Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • தமிழக அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக இயக்கியதன் விளைவாக அமலாக்கத்துறை சோதனை: அண்ணாமலை நாடு
  • டெல்லியில் ஒவ்வொரு ஊழலும் விசாரிக்கப்படும்; கொள்ளை அடித்தவர்கள் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும்: பிரதமர் மோடி இந்தியா
  • நிர்வாகத் தோல்வியை மடைமாற்ற மும்மொழிக் கொள்கையை கையில் எடுத்த திமுக: தலைவர் அண்ணாமலை அரசியல்
  • மக்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் தயாநிதி மாறன்: சபாநாயகர் ஓம் பிர்லா கடும் எச்சரிக்கை இந்தியா
  • மும்மொழிக் கல்விக்கு ஆதரவாக பாஜக சார்பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தொடக்கம் அரசியல்
  • மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து பெற சென்ற தமிழிசையை 3 மணி நேரம் வெயிலில் காக்க வைத்த போலீஸ் அரசியல்
  • தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்: சேலத்தில் தலைவர் நயினார் நாகேந்திரன் நாடு
  • திமுக ஆட்சியில் குற்றங்கள் தமிழ்நாடு

“ஆபரேஷன் சிந்தூர்” இந்தியா நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலி?

Posted on May 7, 2025May 7, 2025 By வ.தங்கவேல் No Comments on “ஆபரேஷன் சிந்தூர்” இந்தியா நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலி?

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது மாபெரும் தாக்குதலை இன்று நள்ளிரவு 1.44 மணிக்கு நடத்தியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 அன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 26 ஹிந்து சுற்றுலாப்பயணிகளை சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. சவுதி அரேபியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அனைத்து பயணங்களையும் பாதியில் ரத்து செய்து நாடு திரும்பினார்.

டெல்லி விமான நிலையத்திலேயே ராணுவ அதிகாரிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் பயங்கரவாதிகளுக்கு சரியான பதிலடி கொடுப்பதற்காக தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மற்றும் முப்படை தலைமை தளபதி, ராணுவ தளபதிகள் என அடுத்தடுத்த ஆலோசனைகளை பிரதமர் நடத்தி முடித்தார்.
மேலும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க முப்படைகளுக்கும் முழுச் சுதந்திரம் அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த அறிவித்திருந்தார்.

இதனால் பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் எப்போது வேண்டுமானாலும் தாக்குதலை நடத்தும் என உலக நாடுகள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

அதன்படி மே 6 மற்றும் 7ம் தேதி நாடு முழுவதும் 244 மாவட்டங்களில் போர் ஒத்திகை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதற்கான ஏற்பாடுகளில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.

இந்தநிலையில், யாரும் எதிர்பாராத விதமாக இன்று (மே 07) நள்ளிரவு பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஸ் இ முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் முகாம்களைக் குறிவைத்து இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மொத்தம் 9 இடங்களில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்படி பவல்பூர், முரிட்கே, சியால்கோட், சகாம்ரு, குல்பூர், பிம்பர், கோட்லி மற்றும் முசாபராபாத் ஆகிய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலும், சியால்கோட், பஹவல்பூர், சக் அம்ரு மற்றும் முரிட்கே உள்ளிட்ட பாகிஸ்தான் நகரங்களிலும் உள்ள பயங்கரவாத முகாம்களில் மட்டும் துல்லிய தாக்குதலை இந்தியா நடத்தி உள்ளது.

இந்நிலையில், இந்த தாக்குதலில் பயங்கராவதிகள் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் பலர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

பஹவல்பூர் மற்றும் முரிட்கே ஆகிய இரண்டு முக்கிய பயங்கரவாத முகாம்களில் மிகப்பெரிய தாக்குதல்கள் பதிவாகி உள்ளன, அங்கு ஒவ்வொரு தளத்திலும் சுமார் 25-30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்திய உளவுத்துறை தற்போது மற்ற இலக்கு முகாம்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை சரிபார்த்து வருகிறது.

இந்த தாக்குதலுக்கு ‘‘ஆபரேஷன் சிந்தூர்’’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் முப்படைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்து நீதி நிலைநாட்டப்பட்டது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ராணுவம் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப் பதிவில், ‘‘பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், நீதி நிலைநாட்டப்பட்டது. ஜெய் ஹிந்த். ஆபரேஷன் சிந்தூர்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பயங்கரவாதிகளுக்கு தக்க பாடம் புகட்டிய இந்திய ராணுவத்துக்கு நாட்டு மக்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் சமூக வலைத்தளம் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். மேலும் ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கும் பொதுமக்கள் தங்களது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியா Tags:#Bjp, #Indian Army, #Oreynaadu, #PM Modi

Post navigation

Previous Post: ஈரோடு இரட்டை கொலை; கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு அண்ணாமலை நேரில் ஆறுதல்
Next Post: ‘ஆபரேஷன் சிந்தூர்’ பெயர் வைக்க காரணம் என்ன?

Related Posts

  • பிரதமர் மோடி மிகச்சிறந்த தலைவர்: அதிபர் டிரம்ப் புகழாரம் இந்தியா
  • சமூகத்துக்கு ஆர்எஸ்எஸ் செய்த பங்களிப்பு என்ன? லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் கலந்துரையாடலில் பிரதமர் மோடி விளக்கம் இந்தியா
  • தமிழ் மொழியின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் பிரதமர்: காசி தமிழ்ச் சங்கமத்தில் தலைவர் அண்ணாமலை இந்தியா
  • டெல்லியில் ஒவ்வொரு ஊழலும் விசாரிக்கப்படும்; கொள்ளை அடித்தவர்கள் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும்: பிரதமர் மோடி இந்தியா
  • முக்கியமான காலகட்டத்தில் பயணிப்பதால் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்: அமைச்சகங்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை இந்தியா
  • 3 நாளில் பாகிஸ்தானை மண்டியிட வைத்த இந்திய ராணுவம்: ஜம்மு காஷ்மீர் ஆளுநர் இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • உங்கள் வீட்டுப் பிள்ளை; நயினார் பேசுகிறேன்; தொடர்பில் இருப்போம்… தொடர்ந்து பேசுவோம்…!
  • தமிழகத்தில் புனரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
  • பாஜக ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துரையாடிய நயினார் நாகேந்திரன்
  • 3 நாளில் பாகிஸ்தானை மண்டியிட வைத்த இந்திய ராணுவம்: ஜம்மு காஷ்மீர் ஆளுநர்
  • போலீஸிடம் வழங்கிய ஆதாரம் ஐடிவிங் நிர்வாகிக்கு சென்றது எப்படி? திமுக நிர்வாகி மீது புகார் அளித்த இளம்பெண் கண்ணீர்

Recent Comments

No comments to show.

Archives

  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை:பட்டியலின, பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு தலா ரூ.2 கோடி கடன்; பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு இந்தியா
  • இந்தியா உலக வல்லரசாக மாறி வருகிறது : பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா
  • புதிய பாம்பன் ரயில் பாலத்தை ராம நவமி நாளில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி தமிழ்நாடு
  • கெட்அவுட் ஸ்டாலின்: தருமபுரி பாஜக சார்பில் முழக்கம் அரசியல்
  • ஒவ்வொரு பாஜக தொண்டரும் திமுக ஆட்சியை வேறோடு பிடுங்கி எறியத் தயாராகி விட்டார்கள்: கோவையில் தலைவர் அண்ணாமலை கர்ஜனை அரசியல்
  • கந்த புராணமும், கந்த சஷ்டி கவசமும் இருப்பது போல் கந்தர் மலையும் இந்துக்களுக்காக இருக்கும் : ஹெச்.ராஜா அரசியல்
  • பயிற்சி முடித்த 478 ராணுவ அதிகாரிகளுக்கு பட்டங்களை வழங்கினார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழ்நாடு
  • தமிழகத்தில் புனரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார் இந்தியா

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme