Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • பிரான்சில் இந்திய துணைத் தூதரகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி உலகம்
  • இசை இறைவனுடன் ஒரு சந்திப்பு: தலைவர் அண்ணாமலை நெகிழ்ச்சி தமிழ்நாடு
  • தருமபுரி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.,க்கு மிரட்டல்: திமுக மாவட்ட பொறுப்பாளர் மீது பாஜக புகார் அரசியல்
  • நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த நெல்லை மாணவர் தமிழ்நாடு
  • பயிற்சி முடித்த 478 ராணுவ அதிகாரிகளுக்கு பட்டங்களை வழங்கினார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழ்நாடு
  • சமூக வலைத்தளத்தில் அவதூறு பதிவு : சுந்தரவள்ளி மீது தருமபுரி எஸ்.பி., அலுவலகத்தில் பாஜக மகளிர் அணி புகார் தமிழ்நாடு
  • அனைவருடைய கனவுகளையும் நிறைவேற்றக்கூடிய வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட்: பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா
  • உரிமைக்காக போராடிய தூய்மை பணியாளர்கள் கைது; நள்ளிரவில் போலீசாரை அனுப்பி வீரத்தை காண்பித்த திராவிட மாடல் தமிழ்நாடு

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளது என்பதற்கு ஈசிஆர் சம்பவம் ஓர் உதாரணம் : தலைவர் அண்ணாமலை

Posted on January 30, 2025 By admin No Comments on திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளது என்பதற்கு ஈசிஆர் சம்பவம் ஓர் உதாரணம் : தலைவர் அண்ணாமலை

சென்னை ஈ.சி.ஆரில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. அங்கு காரில் பெண்களை துரத்திய சம்பவம் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளது என்பதற்கு ஈசிஆர் சம்பவம் ஓர் உதாரணம் என தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன் காரில் சென்று கொண்டிருந்த பெண்களை, திமுக கொடி பொருத்தப்பட்ட வேறொரு காரில் பின் தொடர்ந்த சில போதை ஆசாமிகள் அவர்களை வழிமறிக்க முயல்வதையும், மூர்க்கத்தனமாக அப்பெண்களை மீண்டும், மீண்டும் துரத்துவதையும், அப்பெண்கள் உயிர் பயத்தில் பதறும் வீடியோ காட்சிகளையும் காண்கையில் நமது நெஞ்சம் பதைபதைக்கிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் குற்றவாளிகளை கைது செய்யாமல் புகார் கொடுத்த பெண்களின் விவரங்களை வெளியிட்டது திராவிட மாடல் அரசு. ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழக மாணவி விஷயத்திலும் இதே நிலையைத்தான் திராவிட மாடல் அரசு எடுத்திருந்தது.

இந்தநிலையில், சென்னையில் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள் நானும் பார்த்தேன். ஏனென்றால் ஈசிஆர் பகுதியில் தான் வசித்து வருகின்றேன். பெண்கள், இளைஞர்கள் என எப்போதும் மாலை மற்றும் இரவு நேரங்களில் அதிகமாக செல்கிறார்கள். ஆனால் நாம் பார்க்கும் போதெல்லாம், அங்கு போலீஸ் பாதுகாப்பு குறைவாகத்தான் இருக்கிறது.

சரியான பாதுகாப்பு அங்கே இருக்காது. அதிகாலை, நள்ளிரவு நேரங்களில் அங்கு சரியான பாதுகாப்பு இருக்காது. இன்றைக்கு திமுக கட்சியின் கொடி போட்டிருந்த காரில் வந்தவர்கள், அந்த பெண்களிடம் மிக மோசமாக நடந்துக்கொள்ளக் கூடிய வீடியோ.. இதை எல்லாரும் பார்த்து இருப்பீங்க. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதற்கு பல உதாரணங்கள் பார்த்து இருப்போம். இருந்தாலும் கூட தினமும் ஒரு உதாரணங்கள் புதுசு புதுசாக வந்துகொண்டிருக்கின்றன.

நாட்டில் பெண் ஒருவர் சுதந்திரமாக என்றைக்கு நடந்து செல்கிறார்களோ அன்றைக்கு முழு சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம். இந்தியா முழுவதும் சுதந்திரம் கிடைத்துவிட்டதாக நினைக்கிறேன். ஆனால் தமிழகத்திற்கு மட்டும் முழு சுதந்திரம் கிடைக்கவில்லை. ஏனென்றால் நள்ளிரவில் பெண்கள் சென்றால் பிரச்சினை. பகலில் சென்றாலும் பிரச்சினை. அண்ணா பல்கலைக்கழகம் வளாகத்திலும் அங்கு படிக்கக் கூடிய பெண்களுக்கு பிரச்சினை.

இரவு 7 மணியை தாண்டினாலும் பிரச்சினை. எல்லா நேரத்திலும்கூட தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தினமும் நிரூபணம் ஆகிக்கொண்டு இருக்கிறது. இதற்கு இன்னொரு சான்றாக தான் ஈசிஆர் சம்பவம். திமுக அரசிடம் சொல்வது என்னவென்றால், காவல்துறைக்கு ரோந்து வாகனம் வாங்கி கொடுங்க. காவல்துறைக்கு எந்தவித உபகரணங்கள் கொடுக்காமல், வேலைக்கு ஆட்கள் எடுக்காமல், காவல் நிலையங்களை அதிகப்படுத்தாமல், கையாலாகாத திராவிட மாடல் என்று சொல்லும் திமுக அரசு, பெண்களுக்கு எதிராக நடக்கின்ற அட்டூழியங்களை அடக்குவதற்கு ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடாமல் இருக்கிறார்கள். இதனை மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதை முதல்வர் ஸ்டாலின் நினைத்து பார்க்க வேண்டும். இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறினார்.

அரசியல் Tags:#Annamalai, #Bjp, #Oreynaadu, #Tamilnadu

Post navigation

Previous Post: மகாத்மா காந்தி நினைவு தினம்: ராஜ்காட்டில் பிரதமர் மோடி மரியாதை
Next Post: மோடி ஐயா உங்களுடன் இருப்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளார் : மதுரை விவசாயிகள் மத்தியில் தலைவர் அண்ணாமலை பெருமிதம்

Related Posts

  • கர்மவீரர் காமராஜரை தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக : பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் அரசியல்
  • சி.பி.ராதாகிருஷ்ணனை அனைத்து கட்சிகளும் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும் : ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் அரசியல்
  • அமைச்சர் கமிஷன் காந்தி ஊழலுக்கு சப்பைக்கட்டு கட்டாமல் உடனடியாக பதவி விலக வேண்டும் : தலைவர் அண்ணாமலை அரசியல்
  • அமைப்பு பருவம் – 2025 புதிய மாவட்ட தலைவர்கள் பட்டியல் அறிவிப்பு அரசியல்
  • மும்மொழிக் கல்விக்கு ஆதரவாக பாஜக சார்பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தொடக்கம் அரசியல்
  • அப்பாவி இளைஞனைத் துள்ளத் துடிக்கக் கொன்றுவிட்டு “சாரி” என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி அரசியல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ரூ.6 லட்சம் கோடி முதலீட்டை ஜப்பான் நாட்டில் ஈர்க்க இந்தியா இலக்கு: பிரதமர் மோடி
  • பிஜியின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த இந்தியா பயிற்சி மற்றும் உபகரணங்களை வழங்கும்: பிரதமர் மோடி
  • நெல்லையில் பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாபெரும் மாநாடு: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு
  • சி.பி.ராதாகிருஷ்ணனை அனைத்து கட்சிகளும் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும் : ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்
  • இல.கணேசன் உடலுக்கு மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் நேரில் அஞ்சலி

Recent Comments

No comments to show.

Archives

  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • கடலூர் மாவட்ட பாஜகவினர் கைது : தலைவர் அண்ணாமலை கண்டனம் அரசியல்
  • அண்ணாமலையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, நிகிதாவுடன் தொடர்புபடுத்தி அவதூறு : பாஜக நிர்வாகி ராஜினி காவல்நிலையத்தில் புகார் அரசியல்
  • அஜித்குமார் கொலையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்: நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடுகள் மாதிரி அமைப்பு: மக்கள் தரிசனத்துக்கு இன்று முதல் அனுமதி தமிழ்நாடு
  • மத்திய அரசு வழங்கிய ரூ.1,050 கோடி நிதியை ஏப்பம் விட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் : தலைவர் அண்ணாமலை அரசியல்
  • ரூ.6 லட்சம் கோடி முதலீட்டை ஜப்பான் நாட்டில் ஈர்க்க இந்தியா இலக்கு: பிரதமர் மோடி இந்தியா
  • தமிழக அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக இயக்கியதன் விளைவாக அமலாக்கத்துறை சோதனை: அண்ணாமலை நாடு
  • தலைவர் அண்ணாமலை விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதி வெற்றி: டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்த மத்திய அரசு தமிழ்நாடு

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme