Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • அஜித்குமார் கொலையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்: நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே நல்ல தருணம் : பிரான்ஸில் பிரதமர் மோடி உரை உலகம்
  • திமுக ஆட்சியில் குற்றங்கள் தமிழ்நாடு
  • யாழ்ப்பாணம் கலாச்சார மையத்துக்கு திருவள்ளூவர் பெயர் : தலைவர் அண்ணாமலை மகிழ்ச்சி அரசியல்
  • நமது ஜனநாயகம் தொடர்ந்து வெற்றி பெறுகிறது: பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா
  • சசி தரூர், பினராயி விஜயன் இங்கே இருப்பதால் இண்டி கூட்டணியினர் பலர் தூக்கத்தை இழப்பார்கள்: கேரளாவில் பிரதமர் மோடி பேச்சு இந்தியா
  • ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கருணாநிதி வரவேற்றார்; ஸ்டாலின் எதிர்க்கிறார் : பவன் கல்யாண் தமிழ்நாடு
  • பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு இந்தியா

டெல்லியில் 76-வது குடியரசு தின விழா கோலாகலம்: தேசியக் கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரௌபதி முர்மு

Posted on January 27, 2025 By admin No Comments on டெல்லியில் 76-வது குடியரசு தின விழா கோலாகலம்: தேசியக் கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரௌபதி முர்மு

டெல்லியில் 76-வது குடியரசு தின விழா நேற்று (ஜனவரி 26) கோலாகலமாக நடைபெற்றது. ஜனாதிபதி திரௌபதி முர்மு 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை ஏற்றினார். நாட்டின் வலிமையை பறைசாற்றும் வகையில் முப்படைகளின் பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெற்றது.

பாரத நாட்டின் 76-வது குடியரசு தின விழா மிகுந்த உற்சாகத்துடனும், மகிழ்ச்சி பெருக்குடனும் கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் உள்ள கடமை பாதையில் பிரம்மாண்ட விழா நடைபெற்றது. குதிரை படை சூழ சாரட் வாகனத்தில் விழாவுக்கு வந்த ஜனாதிபதி திரௌபதி முர்மு, சிறப்பு விருந்தினரான இந்தோனேசிய அதிபர் பிரபோவா சுபி யாண்டோவை, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. தலைமை தளபதி அனில் சவுகான், முப்படை தளபதிகள் பங்கேற்றனர்.

21 குண்டுகள் முழங்க ஜனாதிபதி திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றினார். இதைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவப்பட்டன.

பின்னர் நாட்டின் ராணுவ வலிமையை பறைசாற்றும் வகையில் ராணுவம், கடற்படை, விமானப் படை வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. துணை கமாண்டர் ஐஸ்வர்யா ஜாய் தலைமையில் சிஆர்பிஎஃப் படை வீராங்கனைகள் மிடுக்காக அணிவகுத்தனர். என்சிசி பெண்கள் அணியின் அணி வகுப்பை ஏக்தா குமாரி தலைமை ஏற்று நடத்தினார். என்சிசி பெண்கள் இசைக் குழுவை அனிதா குமாரி வழிநடத்தினார். கமாண்டர் தீபக் சிங் தலைமையில் என்எஸ்எஸ் பெண்கள் அணி கம்பீரமாக அணிவகுத்தது.

ரஃபேல் உட்பட 22 போர் விமானங்கள், 11 சரக்கு விமானங்கள், 7 ஹெலிகாப்டர்கள் வானில் சாகசங்களை நிகழ்த்தின. அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை மிஞ்சும் வகையில் அதிநவீன போர் விமானங்கள், பீரங்கிகள், ஏவுகணைகள் அணி வகுப்பில் இடம்பெற்றன.

உள்நாட்டில் தயாரான பிரசந்த் ஹெலிகாப்டர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இது 16,000 அடி உயரத்தில் பறக்கும் திறன் கொண்டது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிரளயம் ஏவுகணையும் அணிவகுப்பில் கம்பீரமாக பங்கேற்றது. இது மணிக்கு 2,000 கி.மீ. வேகத்தில் 500 கி.மீ. வரை சீறிப் பாயும் திறன் கொண்டது. சீன எல்லை பகுதிகளில் இது நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

ஆந்திரா, கர்நாடகா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 15 மாநிலங்களின் அலங்கார வாகனங்கள் அணிவகுப்பில் பங்கேற்றன. உத்தர பிரதேச அரசு சார்பில் மகா கும்பமேளாவை பிரதிபலிக்கும் வகையில் அலங்கார வாகனம் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

மத்திய அரசின் 16 துறைகளை சேர்ந்த அலங்கார வாகனங்கள் அணிவகுப்பில் இடம் பெற்றன. சுமார் 5,000 கலைஞர்கள் கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில், ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) தயாரித்த சோராவர் பீரங்கியும் இடம்பெற்றது. இது மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் செல்லும், மலைப் பகுதிகளில் எளிதாக ஏறும். நதிகளில் மிதந்து எளிதாக கரையை கடக்கும்.

டிஆர்டிஓ உருவாக்கிய துர்கா-2 ரக லேசர் கருவியும் அணிவகுப்பில் கவனத்தை ஈர்த்தது. நிலம், நீர், வான் பரப்பில் இதை பயன்படுத்த முடியும். இதன்மூலம் அணு ஆயுத ஏவுகணைகளை தாக்கி அழிக்கலாம். 25 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்குகளை இது துல்லியமாக தாக்கும்.

அமெரிக்காவின் ஹிமார்ஸ் ஏவுகணைக்கு இணையான பினாகா ஏவுகணைகள் கம்பீரமாக வலம் வந்தன. இது மணிக்கு 5,800 கி.மீ. வேகத்தில் சீறி பாயக்கூடியவை. அதிநவீன ராக்கெட் லாஞ்சர் மூலம் 44 விநாடிகளில் 12 பினாகா ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவ முடியும். இது 800 கி.மீ.வரையிலான இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும். நாக் ஏவுகணை, டி4எஸ் கவச வாகனம், டி-90 பீஷ்மா பீரங்கி, ஆருத்ரா, சஞ்சய் ரேடார்கள் உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்களும் கவனத்தை ஈர்த்தன.

இதே போன்று மற்ற மாநிலங்களில் ஆளுநர்கள் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினர். பள்ளி, கல்லூரிகளில் குடியரசுத் தினவிழா கோலாகலமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தியா Tags:#76th independence day, #Bjp, #PM Modi

Post navigation

Previous Post: 2026 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க கனிமவள கொள்ளை கும்பலை நம்பியிருக்கும் திமுக : தலைவர் அண்ணாமலை
Next Post: மகாத்மா காந்தி நினைவு தினம்: ராஜ்காட்டில் பிரதமர் மோடி மரியாதை

Related Posts

  • ஆபரேஷன் சிந்தூர் வெற்றி: ஜனாதிபதியுடன்  முப்படை தளபதிகள் சந்திப்பு இந்தியா
  • தமிழகத்தில் புனரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார் இந்தியா
  • மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடியின் எக்ஸ் சமூக வலைத்தளத்தை கையாளும் செஸ் வீராங்கனை வைஷாலி இந்தியா
  • மகாத்மா காந்தி நினைவு தினம்: ராஜ்காட்டில் பிரதமர் மோடி மரியாதை இந்தியா
  • ஆபரேஷன் சிந்தூர்: ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி விளக்கம் இந்தியா
  • டெல்லியில் வென்றது சாதாரண வெற்றி அல்ல; வரலாற்று சிறப்புமிக்கது: பிரதமர் மோடி பெருமிதம் அரசியல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, நிகிதாவுடன் தொடர்புபடுத்தி அவதூறு : பாஜக நிர்வாகி ராஜினி காவல்நிலையத்தில் புகார்
  • அஜித்குமார் கொலையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்: நயினார் நாகேந்திரன்
  • உள்துறை அமைச்சர் பற்றி அவதூறு பேச்சு: ராசா மீது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் புகார்
  • உலகின் வலிமைக்கு ஒரு நம்பிக்கை தூணாக இந்தியா உள்ளது : கானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பெருமிதம்
  • திருப்புவனத்தில் காவலர்களால் படுகொலை செய்யப்பட்ட இளைஞர்: பாஜக – அதிமுக இணைந்து ஆர்ப்பாட்டம்

Recent Comments

No comments to show.

Archives

  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • காலத்தால் அழியாத சக்தி வாய்ந்த ஊடகம்: உலக வானொலி தினத்தில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி இந்தியா
  • ஆபரேஷன் சிந்தூர்: ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி விளக்கம் இந்தியா
  • நடிகர் ராஜேஷ் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • சமூகத்துக்கு ஆர்எஸ்எஸ் செய்த பங்களிப்பு என்ன? லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் கலந்துரையாடலில் பிரதமர் மோடி விளக்கம் இந்தியா
  • 95 கோடி பேருக்கு சமூக பாதுகாப்பு ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா
  • “ஆபரேஷன் சிந்தூர்” இந்தியா நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலி? இந்தியா
  • அஜித்குமார் கொலையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்: நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • 22 லட்சம் மரங்களை நட்டு சாதனை: வனத்துக்குள் திருப்பூர் அமைப்புக்கு தலைவர் அண்ணாமலை பாராட்டு தமிழ்நாடு

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme