Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • டெல்லியில் ஒவ்வொரு ஊழலும் விசாரிக்கப்படும்; கொள்ளை அடித்தவர்கள் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும்: பிரதமர் மோடி இந்தியா
  • திமுக ஆட்சி தொடர்ந்தால் தமிழ்நாட்டில் இனி யாரும் வாழவே முடியாது: ஈரோட்டில் நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை அரசியல்
  • வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதில் மகளிர் சக்திக்கு பெரும் பங்கு உள்ளது : பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா
  • தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க இந்து விரோத திமுக அரசு அனுமதி தமிழ்நாடு
  • டங்ஸ்டன் சுரங்கம் வராது; மீறி வந்தால் களத்தில் இறங்க தயார்: தலைவர் அண்ணாமலை உறுதி அரசியல்
  • கல்வித்துறையில் ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கிய திமுகவால் பள்ளி குழந்தைகளுக்கு எதுவுமே செய்துக்கொடுக்கவில்லை : கரூரில் தலைவர் அண்ணாமலை அரசியல்
  • 22 லட்சம் மரங்களை நட்டு சாதனை: வனத்துக்குள் திருப்பூர் அமைப்புக்கு தலைவர் அண்ணாமலை பாராட்டு தமிழ்நாடு
  • பயிற்சி முடித்த 478 ராணுவ அதிகாரிகளுக்கு பட்டங்களை வழங்கினார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலைவாய்ப்பு முகாம்

Posted on October 26, 2025October 26, 2025 By வ.தங்கவேல் No Comments on கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி சார்பில் நடந்தது. இதில் முதற்கட்டமாக 150 பேருக்கு பணி நியமன ஆணைகளை இளைஞர் அணி மாநில தலைவர் எஸ்.ஜி.சூர்யா வழங்கினார்.

கிருஷ்ணகிரி பாரதிய ஜனதா கட்சி இளைஞரணி சார்பில் (அக்டோபர் 25) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் கவியரசு தலைமை வகித்தார். தருமபுரி மாவட்ட தலைவர் சரவணன் சிறப்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா கலந்துகொண்டு 150 மகளிருக்கு வேலைவாய்ப்புக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயற்குழு உறுப்பினர் சிவப்பிரகாசம், முன்னாள் மாநிலத் தலைவர் முனாவரி பேகம், மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேந்திரன், கிருஷ்ணகிரி நகரத் தலைவி விமலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா பேசியதாவது: கட்சியின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் பொதுமக்களின் நலனுக்காக மட்டுமே இம்முகாம் நடத்தப்படுகிறது. இதில் கலந்துகொண்ட அனைத்து மகளிர்களுக்கும் நிச்சய பணி என்ற குறிக்கோளோடு இம்முகாம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் பாஜக இளைஞர் அணி சார்பாக தொடர்ந்து நடத்தி 5 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் வழங்குவது தங்களின் நோக்கம் இதற்காக மாவட்ட இளைஞரணி குழுவினர் அயராது உழைக்க வேண்டும். இவ்வாறு எஸ்.ஜி.சூர்யா கூறியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக எஸ்.ஜி.சூர்யா சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது: பா.ஜ.க இளைஞர் அணி சார்பாக 150 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியதில் மட்டற்ற மகிழ்ச்சி.
அடுத்த 4 மாதங்களில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், இராணிப்பேட்டை பகுதிகளில் 5,000 பெண்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தர, பா.ஜ.க., மாநில இளைஞர் அணித் தலைவர் என்ற முறையில் உறுதியளித்துள்ளோம்.

மாதம் ரூ.20,000 வரை சம்பளத்துடன், இலவசப் போக்குவரத்து, உணவு மற்றும் தங்குமிட வசதிகளும் இந்த வேலைவாய்ப்புகளில் அடங்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நிகழ்வைச் சிறப்பாக ஏற்பாடு செய்த இளைஞர் அணி மாநிலச் செயலாளர் பிரபாகரன் அவர்களுக்குப் பாராட்டுகள். இந்நிகழ்வில் கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் கவியரசு, தருமபுரி மாவட்டத் தலைவர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த வாய்ப்பை வழங்கிய இறைவனுக்கு நன்றி. இவ்வாறு எஸ்.ஜி.சூர்யா கூறியுள்ளார்.

தமிழ்நாடு Tags:#Annamalai, #Bjp, #nainar nagendran, #Oreynaadu, #Tamilnadu

Post navigation

Previous Post: மக்கள் விரோத ஆட்சி நடத்தும் திமுகவுக்கு சட்டமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டப்படும்: பெரம்பலூரில் நயினார் நாகேந்திரன்
Next Post: ‘மோந்தா’ புயல்; மாவட்டம் வாரியாக குழுக்கள் அமைத்து தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தரவு

Related Posts

  • முருக பக்தர்கள் மாநாடு: காசி விஸ்வநாதர் கோவிலில் பாஜக சார்பில் சிறப்பு பூஜை தமிழ்நாடு
  • சமூக வலைத்தளத்தில் அவதூறு பதிவு : சுந்தரவள்ளி மீது தருமபுரி எஸ்.பி., அலுவலகத்தில் பாஜக மகளிர் அணி புகார் தமிழ்நாடு
  • இல.கணேசன் உடலுக்கு நயினார் நாகேந்திரன் நேரில் அஞ்சலி தமிழ்நாடு
  • ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கருணாநிதி வரவேற்றார்; ஸ்டாலின் எதிர்க்கிறார் : பவன் கல்யாண் தமிழ்நாடு
  • சைவ சித்தாந்தம் என்பது மதம் சார்ந்தது அல்ல, ஆன்மா சார்ந்தது : மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா தமிழ்நாடு
  • உரிமைக்காக போராடிய தூய்மை பணியாளர்கள் கைது; நள்ளிரவில் போலீசாரை அனுப்பி வீரத்தை காண்பித்த திராவிட மாடல் தமிழ்நாடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
  • கல்வியாளர் பிரிவு மாநில செயலாளருக்கு நியமன கடிதம் வழங்கிய தலைவர் நயினார் நாகேந்திரன்
  • விவசாயிகள் இறந்தால் 3 லட்சம் சாராயம் குடித்து இறந்தால் 10 லட்சம்; இதுதான் திராவிட மாடல்: உடுமலையில் நயினார் நாகேந்திரன் பேச்சு
  • விடியா அரசைக் கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்
  • பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு ஆலோசனைகள் வழங்கிய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்

Recent Comments

No comments to show.

Archives

  • November 2025
  • October 2025
  • September 2025
  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • மக்கள் விரோத ஆட்சி நடத்தும் திமுகவுக்கு சட்டமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டப்படும்: பெரம்பலூரில் நயினார் நாகேந்திரன் அரசியல்
  • பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு இந்தியா
  • தமிழகத்தில் ரூ.22,800 கோடி ரயில்வே திட்டங்களுக்கு அனுமதி ; மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தமிழ்நாடு
  • போலீஸிடம் வழங்கிய ஆதாரம் ஐடிவிங் நிர்வாகிக்கு சென்றது எப்படி? திமுக நிர்வாகி மீது புகார் அளித்த இளம்பெண் கண்ணீர் தமிழ்நாடு
  • ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கருணாநிதி வரவேற்றார்; ஸ்டாலின் எதிர்க்கிறார் : பவன் கல்யாண் தமிழ்நாடு
  • உள்துறை அமைச்சர் பற்றி அவதூறு பேச்சு: ராசா மீது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் புகார் தமிழ்நாடு
  • இந்தியா உலக வல்லரசாக மாறி வருகிறது : பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா
  • ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை:பட்டியலின, பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு தலா ரூ.2 கோடி கடன்; பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு இந்தியா

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme