Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • மத்திய அரசு வழங்கிய ரூ.1,050 கோடி நிதியை ஏப்பம் விட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் : தலைவர் அண்ணாமலை அரசியல்
  • நமது ஜனநாயகம் தொடர்ந்து வெற்றி பெறுகிறது: பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா
  • அனைவருக்கும் பிரதமரின் இனிய 2025 புத்தாண்டு வாழ்த்து இந்தியா
  • ஸ்ரீ கந்தர் மலைக்காக சிறைச்சென்று ஜாமினில் வந்த பாஜக நிர்வாகிக்கு உற்சாக வரவேற்பு தமிழ்நாடு
  • பிரான்சில் இந்திய துணைத் தூதரகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி உலகம்
  • அமைப்பு பருவம் – 2025 புதிய மாவட்ட தலைவர்கள் பட்டியல் அறிவிப்பு அரசியல்
  • சிங்கத்தை படம் பிடித்த பிரதமர் மோடி: உலக வனவிலங்கு நாளில் உற்சாகம் இந்தியா
  • திருவள்ளுவரையும், திருக்குறளையும் களவாட நினைப்பதே திமுக கூட்டம்தான்: ஸ்டாலினுக்கு, வானதி சீனிவாசன் பதிலடி அரசியல்

டெல்லியில் வென்றது சாதாரண வெற்றி அல்ல; வரலாற்று சிறப்புமிக்கது: பிரதமர் மோடி பெருமிதம்

Posted on February 8, 2025 By admin No Comments on டெல்லியில் வென்றது சாதாரண வெற்றி அல்ல; வரலாற்று சிறப்புமிக்கது: பிரதமர் மோடி பெருமிதம்

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வென்றது சாதாரண வெற்றி அல்ல; வரலாற்று சிறப்புமிக்கது என பாஜக தலைமை அலுவலகத்தில் ஆற்றிய உரையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.

டெல்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 48 தொகுதிகளை கைப்பற்றி 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கிறது. இதனால் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று ( 08.02.2025 ) மாலை புது தில்லி பாஜக தலைமையகத்தில் நடந்த கொண்டாட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது : சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியை மக்கள் கொடுத்துள்ளனர். சேவை செய்ய எங்களுக்கு வாய்ப்பு கொடுத்த மக்களுக்கு எனது வணக்கங்கள்.

தலைசிறந்த தலைநகரை உருவாக்க வேண்டும் என்பதற்காக மக்கள் பாஜகவிற்கு வாக்களித்து உள்ளனர். அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது மக்கள் திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளனர். தற்போது ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்து டெல்லி விடுதலை பெற்றுள்ளது.

இந்த வெற்றியில் ஒவ்வொரு பா.ஜ., தொண்டருக்கும் பங்கு உண்டு. அவர்கள் கடுமையாக உழைத்தனர். இரட்டை இன்ஜின் அரசு டெல்லியின் முன்னேற்றத்திற்கு கடினமாக உழைக்கும். இரட்டை இன்ஜின் அரசு மீதான நம்பிக்கையை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

டெல்லி இனிமேல் இரட்டை வேகத்தில் முன்னேறும். மக்கள் எங்களுக்கு அளித்த அன்பை இரண்டு மடங்காக திருப்பித் தருவோம். ஷார்ட்கட் அரசியல், ஷார்ட் சர்க்யூட் ஆகி விட்டது. நாடாளுமன்ற தேர்தலில் டெல்லி மக்கள் என்னை எப்போதும் ஏமாற்றியது இல்லை. கடந்த 3 தேர்தல்களிலும் 7 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது.

நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பிறகு, ஹரியானா மற்றும் மஹாராஷ்டிராவில் சாதனை படைத்து இருந்தோம். தற்போது டெல்லியிலும் சாதனை படைத்து விட்டோம். டெல்லி என்பது சாதாரண நகரம் அல்ல. அது மினி இந்தியா. இனிமேல் டெல்லி இளைஞர்கள் சிறந்த நிர்வாகத்தை உணர்வார்கள்.

பன்முகத்தன்மை வாய்ந்த டெல்லி இந்த வெற்றி மூலம் பாஜகவிற்கு ஆசி வழங்கி உள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின் அராஜகம் மற்றும் அகங்காரத்திற்கு மக்கள் முடிவு கட்டி உள்ளனர்.

நானும் பூர்வாஞ்சல் பகுதியில் இருந்து எம்.பி., ஆக தேர்வு செய்யப்பட்டவன் எனப் பெருமையுடன் கூறிக் கொள்கிறேன். இப்பகுதி மக்கள் பாஜகவிற்கு ஆதரவு அளித்து உள்ளனர். டெல்லியில் ஒவ்வொரு மூலையிலும் தாமரை மலர்ந்துள்ளது.

இது சாதாரண வெற்றி அல்ல. மோடியின் வாக்குறுதி மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு தலைவணங்குகிறேன். அனைத்து தரப்பு மக்களும் பாஜகவிற்கு ஆதரவு அளித்து உள்ளனர். என்றும் மக்களுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவோம்.

தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் மாநிலங்கள், வளர்ச்சியில் உச்சம் பெற்றுள்ளன. டெல்லியில் கிடைத்த வெற்றி என்பது கொள்கை, வளர்ச்சி, நம்பிக்கைக்கானது. ஊழலுக்கும், அரசியலில் பொய்க்கும் இடமில்லை என்பதை மக்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.

வளர்ச்சிக்கு இடையூறாக இருந்த மிகப்பெரிய தடையை அகற்றி உள்ளீர்கள். ஆம் ஆத்மி அரசு டெல்லி மெட்ரோ பணிகளை தடுத்தது. ஆயுஷ்மான் பாரத் பலன்கள் மக்களை சென்றடைவதை தடுத்தது.
நிர்வாகம் என்பது நாடகத்திற்கான மேடை அல்ல. டெல்லியில் முன்னேற்றத்திற்காக உழைப்போம். தேசிய ஜனநாயக கூட்டணி எங்கு எல்லாம் உள்ளதோ அங்கு எல்லாம் வளர்ச்சி, நம்பிக்கை, சிறந்த நிர்வாகம் இருக்கும் என்பதை ஒட்டு மொத்த நாடும் அறியும்.

இந்தியாவில் பல மாநிலங்களில் பாஜக ஆட்சிகள் மீண்டும் தேர்வு செய்யப்படுகின்றன. இதற்கு பாஜக செய்த வளர்ச்சி பணிகள் மட்டுமே காரணம். மோடியின் வாக்குறுதிகள் என்பது வளர்ச்சிக்கானது. நடுத்தர மக்கள், ஏழைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

அரசியல், இந்தியா Tags:#Bjp, #Oreynaadu, #PM Modi, #Tamilnadu

Post navigation

Previous Post: துரு புடிச்சு இத்துப்போன ஸ்டாலினின் இரும்புக்கரம்
Next Post: டெல்லியில் 67 தொகுதிகளில் டெபாசிட் இழந்த காங்கிரஸ்

Related Posts

  • அனைவருடைய கனவுகளையும் நிறைவேற்றக்கூடிய வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட்: பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா
  • டிரம்ப் பதவியேற்பு விழாவில் முதல் வரிசையில் இடம்பெற்ற மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இந்தியா
  • பாஜக உண்மையான ஜனநாயக கட்சி : திருச்செங்கோட்டில் தலைவர் அண்ணாமலை அரசியல்
  • பொய் சொல்லவும், கற்பனையான அச்சங்களைப் பரப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டம்: பாஜக பங்கேற்காது – ஸ்டாலினுக்கு தலைவர் அண்ணாமலை கடிதம் அரசியல்
  • வடலூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு திமுக அரசுக்கு சம்மட்டி அடி: தலைவர் அண்ணாமலை அரசியல்
  • நமது ஜனநாயகம் தொடர்ந்து வெற்றி பெறுகிறது: பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • முக்கியமான காலகட்டத்தில் பயணிப்பதால் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்: அமைச்சகங்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
  • ஆபரேஷன் சிந்தூர்: ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி விளக்கம்
  • ‘ஆபரேஷன் சிந்தூர்’ பெயர் வைக்க காரணம் என்ன?
  • “ஆபரேஷன் சிந்தூர்” இந்தியா நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலி?
  • ஈரோடு இரட்டை கொலை; கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு அண்ணாமலை நேரில் ஆறுதல்

Recent Comments

No comments to show.

Archives

  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு
  • அனைவரும் பொங்கலை கொண்டாடுங்க, டங்ஸ்டன் சுரங்கம் வராது: விவசாயிகளிடம் உறுதி கொடுத்த தலைவர் அண்ணாமலை அரசியல்
  • தமிழக அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக இயக்கியதன் விளைவாக அமலாக்கத்துறை சோதனை: அண்ணாமலை தமிழ்நாடு
  • பஹல்காமில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் வெறியாட்டம்; ‘‘நீ ஹிந்துவா?’’ என கேட்டு, கேட்டு 28 சுற்றுலாப்பயணிகளை கொன்ற கொடூரம் இந்தியா
  • புதிய கல்விக் கொள்கையில் ஹிந்தி மொழி கட்டாயப்படுத்தவில்லை: மத்திய அமைச்சர் எல்.முருகன் அரசியல்
  • காலத்தால் அழியாத சக்தி வாய்ந்த ஊடகம்: உலக வானொலி தினத்தில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி இந்தியா
  • துரு புடிச்சு இத்துப்போன ஸ்டாலினின் இரும்புக்கரம் தமிழ்நாடு
  • திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளது என்பதற்கு ஈசிஆர் சம்பவம் ஓர் உதாரணம் : தலைவர் அண்ணாமலை அரசியல்
  • அமைப்பு பருவம் – 2025 புதிய மாவட்ட தலைவர்கள் பட்டியல் அறிவிப்பு அரசியல்

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme