Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • அமைச்சர் கமிஷன் காந்தி ஊழலுக்கு சப்பைக்கட்டு கட்டாமல் உடனடியாக பதவி விலக வேண்டும் : தலைவர் அண்ணாமலை அரசியல்
  • கந்த புராணமும், கந்த சஷ்டி கவசமும் இருப்பது போல் கந்தர் மலையும் இந்துக்களுக்காக இருக்கும் : ஹெச்.ராஜா அரசியல்
  • திமுக அரசு செய்த தவறை மறைக்க ஊடகங்களை தவறாக பயன்படுத்தி வருகிறது : கே.பி.ராமலிங்கம் நாடு
  • சமூகத்துக்கு ஆர்எஸ்எஸ் செய்த பங்களிப்பு என்ன? லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் கலந்துரையாடலில் பிரதமர் மோடி விளக்கம் இந்தியா
  • தமிழகத்தில் புனரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார் இந்தியா
  • ஆபரேஷன் சிந்தூர்: ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி விளக்கம் இந்தியா
  • குற்றவாளிகளை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்ல திமுக அரசு தயாராக இருப்பதன் மர்மம் என்ன? தலைவர் அண்ணாமலை அரசியல்
  • ஏ.டி.எம்., யு.பி.ஐ.யில் முகத்தை காட்டினால் பணப் பரிமாற்றம் நடக்கும்: விரைவில் புதிய வசதி இந்தியா

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலைவாய்ப்பு முகாம்

Posted on October 26, 2025October 26, 2025 By வ.தங்கவேல் No Comments on கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி சார்பில் நடந்தது. இதில் முதற்கட்டமாக 150 பேருக்கு பணி நியமன ஆணைகளை இளைஞர் அணி மாநில தலைவர் எஸ்.ஜி.சூர்யா வழங்கினார்.

கிருஷ்ணகிரி பாரதிய ஜனதா கட்சி இளைஞரணி சார்பில் (அக்டோபர் 25) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் கவியரசு தலைமை வகித்தார். தருமபுரி மாவட்ட தலைவர் சரவணன் சிறப்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா கலந்துகொண்டு 150 மகளிருக்கு வேலைவாய்ப்புக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயற்குழு உறுப்பினர் சிவப்பிரகாசம், முன்னாள் மாநிலத் தலைவர் முனாவரி பேகம், மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேந்திரன், கிருஷ்ணகிரி நகரத் தலைவி விமலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா பேசியதாவது: கட்சியின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் பொதுமக்களின் நலனுக்காக மட்டுமே இம்முகாம் நடத்தப்படுகிறது. இதில் கலந்துகொண்ட அனைத்து மகளிர்களுக்கும் நிச்சய பணி என்ற குறிக்கோளோடு இம்முகாம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் பாஜக இளைஞர் அணி சார்பாக தொடர்ந்து நடத்தி 5 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் வழங்குவது தங்களின் நோக்கம் இதற்காக மாவட்ட இளைஞரணி குழுவினர் அயராது உழைக்க வேண்டும். இவ்வாறு எஸ்.ஜி.சூர்யா கூறியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக எஸ்.ஜி.சூர்யா சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது: பா.ஜ.க இளைஞர் அணி சார்பாக 150 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியதில் மட்டற்ற மகிழ்ச்சி.
அடுத்த 4 மாதங்களில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், இராணிப்பேட்டை பகுதிகளில் 5,000 பெண்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தர, பா.ஜ.க., மாநில இளைஞர் அணித் தலைவர் என்ற முறையில் உறுதியளித்துள்ளோம்.

மாதம் ரூ.20,000 வரை சம்பளத்துடன், இலவசப் போக்குவரத்து, உணவு மற்றும் தங்குமிட வசதிகளும் இந்த வேலைவாய்ப்புகளில் அடங்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நிகழ்வைச் சிறப்பாக ஏற்பாடு செய்த இளைஞர் அணி மாநிலச் செயலாளர் பிரபாகரன் அவர்களுக்குப் பாராட்டுகள். இந்நிகழ்வில் கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் கவியரசு, தருமபுரி மாவட்டத் தலைவர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த வாய்ப்பை வழங்கிய இறைவனுக்கு நன்றி. இவ்வாறு எஸ்.ஜி.சூர்யா கூறியுள்ளார்.

தமிழ்நாடு Tags:#Annamalai, #Bjp, #nainar nagendran, #Oreynaadu, #Tamilnadu

Post navigation

Previous Post: மக்கள் விரோத ஆட்சி நடத்தும் திமுகவுக்கு சட்டமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டப்படும்: பெரம்பலூரில் நயினார் நாகேந்திரன்

Related Posts

  • இல.கணேசன் உடலுக்கு நயினார் நாகேந்திரன் நேரில் அஞ்சலி தமிழ்நாடு
  • அஜித்குமார் கொலையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்: நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க இந்து விரோத திமுக அரசு அனுமதி தமிழ்நாடு
  • தினமலர் நிறுவனர் ராமசுப்பையர் நினைவு தினம்: நயினார் நாகேந்திரன் மரியாதை தமிழ்நாடு
  • ரூ.4 கோடி விவகாரத்தில் உண்மைக்கு மாறான தகவலை வெளியிடும் சிபிசிஐடி அதிகாரிகள் மற்றும் சன்நியூஸ், புதிய தலைமுறைக்கு நயினார் நாகேந்திரன் நோட்டீஸ் தமிழ்நாடு
  • பாஜக ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துரையாடிய நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலைவாய்ப்பு முகாம்
  • மக்கள் விரோத ஆட்சி நடத்தும் திமுகவுக்கு சட்டமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டப்படும்: பெரம்பலூரில் நயினார் நாகேந்திரன்
  • ஸ்ரீ நாராயண குருவின் போதனைகள் காலத்தால் அழியாதவை: ஜனாதிபதி திரௌபதி முர்மு
  • விரைவில் திருட்டு திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தை விட்டு விரட்டப்படும்: வடசென்னையில் நயினார் நாகேந்திரன் சூளுரை
  • திமுக ஆட்சியில் போதையின் கூடாரமாகவும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற கோட்டையாக செங்கல்பட்டு மாறிவிட்டது: நயினார் நாகேந்திரன்

Recent Comments

No comments to show.

Archives

  • October 2025
  • September 2025
  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • முஸ்லிம் அமைப்பை கேள்வி கேட்க துப்பில்லாத காவல்துறை இந்துக்களுக்கு மட்டும் ஏன் கெடுபிடி? பேராசிரியர் இராம ஸ்ரீனிவாசன் தமிழ்நாடு
  • பஹல்காமில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் வெறியாட்டம்; ‘‘நீ ஹிந்துவா?’’ என கேட்டு, கேட்டு 28 சுற்றுலாப்பயணிகளை கொன்ற கொடூரம் இந்தியா
  • கல்வித்துறையில் ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கிய திமுகவால் பள்ளி குழந்தைகளுக்கு எதுவுமே செய்துக்கொடுக்கவில்லை : கரூரில் தலைவர் அண்ணாமலை அரசியல்
  • இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே நல்ல தருணம் : பிரான்ஸில் பிரதமர் மோடி உரை உலகம்
  • உங்கள் வீட்டுப் பிள்ளை; நயினார் பேசுகிறேன்; தொடர்பில் இருப்போம்… தொடர்ந்து பேசுவோம்…! அரசியல்
  • பாஜக துவக்க நாளை முன்னிட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணி அரசியல்
  • மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடியின் எக்ஸ் சமூக வலைத்தளத்தை கையாளும் செஸ் வீராங்கனை வைஷாலி இந்தியா
  • திருஞானச் செல்வி தியாவை சந்தித்தது மட்டில்லா மகிழ்ச்சியை தந்தது; நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme