Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • இளைஞர்கள் யோகாவை வாழ்நாள் முழுவதும் ஒருதுணையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு
  • லண்டன் சென்றடைந்தார் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு அளித்த இந்திய மக்கள் உலகம்
  • யாழ்ப்பாணம் கலாச்சார மையத்துக்கு திருவள்ளூவர் பெயர் : தலைவர் அண்ணாமலை மகிழ்ச்சி அரசியல்
  • தீர்வு கொடுக்காமல் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விஜய்: தலைவர் அண்ணாமலை காட்டம் அரசியல்
  • ஸ்ரீ நாராயண குருவின் போதனைகள் காலத்தால் அழியாதவை: ஜனாதிபதி திரௌபதி முர்மு இந்தியா
  • “ஆபரேஷன் சிந்தூர்” இந்தியா நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலி? இந்தியா
  • அரசு ரப்பர் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் அரசியல்
  • விவசாயிகள் இறந்தால் 3 லட்சம் சாராயம் குடித்து இறந்தால் 10 லட்சம்; இதுதான் திராவிட மாடல்: உடுமலையில் நயினார் நாகேந்திரன் பேச்சு அரசியல்

முருக பக்தர்கள் மீது கை வைப்பதா? சேகர்பாபு, ரகுபதியை எச்சரித்த தலைவர் அண்ணாமலை

Posted on February 5, 2025 By admin No Comments on முருக பக்தர்கள் மீது கை வைப்பதா? சேகர்பாபு, ரகுபதியை எச்சரித்த தலைவர் அண்ணாமலை

திருப்பரங்குன்றம் விஷயத்தில் முருக பக்தர்கள் மீது கை வைப்பதா என்று அமைச்சர்கள் சேகர்பாபு, ரகுபதிக்கு தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை செய்தார்.

திருப்பரங்குன்றம் ஸ்ரீகந்தர் மலையை காக்க வேண்டும் என்று நேற்று மதுரை பழங்காநத்தம் பகுதியில் பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள், இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஒன்று திரண்டு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதுகுறித்து திமுக அமைச்சர் சேகர்பாபு, மதுரையில் குவிந்தவர்கள் இந்து அமைப்பினர் என்று சொல்லக் கூடாது. அவர்கள் பாஜகவினர் தான் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் தலைவர் அண்ணாமலை பேசுகையில், அமைச்சர் சேகர்பாபுவுக்கு சில விஷயங்களை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். திருப்பரங்குன்றம் சரித்திரம் சேகர்பாபுவுக்கு தெரியுமா? 1926ல் இதே பிரச்சனை வந்த போது, திருப்பரங்குன்றத்தை பொறுத்தவரை முழுமையாக கோயிலுக்கு சொந்தமானது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது மேல்முறையீடு சென்ற போது, இருவரும் சமாதானமாக செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து 1931ல், சப் ஆர்டினேட் நீதிபதி கொடுத்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம். முழுமையாக கோயிலுக்கு சொந்தம் என்று தீர்ப்பு வந்த பின், பிரச்சனை முடிந்துவிட்டது. ஆங்கிலேயர்கள் இந்து மக்களுக்காக காத்த கோயிலை, இன்று திராவிட கும்பல் குறிப்பாக திமுக கொடுப்பதற்கு தயாராக இருப்பது வேடிக்கையாக உள்ளது.

இதனால் சேகர்பாபு பேசுவதற்கு முன்பாக 1931 ப்ரிவி கவுன்சில் தீர்ப்பை படிக்க வேண்டும். இன்று புதிதாக இன்னொரு மதத்தைச் சார்ந்தவர்கள் பிரச்சனையை தொடங்குகிறார்கள். அங்கு சென்று சாப்பிடுகிறார்கள். எம்பி நவாஸ் கனி மீது நடவடிக்கை எடுக்க துப்பில்லை. ஆனால் சேகர்பாபு வீரவசனம் பேசிக் கொண்டிருக்கிறார். அமைச்சர் ரகுபதி, இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என்கிறார்.

பெண்களிடம் தவறு செய்பவர்களை பிடிக்காமல், நேற்றிரவு பாஜகவினர் பலரையும் வீட்டிற்கு சென்று கைது செய்திருக்கிறார்கள். மதுரை நீதிமன்றத்தில் தீர்ப்பளித்த ஒரு மணி நேரத்தில் மக்கள் வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளார்கள். அதேபோல் இஸ்லாமியர்கள் சகோதரர்களாக இருந்தாலும், இந்த விவகாரத்தில் பிரச்சனையை தொடங்கியவர் யார்?

இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என்று சீன் போட்டு சுற்றினால், உங்களை எப்படி அடக்க வேண்டும் என்பதும் எங்களுக்கு தெரியும். அமைச்சர் ரகுபதி வார்த்தையை சரியாக பயன்படுத்த வேண்டும். மக்கள் பிரதிநிதியாக இருக்கிறீர்கள் என்பதற்காக மட்டுமே மரியாதை கொடுக்கிறோம். அந்த மரியாதையை தற்காத்து வார்த்தையை பயன்படுத்துங்கள்.

முருக பக்தர்கள் மீது கை வைத்தால் நீங்கள் இருக்க மாட்டீர்கள். இன்னொரு முறை இரும்புக்கரம் என்ற வார்த்தையை பயன்படுத்தினால், ரகுபதி இருக்குமிடம் அவருக்கே தெரியாது. தமிழ்நாட்டில் பிரச்சனையை உருவாக்குவது திமுக தான். இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறினார்.

அரசியல் Tags:#Annamalai, #Bjp, #Oreynaadu, #Tamilnadu

Post navigation

Previous Post: முருக பக்தர்களிடம் அத்துமீறிய போலீசார்: செய்தி சேகரித்த ஒரே நாடு பத்திரிகையாளர் செல்போனை பறித்த மதுரை கமிஷ்னர்
Next Post: ஸ்ரீ கந்தர் மலைக்காக சிறைச்சென்று ஜாமினில் வந்த பாஜக நிர்வாகிக்கு உற்சாக வரவேற்பு

Related Posts

  • பாஜக உண்மையான ஜனநாயக கட்சி : திருச்செங்கோட்டில் தலைவர் அண்ணாமலை அரசியல்
  • அதிமுக, பாஜக தொண்டர்கள் இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் : கே.பி.ராமலிங்கம் அரசியல்
  • புதிய கல்விக் கொள்கையில் ஹிந்தி மொழி கட்டாயப்படுத்தவில்லை: மத்திய அமைச்சர் எல்.முருகன் அரசியல்
  • திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளது என்பதற்கு ஈசிஆர் சம்பவம் ஓர் உதாரணம் : தலைவர் அண்ணாமலை அரசியல்
  • மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து பெற சென்ற தமிழிசையை 3 மணி நேரம் வெயிலில் காக்க வைத்த போலீஸ் அரசியல்
  • உங்கள் வீட்டுப் பிள்ளை; நயினார் பேசுகிறேன்; தொடர்பில் இருப்போம்… தொடர்ந்து பேசுவோம்…! அரசியல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • பெண் பிள்ளைகளைத் தவிக்கவிட்டுவிட்டு, தன் மகனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து பாடும் முதல்வர்: நயினார் நாகேந்திரன் காட்டம்
  • திமுகவுக்கு ஒரே அக்கறை துணை முதல்வராக இருக்கும் உதயநிதியை முதல்வராக்க வேண்டும்; தேனியில் நயினார் நாகேந்திரன் பேச்சு
  • பிஹாரை போன்று நாளை தமிழ்நாட்டிலும் என்.டி.ஏ. வெற்றி பெறும்; தென்காசியில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
  • கோவையில் இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி: பி.எம்.கிசான் நிதி ரூ.18,000 கோடி விடுவிப்பு
  • பாலக்கோடு அருகே 3 ஆண்டுகளாக கோவில் வளாகம் மற்றும் தெருக்களில் நடக்கும் வகுப்பறை; இடம் வாங்கி கொடுத்தும் கண்டுகொள்ளாத விடியாத அரசு

Recent Comments

No comments to show.

Archives

  • November 2025
  • October 2025
  • September 2025
  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • தாய்மார்கள், சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் : தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு
  • 3 நாளில் பாகிஸ்தானை மண்டியிட வைத்த இந்திய ராணுவம்: ஜம்மு காஷ்மீர் ஆளுநர் இந்தியா
  • 22 லட்சம் மரங்களை நட்டு சாதனை: வனத்துக்குள் திருப்பூர் அமைப்புக்கு தலைவர் அண்ணாமலை பாராட்டு தமிழ்நாடு
  • பிஹாரை போன்று நாளை தமிழ்நாட்டிலும் என்.டி.ஏ. வெற்றி பெறும்; தென்காசியில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • பிரதமர் மோடி மிகச்சிறந்த தலைவர்: அதிபர் டிரம்ப் புகழாரம் இந்தியா
  • ஆதம்பூர் விமானப்படை வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் இந்தியா
  • சி.பி.ராதாகிருஷ்ணனை அனைத்து கட்சிகளும் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும் : ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் அரசியல்
  • சமூகத்துக்கு ஆர்எஸ்எஸ் செய்த பங்களிப்பு என்ன? லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் கலந்துரையாடலில் பிரதமர் மோடி விளக்கம் இந்தியா

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme