Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • குற்றவாளிகளை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்ல திமுக அரசு தயாராக இருப்பதன் மர்மம் என்ன? தலைவர் அண்ணாமலை அரசியல்
  • அனைவரும் பொங்கலை கொண்டாடுங்க, டங்ஸ்டன் சுரங்கம் வராது: விவசாயிகளிடம் உறுதி கொடுத்த தலைவர் அண்ணாமலை அரசியல்
  • துரு புடிச்சு இத்துப்போன ஸ்டாலினின் இரும்புக்கரம் தமிழ்நாடு
  • பாஜக உண்மையான ஜனநாயக கட்சி : திருச்செங்கோட்டில் தலைவர் அண்ணாமலை அரசியல்
  • ஈரோடு இரட்டை கொலை; கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு அண்ணாமலை நேரில் ஆறுதல் தமிழ்நாடு
  • டெல்லியில் வென்றது சாதாரண வெற்றி அல்ல; வரலாற்று சிறப்புமிக்கது: பிரதமர் மோடி பெருமிதம் அரசியல்
  • சசி தரூர், பினராயி விஜயன் இங்கே இருப்பதால் இண்டி கூட்டணியினர் பலர் தூக்கத்தை இழப்பார்கள்: கேரளாவில் பிரதமர் மோடி பேச்சு இந்தியா
  • தாய்மார்கள், சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் : தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு

முருக பக்தர்களிடம் அத்துமீறிய போலீசார்: செய்தி சேகரித்த ஒரே நாடு பத்திரிகையாளர் செல்போனை பறித்த மதுரை கமிஷ்னர்

Posted on February 5, 2025 By admin No Comments on முருக பக்தர்களிடம் அத்துமீறிய போலீசார்: செய்தி சேகரித்த ஒரே நாடு பத்திரிகையாளர் செல்போனை பறித்த மதுரை கமிஷ்னர்

மதுரை திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்திற்கு நேற்று (பிப்ரவரி 04) வந்த முருக பக்தர்கள் மற்றும் பயணிகளை போலீசார் அராஜகமாக கைது செய்ய முயற்சித்தனர். இதனை ஒரே நாடு செய்தியாளர் தங்கவேல் வீடியோவாக பதிவு செய்தார். அங்கு ஆய்வுக்காக வந்த காவல் ஆணையர் லோகநாதன் செய்தியாளரின் செல்போனை பறித்து அராஜகத்தில் ஈடுபட்டார்.

திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்கவும், மீட்கவும் கோரி நேற்று இந்து விரோத திமுக அரசின் 144 தடையை மீறி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இந்துக்கள் ஒன்று திரண்டு மதுரைக்கு வரத்துவங்கினர். அதுபோன்று வருபவர்களை ரயில் நிலையத்திலேயே போலீசார் அராஜகமாக கைது செய்து வேனில் ஏற்றி அழைத்துச்சென்றனர்.

அதே போன்றுதான் நாகர்கோயிலில் இருந்து கோவைக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று 11:40 மணியளவில் திருப்பரங்குன்றம் ரயில் நிலையம் வந்தடைந்தது. அதில் ஏராளமான பயணிகள் மற்றும் முருக பக்தர்கள் இறங்கி செல்ல முற்பட்டனர்.

அப்போது ரயில் பயணிகளை விட அதிகளவிலான போலீசார் இரண்டு நடைமேடை பகுதிகளிலும் குவிக்கப்பட்டு வரும் பயணிகளை கைது செய்தனர். சிலர் ஏன் எங்களை கைது செய்கிறீர்கள் நாங்கள் என்ன தவறு செய்தோம் என்று போலீசாரிடம் கேள்வி எழுப்பினர். அப்போது அங்கு இருந்த சில போலீசார்கள் பயணிகளிடம் அராஜகமாக நடந்துக்கொண்டனர். இதனை ஒரே நாடு செய்தியாளர் தங்கவேல் செல்போனில் படம் எடுத்தார்.

அப்போது அங்கு ஆய்வுக்காக வந்த மதுரை காவல் ஆணையர் லோகநாதன் ஏன் வீடியோ எடுக்கிறீர்கள் என பத்திரிகையாளர்களிடம் கேள்வி எழுப்பினர். இதுப்பற்றிய செய்தி பொதுமக்கள் மத்தியில் தெரிந்தால் பிரச்சனை ஆகிவிடும் என்று ஒரே நாடு செய்தியாளர் தங்கவேல் அவர்களின் செல்போனை பிடுங்கிக்கொண்டார். அங்கு மற்ற பத்திரிகையாளர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். செய்தி சேகரிப்பது எங்கள் கடமை அதை தடுக்க போலீசாருக்கு உரிமை இல்லை என்று கூறினர். இதன் பின்னர் செல்போனை ஒப்படைத்த காவல் ஆணையர் லோகநாதன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் மட்டுமின்றி விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல் என பல்வேறு மாவட்டங்களில் உள்ள ரயில் நிலையங்களிலும் போலீசார் அத்துமீறி பயணிகளை கைது செய்துள்ளனர். ரயில் நிலையம் முழுவதும் ரயில்வே காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. எப்படி மாநில காவல்துறை ரயில் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து பயணிகளை கைது செய்யலாம். எனவே அத்துமீறிய காவல்துறையினர் மீது ரயில்வே காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தமிழ்நாடு Tags:#Bjp, #Oreynaadu, #Tamilnadu

Post navigation

Previous Post: திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் பிரதமர் மோடி
Next Post: முருக பக்தர்கள் மீது கை வைப்பதா? சேகர்பாபு, ரகுபதியை எச்சரித்த தலைவர் அண்ணாமலை

Related Posts

  • தலைவர் அண்ணாமலை விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதி வெற்றி: டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்த மத்திய அரசு தமிழ்நாடு
  • மோடி ஐயா உங்களுடன் இருப்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளார் : மதுரை விவசாயிகள் மத்தியில் தலைவர் அண்ணாமலை பெருமிதம் தமிழ்நாடு
  • ஸ்ரீ கந்தர் மலைக்காக சிறைச்சென்று ஜாமினில் வந்த பாஜக நிர்வாகிக்கு உற்சாக வரவேற்பு தமிழ்நாடு
  • சமூக வலைத்தளத்தில் அவதூறு பதிவு : சுந்தரவள்ளி மீது தருமபுரி எஸ்.பி., அலுவலகத்தில் பாஜக மகளிர் அணி புகார் தமிழ்நாடு
  • ஈரோடு இரட்டை கொலை; கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு அண்ணாமலை நேரில் ஆறுதல் தமிழ்நாடு
  • பயிற்சி முடித்த 478 ராணுவ அதிகாரிகளுக்கு பட்டங்களை வழங்கினார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழ்நாடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • முக்கியமான காலகட்டத்தில் பயணிப்பதால் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்: அமைச்சகங்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
  • ஆபரேஷன் சிந்தூர்: ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி விளக்கம்
  • ‘ஆபரேஷன் சிந்தூர்’ பெயர் வைக்க காரணம் என்ன?
  • “ஆபரேஷன் சிந்தூர்” இந்தியா நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலி?
  • ஈரோடு இரட்டை கொலை; கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு அண்ணாமலை நேரில் ஆறுதல்

Recent Comments

No comments to show.

Archives

  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு
  • ஒவ்வொரு பாஜக தொண்டரும் திமுக ஆட்சியை வேறோடு பிடுங்கி எறியத் தயாராகி விட்டார்கள்: கோவையில் தலைவர் அண்ணாமலை கர்ஜனை அரசியல்
  • அமைச்சர் கமிஷன் காந்தி ஊழலுக்கு சப்பைக்கட்டு கட்டாமல் உடனடியாக பதவி விலக வேண்டும் : தலைவர் அண்ணாமலை அரசியல்
  • தலைவர் அண்ணாமலை விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதி வெற்றி: டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்த மத்திய அரசு தமிழ்நாடு
  • இசை இறைவனுடன் ஒரு சந்திப்பு: தலைவர் அண்ணாமலை நெகிழ்ச்சி தமிழ்நாடு
  • பாஜக துவக்க நாளை முன்னிட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணி அரசியல்
  • வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதில் மகளிர் சக்திக்கு பெரும் பங்கு உள்ளது : பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா
  • தமிழகத்தை சேர்ந்த 25 பேர் ஐபிஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு: அண்ணாமலை வாழ்த்து அரசியல்
  • டெல்லியில் 67 தொகுதிகளில் டெபாசிட் இழந்த காங்கிரஸ் இந்தியா

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme