Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • டெல்லியில் 67 தொகுதிகளில் டெபாசிட் இழந்த காங்கிரஸ் இந்தியா
  • பஹல்காமில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் வெறியாட்டம்; ‘‘நீ ஹிந்துவா?’’ என கேட்டு, கேட்டு 28 சுற்றுலாப்பயணிகளை கொன்ற கொடூரம் இந்தியா
  • ‘தாலிபான் திமுக அரசு’ முடிவுக்கு கொண்டுவரப்படும்: மதுரையில் ஹெச்.ராஜா சூளுரை தமிழ்நாடு
  • சிங்கத்தை படம் பிடித்த பிரதமர் மோடி: உலக வனவிலங்கு நாளில் உற்சாகம் இந்தியா
  • திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் பிரதமர் மோடி இந்தியா
  • பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கமலாலயத்தில் அஞ்சலி தமிழ்நாடு
  • வடலூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு திமுக அரசுக்கு சம்மட்டி அடி: தலைவர் அண்ணாமலை அரசியல்
  • தமிழகத்தை சேர்ந்த 25 பேர் ஐபிஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு: அண்ணாமலை வாழ்த்து அரசியல்

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளது என்பதற்கு ஈசிஆர் சம்பவம் ஓர் உதாரணம் : தலைவர் அண்ணாமலை

Posted on January 30, 2025 By admin No Comments on திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளது என்பதற்கு ஈசிஆர் சம்பவம் ஓர் உதாரணம் : தலைவர் அண்ணாமலை

சென்னை ஈ.சி.ஆரில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. அங்கு காரில் பெண்களை துரத்திய சம்பவம் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளது என்பதற்கு ஈசிஆர் சம்பவம் ஓர் உதாரணம் என தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன் காரில் சென்று கொண்டிருந்த பெண்களை, திமுக கொடி பொருத்தப்பட்ட வேறொரு காரில் பின் தொடர்ந்த சில போதை ஆசாமிகள் அவர்களை வழிமறிக்க முயல்வதையும், மூர்க்கத்தனமாக அப்பெண்களை மீண்டும், மீண்டும் துரத்துவதையும், அப்பெண்கள் உயிர் பயத்தில் பதறும் வீடியோ காட்சிகளையும் காண்கையில் நமது நெஞ்சம் பதைபதைக்கிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் குற்றவாளிகளை கைது செய்யாமல் புகார் கொடுத்த பெண்களின் விவரங்களை வெளியிட்டது திராவிட மாடல் அரசு. ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழக மாணவி விஷயத்திலும் இதே நிலையைத்தான் திராவிட மாடல் அரசு எடுத்திருந்தது.

இந்தநிலையில், சென்னையில் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள் நானும் பார்த்தேன். ஏனென்றால் ஈசிஆர் பகுதியில் தான் வசித்து வருகின்றேன். பெண்கள், இளைஞர்கள் என எப்போதும் மாலை மற்றும் இரவு நேரங்களில் அதிகமாக செல்கிறார்கள். ஆனால் நாம் பார்க்கும் போதெல்லாம், அங்கு போலீஸ் பாதுகாப்பு குறைவாகத்தான் இருக்கிறது.

சரியான பாதுகாப்பு அங்கே இருக்காது. அதிகாலை, நள்ளிரவு நேரங்களில் அங்கு சரியான பாதுகாப்பு இருக்காது. இன்றைக்கு திமுக கட்சியின் கொடி போட்டிருந்த காரில் வந்தவர்கள், அந்த பெண்களிடம் மிக மோசமாக நடந்துக்கொள்ளக் கூடிய வீடியோ.. இதை எல்லாரும் பார்த்து இருப்பீங்க. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதற்கு பல உதாரணங்கள் பார்த்து இருப்போம். இருந்தாலும் கூட தினமும் ஒரு உதாரணங்கள் புதுசு புதுசாக வந்துகொண்டிருக்கின்றன.

நாட்டில் பெண் ஒருவர் சுதந்திரமாக என்றைக்கு நடந்து செல்கிறார்களோ அன்றைக்கு முழு சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம். இந்தியா முழுவதும் சுதந்திரம் கிடைத்துவிட்டதாக நினைக்கிறேன். ஆனால் தமிழகத்திற்கு மட்டும் முழு சுதந்திரம் கிடைக்கவில்லை. ஏனென்றால் நள்ளிரவில் பெண்கள் சென்றால் பிரச்சினை. பகலில் சென்றாலும் பிரச்சினை. அண்ணா பல்கலைக்கழகம் வளாகத்திலும் அங்கு படிக்கக் கூடிய பெண்களுக்கு பிரச்சினை.

இரவு 7 மணியை தாண்டினாலும் பிரச்சினை. எல்லா நேரத்திலும்கூட தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தினமும் நிரூபணம் ஆகிக்கொண்டு இருக்கிறது. இதற்கு இன்னொரு சான்றாக தான் ஈசிஆர் சம்பவம். திமுக அரசிடம் சொல்வது என்னவென்றால், காவல்துறைக்கு ரோந்து வாகனம் வாங்கி கொடுங்க. காவல்துறைக்கு எந்தவித உபகரணங்கள் கொடுக்காமல், வேலைக்கு ஆட்கள் எடுக்காமல், காவல் நிலையங்களை அதிகப்படுத்தாமல், கையாலாகாத திராவிட மாடல் என்று சொல்லும் திமுக அரசு, பெண்களுக்கு எதிராக நடக்கின்ற அட்டூழியங்களை அடக்குவதற்கு ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடாமல் இருக்கிறார்கள். இதனை மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதை முதல்வர் ஸ்டாலின் நினைத்து பார்க்க வேண்டும். இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறினார்.

அரசியல் Tags:#Annamalai, #Bjp, #Oreynaadu, #Tamilnadu

Post navigation

Previous Post: மகாத்மா காந்தி நினைவு தினம்: ராஜ்காட்டில் பிரதமர் மோடி மரியாதை
Next Post: மோடி ஐயா உங்களுடன் இருப்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளார் : மதுரை விவசாயிகள் மத்தியில் தலைவர் அண்ணாமலை பெருமிதம்

Related Posts

  • அனைவரும் பொங்கலை கொண்டாடுங்க, டங்ஸ்டன் சுரங்கம் வராது: விவசாயிகளிடம் உறுதி கொடுத்த தலைவர் அண்ணாமலை அரசியல்
  • அமைச்சர் கமிஷன் காந்தி ஊழலுக்கு சப்பைக்கட்டு கட்டாமல் உடனடியாக பதவி விலக வேண்டும் : தலைவர் அண்ணாமலை அரசியல்
  • வடலூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு திமுக அரசுக்கு சம்மட்டி அடி: தலைவர் அண்ணாமலை அரசியல்
  • கந்த புராணமும், கந்த சஷ்டி கவசமும் இருப்பது போல் கந்தர் மலையும் இந்துக்களுக்காக இருக்கும் : ஹெச்.ராஜா அரசியல்
  • மத்திய அரசு வழங்கிய ரூ.1,050 கோடி நிதியை ஏப்பம் விட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் : தலைவர் அண்ணாமலை அரசியல்
  • பாஜக துவக்க நாளை முன்னிட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணி அரசியல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • காவல்துறையால் கொலை செய்யப்பட்ட இளைஞர்; ஸ்டாலினிடம் 9 கேள்விக்கான பதிலை பெற்றுத்தாருங்கள்; ஊடகங்களுக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை
  • 95 கோடி பேருக்கு சமூக பாதுகாப்பு ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்
  • திருநீறு பூசி, ருத்ராட்சம் அணிந்து மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும்: அண்ணாமலை
  • தொடர்ந்து இரண்டு முறை தி.மு.க., வென்றதாக சரித்திரம் இல்லை: நயினார் நாகேந்திரன்
  • ம.பொ.சி 119வது பிறந்த நாள்; நயினார் நாகேந்திரன் மரியாதை

Recent Comments

No comments to show.

Archives

  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • பிரதமர் மோடி மிகச்சிறந்த தலைவர்: அதிபர் டிரம்ப் புகழாரம் இந்தியா
  • குஜராத் சென்ற பிரதமர் மோடி மீது மலர் தூவிய கர்னல் சோபியா குரேஷி குடும்பத்தினர் இந்தியா
  • சிங்கத்தை படம் பிடித்த பிரதமர் மோடி: உலக வனவிலங்கு நாளில் உற்சாகம் இந்தியா
  • இந்திய ராணுவத்திற்கு உயிரை கொடுக்கத் தயார்: சண்டீகரில் குவிந்த இளைஞர்கள் இந்தியா
  • பாஜக துவக்க நாளை முன்னிட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணி அரசியல்
  • ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கருணாநிதி வரவேற்றார்; ஸ்டாலின் எதிர்க்கிறார் : பவன் கல்யாண் தமிழ்நாடு
  • 95 கோடி பேருக்கு சமூக பாதுகாப்பு ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா
  • வடலூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு திமுக அரசுக்கு சம்மட்டி அடி: தலைவர் அண்ணாமலை அரசியல்

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme