊர் உறங்கிய பின்னர், நள்ளிரவில் பதிலளிக்கும் பெரியகருப்பன் – திமுக ஆட்சியில் விடியாது என்பதில் அத்தனை நம்பிக்கையா? தலைவர் அண்ணாமலை கேள்வி அரசியல்
  • அமைச்சர் கமிஷன் காந்தி ஊழலுக்கு சப்பைக்கட்டு கட்டாமல் உடனடியாக பதவி விலக வேண்டும் : தலைவர் அண்ணாமலை அரசியல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • மக்கள் அனைவரும் யோகா செய்ய வேண்டும் : சர்வதேச யோகா தினத்தில் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்
  • இளைஞர்கள் யோகாவை வாழ்நாள் முழுவதும் ஒருதுணையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி
  • நரேந்திர மோடி ஆட்சியில் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது : தருமபுரியில் எஸ்.ஜி.சூர்யா
  • மாம்பழ விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் திராவிட மாடல் : நயினார் நாகேந்திரன்
  • காசி தமிழ் சங்கமம் 3.0 அனுபவப் போட்டி: 46 பேருக்கு பரிசுகளை வழங்கினார் ஆளுநர்

Recent Comments

No comments to show.

Archives

  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • தலைவரின் கோரிக்கையால் வடசென்னையில் பாஸ்போர்ட் சேவை மையம் நாடு
  • தமிழ் மொழியின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் பிரதமர்: காசி தமிழ்ச் சங்கமத்தில் தலைவர் அண்ணாமலை இந்தியா
  • காலத்தால் அழியாத சக்தி வாய்ந்த ஊடகம்: உலக வானொலி தினத்தில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி இந்தியா
  • ஆபரேஷன் சிந்தூர் வெற்றி: ஜனாதிபதியுடன்  முப்படை தளபதிகள் சந்திப்பு இந்தியா
  • பாஜக உண்மையான ஜனநாயக கட்சி : திருச்செங்கோட்டில் தலைவர் அண்ணாமலை அரசியல்
  • டங்ஸ்டன் சுரங்கம் அமையாது : விவசாய பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சரை சந்தித்தபின் தலைவர் அண்ணாமலை உறுதி இந்தியா
  • மத்திய அரசு வழங்கிய ரூ.1,050 கோடி நிதியை ஏப்பம் விட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் : தலைவர் அண்ணாமலை அரசியல்
  • 3 நாளில் பாகிஸ்தானை மண்டியிட வைத்த இந்திய ராணுவம்: ஜம்மு காஷ்மீர் ஆளுநர் இந்தியா

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme