Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • சைவ சித்தாந்தம் என்பது மதம் சார்ந்தது அல்ல, ஆன்மா சார்ந்தது : மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா தமிழ்நாடு
  • அனைவருக்கும் பிரதமரின் இனிய 2025 புத்தாண்டு வாழ்த்து இந்தியா
  • சமூக வலைத்தளத்தில் அவதூறு பதிவு : சுந்தரவள்ளி மீது தருமபுரி எஸ்.பி., அலுவலகத்தில் பாஜக மகளிர் அணி புகார் தமிழ்நாடு
  • திமுக அரசு செய்த தவறை மறைக்க ஊடகங்களை தவறாக பயன்படுத்தி வருகிறது : கே.பி.ராமலிங்கம் அரசியல்
  • திருவள்ளுவரையும், திருக்குறளையும் களவாட நினைப்பதே திமுக கூட்டம்தான்: ஸ்டாலினுக்கு, வானதி சீனிவாசன் பதிலடி அரசியல்
  • பயிற்சி முடித்த 478 ராணுவ அதிகாரிகளுக்கு பட்டங்களை வழங்கினார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழ்நாடு
  • தருமபுரி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.,க்கு மிரட்டல்: திமுக மாவட்ட பொறுப்பாளர் மீது பாஜக புகார் அரசியல்
  • தீர்வு கொடுக்காமல் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விஜய்: தலைவர் அண்ணாமலை காட்டம் அரசியல்

டெல்லியில் 76-வது குடியரசு தின விழா கோலாகலம்: தேசியக் கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரௌபதி முர்மு

Posted on January 27, 2025 By admin No Comments on டெல்லியில் 76-வது குடியரசு தின விழா கோலாகலம்: தேசியக் கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரௌபதி முர்மு

டெல்லியில் 76-வது குடியரசு தின விழா நேற்று (ஜனவரி 26) கோலாகலமாக நடைபெற்றது. ஜனாதிபதி திரௌபதி முர்மு 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை ஏற்றினார். நாட்டின் வலிமையை பறைசாற்றும் வகையில் முப்படைகளின் பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெற்றது.

பாரத நாட்டின் 76-வது குடியரசு தின விழா மிகுந்த உற்சாகத்துடனும், மகிழ்ச்சி பெருக்குடனும் கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் உள்ள கடமை பாதையில் பிரம்மாண்ட விழா நடைபெற்றது. குதிரை படை சூழ சாரட் வாகனத்தில் விழாவுக்கு வந்த ஜனாதிபதி திரௌபதி முர்மு, சிறப்பு விருந்தினரான இந்தோனேசிய அதிபர் பிரபோவா சுபி யாண்டோவை, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. தலைமை தளபதி அனில் சவுகான், முப்படை தளபதிகள் பங்கேற்றனர்.

21 குண்டுகள் முழங்க ஜனாதிபதி திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றினார். இதைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவப்பட்டன.

பின்னர் நாட்டின் ராணுவ வலிமையை பறைசாற்றும் வகையில் ராணுவம், கடற்படை, விமானப் படை வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. துணை கமாண்டர் ஐஸ்வர்யா ஜாய் தலைமையில் சிஆர்பிஎஃப் படை வீராங்கனைகள் மிடுக்காக அணிவகுத்தனர். என்சிசி பெண்கள் அணியின் அணி வகுப்பை ஏக்தா குமாரி தலைமை ஏற்று நடத்தினார். என்சிசி பெண்கள் இசைக் குழுவை அனிதா குமாரி வழிநடத்தினார். கமாண்டர் தீபக் சிங் தலைமையில் என்எஸ்எஸ் பெண்கள் அணி கம்பீரமாக அணிவகுத்தது.

ரஃபேல் உட்பட 22 போர் விமானங்கள், 11 சரக்கு விமானங்கள், 7 ஹெலிகாப்டர்கள் வானில் சாகசங்களை நிகழ்த்தின. அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை மிஞ்சும் வகையில் அதிநவீன போர் விமானங்கள், பீரங்கிகள், ஏவுகணைகள் அணி வகுப்பில் இடம்பெற்றன.

உள்நாட்டில் தயாரான பிரசந்த் ஹெலிகாப்டர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இது 16,000 அடி உயரத்தில் பறக்கும் திறன் கொண்டது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிரளயம் ஏவுகணையும் அணிவகுப்பில் கம்பீரமாக பங்கேற்றது. இது மணிக்கு 2,000 கி.மீ. வேகத்தில் 500 கி.மீ. வரை சீறிப் பாயும் திறன் கொண்டது. சீன எல்லை பகுதிகளில் இது நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

ஆந்திரா, கர்நாடகா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 15 மாநிலங்களின் அலங்கார வாகனங்கள் அணிவகுப்பில் பங்கேற்றன. உத்தர பிரதேச அரசு சார்பில் மகா கும்பமேளாவை பிரதிபலிக்கும் வகையில் அலங்கார வாகனம் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

மத்திய அரசின் 16 துறைகளை சேர்ந்த அலங்கார வாகனங்கள் அணிவகுப்பில் இடம் பெற்றன. சுமார் 5,000 கலைஞர்கள் கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில், ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) தயாரித்த சோராவர் பீரங்கியும் இடம்பெற்றது. இது மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் செல்லும், மலைப் பகுதிகளில் எளிதாக ஏறும். நதிகளில் மிதந்து எளிதாக கரையை கடக்கும்.

டிஆர்டிஓ உருவாக்கிய துர்கா-2 ரக லேசர் கருவியும் அணிவகுப்பில் கவனத்தை ஈர்த்தது. நிலம், நீர், வான் பரப்பில் இதை பயன்படுத்த முடியும். இதன்மூலம் அணு ஆயுத ஏவுகணைகளை தாக்கி அழிக்கலாம். 25 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்குகளை இது துல்லியமாக தாக்கும்.

அமெரிக்காவின் ஹிமார்ஸ் ஏவுகணைக்கு இணையான பினாகா ஏவுகணைகள் கம்பீரமாக வலம் வந்தன. இது மணிக்கு 5,800 கி.மீ. வேகத்தில் சீறி பாயக்கூடியவை. அதிநவீன ராக்கெட் லாஞ்சர் மூலம் 44 விநாடிகளில் 12 பினாகா ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவ முடியும். இது 800 கி.மீ.வரையிலான இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும். நாக் ஏவுகணை, டி4எஸ் கவச வாகனம், டி-90 பீஷ்மா பீரங்கி, ஆருத்ரா, சஞ்சய் ரேடார்கள் உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்களும் கவனத்தை ஈர்த்தன.

இதே போன்று மற்ற மாநிலங்களில் ஆளுநர்கள் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினர். பள்ளி, கல்லூரிகளில் குடியரசுத் தினவிழா கோலாகலமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தியா Tags:#76th independence day, #Bjp, #PM Modi

Post navigation

Previous Post: 2026 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க கனிமவள கொள்ளை கும்பலை நம்பியிருக்கும் திமுக : தலைவர் அண்ணாமலை
Next Post: மகாத்மா காந்தி நினைவு தினம்: ராஜ்காட்டில் பிரதமர் மோடி மரியாதை

Related Posts

  • பிரதமர் மோடியை சந்தித்தார் அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்டு இந்தியா
  • மஹா கும்பமேளாவில் புனித நீராடிய தலைவர் அண்ணாமலை இந்தியா
  • மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடியின் எக்ஸ் சமூக வலைத்தளத்தை கையாளும் செஸ் வீராங்கனை வைஷாலி இந்தியா
  • அனைவருக்கும் பிரதமரின் இனிய 2025 புத்தாண்டு வாழ்த்து இந்தியா
  • டெல்லியில் ஒவ்வொரு ஊழலும் விசாரிக்கப்படும்; கொள்ளை அடித்தவர்கள் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும்: பிரதமர் மோடி இந்தியா
  • ஆபரேஷன் சிந்தூர்: ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி விளக்கம் இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • முக்கியமான காலகட்டத்தில் பயணிப்பதால் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்: அமைச்சகங்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
  • ஆபரேஷன் சிந்தூர்: ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி விளக்கம்
  • ‘ஆபரேஷன் சிந்தூர்’ பெயர் வைக்க காரணம் என்ன?
  • “ஆபரேஷன் சிந்தூர்” இந்தியா நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலி?
  • ஈரோடு இரட்டை கொலை; கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு அண்ணாமலை நேரில் ஆறுதல்

Recent Comments

No comments to show.

Archives

  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு
  • முக்கியமான காலகட்டத்தில் பயணிப்பதால் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்: அமைச்சகங்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை இந்தியா
  • யாழ்ப்பாணம் கலாச்சார மையத்துக்கு திருவள்ளூவர் பெயர் : தலைவர் அண்ணாமலை மகிழ்ச்சி அரசியல்
  • டங்ஸ்டன் சுரங்கம் அமையாது : விவசாய பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சரை சந்தித்தபின் தலைவர் அண்ணாமலை உறுதி இந்தியா
  • மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடியின் எக்ஸ் சமூக வலைத்தளத்தை கையாளும் செஸ் வீராங்கனை வைஷாலி இந்தியா
  • திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளது என்பதற்கு ஈசிஆர் சம்பவம் ஓர் உதாரணம் : தலைவர் அண்ணாமலை அரசியல்
  • இந்தியா உலக வல்லரசாக மாறி வருகிறது : பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா
  • திருவள்ளுவரையும், திருக்குறளையும் களவாட நினைப்பதே திமுக கூட்டம்தான்: ஸ்டாலினுக்கு, வானதி சீனிவாசன் பதிலடி அரசியல்
  • தேசப்பணிக்கு தயார்: மாஸ் காட்டும் இந்திய கடற்படை இந்தியா

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme