இந்தியா மற்றும் மலேசியாவிற்கு இடையேயான வரலாற்று உறவுகள் சமீபத்திய ஆண்டுகளில் உறுதியான முன்னேற்றத்தைக் கண்டுள்ளன என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மலேசியப் பயணத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி (பிப்ரவரி 7) வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:
எனது நண்பர், பிரதமர் அன்வர் இப்ராஹிமின் அழைப்பின் பேரில், இன்று மலேசியாவிற்கு ஒரு அதிகாரப்பூர்வப் பயணத்தை நான் மேற்கொள்கிறேன்.
இந்தியா மற்றும் மலேசியாவிற்கு இடையேயான வரலாற்று உறவுகள் சமீபத்திய ஆண்டுகளில் உறுதியான முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. பிரதமர் அன்வர் இப்ராஹிமுடனான எனது பேச்சுவார்த்தைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன், மேலும் நமது விரிவான உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தவும் விரும்புகிறேன். நமது பாதுகாப்பு மற்றும் தற்காப்பு உறவுகளை வலுப்படுத்தவும், நமது பொருளாதாரம் மற்றும் புத்தாக்கக் கூட்டாண்மையை மேம்படுத்தவும், நமது ஒத்துழைப்பை புதிய துறைகளுக்கு விரிவுபடுத்தவும் இலக்கு கொண்டுள்ளோம்.
மலேசியாவில் உள்ள இந்திய சமூகத்தினரைச் சந்திக்கவும் நான் ஆவலாக உள்ளேன். ஏறக்குறைய மூன்று மில்லியன் எண்ணிக்கையில் உள்ள அவர்கள், உலகின் மிகப்பெரிய இந்திய புலம்பெயர் சமூகங்களில் ஒன்றாகத் திகழ்கின்றனர். மலேசியாவின் முன்னேற்றத்திற்கு அவர்கள் ஆற்றிய மகத்தான பங்களிப்பும், நமது இரு நாடுகளுக்கும் இடையே ஒரு உயிருள்ள வாழும் பாலமாக அவர்கள் வகிக்கும் பங்கும், நமது வரலாற்று நட்புக்கும் ஒரு வலுவான அடித்தளத்தை வழங்குகிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.





