Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • கெட்அவுட் ஸ்டாலின்: தருமபுரி பாஜக சார்பில் முழக்கம் அரசியல்
  • ஆபரேஷன் சிந்தூர் வெற்றி: ஜனாதிபதியுடன்  முப்படை தளபதிகள் சந்திப்பு இந்தியா
  • திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளது என்பதற்கு ஈசிஆர் சம்பவம் ஓர் உதாரணம் : தலைவர் அண்ணாமலை அரசியல்
  • அமெரிக்காவின் பொற்காலம் இன்று முதல் தொடங்குகிறது: அதிபராக பதவியேற்ற பின் ட்ரம்ப் உரை உலகம்
  • முக்கியமான காலகட்டத்தில் பயணிப்பதால் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்: அமைச்சகங்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை இந்தியா
  • இளைஞர்கள் யோகாவை வாழ்நாள் முழுவதும் ஒருதுணையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு
  • மக்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் தயாநிதி மாறன்: சபாநாயகர் ஓம் பிர்லா கடும் எச்சரிக்கை இந்தியா
  • பாகிஸ்தான் இனி தாக்குதல் நடத்தினால் அணு ஆயுத போர் தான்: நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு

முருக பக்தர்கள் மீது கை வைப்பதா? சேகர்பாபு, ரகுபதியை எச்சரித்த தலைவர் அண்ணாமலை

Posted on February 5, 2025 By admin No Comments on முருக பக்தர்கள் மீது கை வைப்பதா? சேகர்பாபு, ரகுபதியை எச்சரித்த தலைவர் அண்ணாமலை

திருப்பரங்குன்றம் விஷயத்தில் முருக பக்தர்கள் மீது கை வைப்பதா என்று அமைச்சர்கள் சேகர்பாபு, ரகுபதிக்கு தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை செய்தார்.

திருப்பரங்குன்றம் ஸ்ரீகந்தர் மலையை காக்க வேண்டும் என்று நேற்று மதுரை பழங்காநத்தம் பகுதியில் பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள், இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஒன்று திரண்டு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதுகுறித்து திமுக அமைச்சர் சேகர்பாபு, மதுரையில் குவிந்தவர்கள் இந்து அமைப்பினர் என்று சொல்லக் கூடாது. அவர்கள் பாஜகவினர் தான் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் தலைவர் அண்ணாமலை பேசுகையில், அமைச்சர் சேகர்பாபுவுக்கு சில விஷயங்களை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். திருப்பரங்குன்றம் சரித்திரம் சேகர்பாபுவுக்கு தெரியுமா? 1926ல் இதே பிரச்சனை வந்த போது, திருப்பரங்குன்றத்தை பொறுத்தவரை முழுமையாக கோயிலுக்கு சொந்தமானது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது மேல்முறையீடு சென்ற போது, இருவரும் சமாதானமாக செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து 1931ல், சப் ஆர்டினேட் நீதிபதி கொடுத்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம். முழுமையாக கோயிலுக்கு சொந்தம் என்று தீர்ப்பு வந்த பின், பிரச்சனை முடிந்துவிட்டது. ஆங்கிலேயர்கள் இந்து மக்களுக்காக காத்த கோயிலை, இன்று திராவிட கும்பல் குறிப்பாக திமுக கொடுப்பதற்கு தயாராக இருப்பது வேடிக்கையாக உள்ளது.

இதனால் சேகர்பாபு பேசுவதற்கு முன்பாக 1931 ப்ரிவி கவுன்சில் தீர்ப்பை படிக்க வேண்டும். இன்று புதிதாக இன்னொரு மதத்தைச் சார்ந்தவர்கள் பிரச்சனையை தொடங்குகிறார்கள். அங்கு சென்று சாப்பிடுகிறார்கள். எம்பி நவாஸ் கனி மீது நடவடிக்கை எடுக்க துப்பில்லை. ஆனால் சேகர்பாபு வீரவசனம் பேசிக் கொண்டிருக்கிறார். அமைச்சர் ரகுபதி, இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என்கிறார்.

பெண்களிடம் தவறு செய்பவர்களை பிடிக்காமல், நேற்றிரவு பாஜகவினர் பலரையும் வீட்டிற்கு சென்று கைது செய்திருக்கிறார்கள். மதுரை நீதிமன்றத்தில் தீர்ப்பளித்த ஒரு மணி நேரத்தில் மக்கள் வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளார்கள். அதேபோல் இஸ்லாமியர்கள் சகோதரர்களாக இருந்தாலும், இந்த விவகாரத்தில் பிரச்சனையை தொடங்கியவர் யார்?

இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என்று சீன் போட்டு சுற்றினால், உங்களை எப்படி அடக்க வேண்டும் என்பதும் எங்களுக்கு தெரியும். அமைச்சர் ரகுபதி வார்த்தையை சரியாக பயன்படுத்த வேண்டும். மக்கள் பிரதிநிதியாக இருக்கிறீர்கள் என்பதற்காக மட்டுமே மரியாதை கொடுக்கிறோம். அந்த மரியாதையை தற்காத்து வார்த்தையை பயன்படுத்துங்கள்.

முருக பக்தர்கள் மீது கை வைத்தால் நீங்கள் இருக்க மாட்டீர்கள். இன்னொரு முறை இரும்புக்கரம் என்ற வார்த்தையை பயன்படுத்தினால், ரகுபதி இருக்குமிடம் அவருக்கே தெரியாது. தமிழ்நாட்டில் பிரச்சனையை உருவாக்குவது திமுக தான். இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறினார்.

அரசியல் Tags:#Annamalai, #Bjp, #Oreynaadu, #Tamilnadu

Post navigation

Previous Post: முருக பக்தர்களிடம் அத்துமீறிய போலீசார்: செய்தி சேகரித்த ஒரே நாடு பத்திரிகையாளர் செல்போனை பறித்த மதுரை கமிஷ்னர்
Next Post: ஸ்ரீ கந்தர் மலைக்காக சிறைச்சென்று ஜாமினில் வந்த பாஜக நிர்வாகிக்கு உற்சாக வரவேற்பு

Related Posts

  • குற்றவாளிகளை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்ல திமுக அரசு தயாராக இருப்பதன் மர்மம் என்ன? தலைவர் அண்ணாமலை அரசியல்
  • தீர்வு கொடுக்காமல் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விஜய்: தலைவர் அண்ணாமலை காட்டம் அரசியல்
  • சமூக வலைத்தள டிரெண்டிங்கில் பால்டாயில் பாபு அரசியல்
  • கெட்அவுட் ஸ்டாலின்: தருமபுரி பாஜக சார்பில் முழக்கம் அரசியல்
  • வடலூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு திமுக அரசுக்கு சம்மட்டி அடி: தலைவர் அண்ணாமலை அரசியல்
  • ஒரே நாடு, ஒரே தேர்தல் முக்கியத்துவம் பற்றி தமிழக மக்களுக்கு எடுத்துரைக்க உள்ளோம்: நயினார் நாகேந்திரன் அரசியல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • காவல்துறையால் கொலை செய்யப்பட்ட இளைஞர்; ஸ்டாலினிடம் 9 கேள்விக்கான பதிலை பெற்றுத்தாருங்கள்; ஊடகங்களுக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை
  • 95 கோடி பேருக்கு சமூக பாதுகாப்பு ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்
  • திருநீறு பூசி, ருத்ராட்சம் அணிந்து மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும்: அண்ணாமலை
  • தொடர்ந்து இரண்டு முறை தி.மு.க., வென்றதாக சரித்திரம் இல்லை: நயினார் நாகேந்திரன்
  • ம.பொ.சி 119வது பிறந்த நாள்; நயினார் நாகேந்திரன் மரியாதை

Recent Comments

No comments to show.

Archives

  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • தேசப்பணிக்கு தயார்: மாஸ் காட்டும் இந்திய கடற்படை இந்தியா
  • இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே நல்ல தருணம் : பிரான்ஸில் பிரதமர் மோடி உரை உலகம்
  • ஆதம்பூர் விமானப்படை வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் இந்தியா
  • டெல்லியில் ஒவ்வொரு ஊழலும் விசாரிக்கப்படும்; கொள்ளை அடித்தவர்கள் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும்: பிரதமர் மோடி இந்தியா
  • தொடர்ந்து இரண்டு முறை தி.மு.க., வென்றதாக சரித்திரம் இல்லை: நயினார் நாகேந்திரன் அரசியல்
  • இந்திய ராணுவத்திற்கு உயிரை கொடுக்கத் தயார்: சண்டீகரில் குவிந்த இளைஞர்கள் இந்தியா
  • தான் எழுதிய புத்தகத்தை பிரதமர் மோடிக்கு பரிசளித்த அதிபர் டிரம்ப் இந்தியா
  • திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் பிரதமர் மோடி இந்தியா

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme