திமுக ஆட்சியில் போதையின் கூடாரமாகவும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற கோட்டையாக செங்கல்பட்டு மாறிவிட்டது: நயினார் நாகேந்திரன்

பல்லவ சாம்ராஜ்யத்தின் கோட்டையாகத் திகழ்ந்த செங்கல்பட்டு, திமுக ஆட்சியில் போதையின் கூடாரமாகவும், பெண்களுக்குப் பாதுகாப்பற்ற பாழடைந்த கோட்டையாகவும் மாறி வருகிறது என மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் செங்கல்பட்டு மாவட்டத்தில் (அக்டோபர் 14) பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கிறது. பாதாள சாக்கடை பணியை ஒழுங்காக செய்யாததால் இங்கே தெருக்களில் கழிவுநீர் தேங்கியிருக்கிறது. நீர்நிலைகளில்…