பாஜக தொண்டர்களாகிய நாங்கள், நமது கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் மக்களிடையே களப்பணியாற்றிய உத்வேகம் அளிக்கும் ஆளுமைகளை நமது கட்சி கொண்டிருப்பதையிட்டுப் பெருமை கொள்கிறோம் என பிரதமர் நரேந்திர தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் (மே 09) வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:
இன்று, மேற்கு வங்கத்தில் முதல் பாஜக அரசு பதவியேற்கும் வேளையில், டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியையும், நாட்டிற்கும் குறிப்பாக மேற்கு வங்கத்திற்கும் அவர் ஆற்றிய அழியாப் பங்களிப்புகளையும் நாம் அனைவரும் நினைவுகூர்வது இயல்பானதே. அவரது கனவை நனவாக்குவதில் நாங்கள் எவ்வித முயற்சியையும் விட்டுவைக்க மாட்டோம்.
கொல்கத்தாவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், திரு. மக்கோன்லால் சர்க்கார் அவர்களை நான் சந்தித்தேன். மிகுந்த தேசபக்தரான திரு. சர்க்கார், டாக்டர் முகர்ஜியுடன் இணைந்து பணியாற்றியவர்; ஜம்மு காஷ்மீரில் டாக்டர் முகர்ஜியின் தோழராகப் பயணித்த காலத்தில் அவரும் கைது செய்யப்பட்டவர் ஆவார். மேற்கு வங்கம் முழுவதும் நமது கட்சியின் அடித்தளத்தை விரிவுபடுத்துவதிலும், அனைத்துத் தரப்பு மக்களையும் கட்சியில் இணையத் தூண்டுவதிலும் அவர் தனது வாழ்வையே அர்ப்பணித்துள்ளார்.
பாஜக தொண்டர்களாகிய நாங்கள், நமது கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் மக்களிடையே களப்பணியாற்றிய, இத்தகைய உத்வேகம் அளிக்கும் ஆளுமைகளை நமது கட்சி கொண்டிருப்பதையிட்டுப் பெருமை கொள்கிறோம். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.



