Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • பிரான்சில் இந்திய துணைத் தூதரகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி உலகம்
  • பொய் சொல்லவும், கற்பனையான அச்சங்களைப் பரப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டம்: பாஜக பங்கேற்காது – ஸ்டாலினுக்கு தலைவர் அண்ணாமலை கடிதம் அரசியல்
  • ரூ.6 லட்சம் கோடி முதலீட்டை ஜப்பான் நாட்டில் ஈர்க்க இந்தியா இலக்கு: பிரதமர் மோடி இந்தியா
  • கந்த புராணமும், கந்த சஷ்டி கவசமும் இருப்பது போல் கந்தர் மலையும் இந்துக்களுக்காக இருக்கும் : ஹெச்.ராஜா அரசியல்
  • பாஜக மாநில மையக்குழு கூட்டம் தமிழ்நாடு
  • தேசிய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் காசி தமிழ் சங்கமம்: தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா புகழாரம் இந்தியா
  • டெல்லியில் 67 தொகுதிகளில் டெபாசிட் இழந்த காங்கிரஸ் இந்தியா
  • மக்கள் அனைவரும் யோகா செய்ய வேண்டும் : சர்வதேச யோகா தினத்தில் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் தமிழ்நாடு

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளது என்பதற்கு ஈசிஆர் சம்பவம் ஓர் உதாரணம் : தலைவர் அண்ணாமலை

Posted on January 30, 2025 By admin No Comments on திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளது என்பதற்கு ஈசிஆர் சம்பவம் ஓர் உதாரணம் : தலைவர் அண்ணாமலை

சென்னை ஈ.சி.ஆரில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. அங்கு காரில் பெண்களை துரத்திய சம்பவம் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளது என்பதற்கு ஈசிஆர் சம்பவம் ஓர் உதாரணம் என தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன் காரில் சென்று கொண்டிருந்த பெண்களை, திமுக கொடி பொருத்தப்பட்ட வேறொரு காரில் பின் தொடர்ந்த சில போதை ஆசாமிகள் அவர்களை வழிமறிக்க முயல்வதையும், மூர்க்கத்தனமாக அப்பெண்களை மீண்டும், மீண்டும் துரத்துவதையும், அப்பெண்கள் உயிர் பயத்தில் பதறும் வீடியோ காட்சிகளையும் காண்கையில் நமது நெஞ்சம் பதைபதைக்கிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் குற்றவாளிகளை கைது செய்யாமல் புகார் கொடுத்த பெண்களின் விவரங்களை வெளியிட்டது திராவிட மாடல் அரசு. ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழக மாணவி விஷயத்திலும் இதே நிலையைத்தான் திராவிட மாடல் அரசு எடுத்திருந்தது.

இந்தநிலையில், சென்னையில் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள் நானும் பார்த்தேன். ஏனென்றால் ஈசிஆர் பகுதியில் தான் வசித்து வருகின்றேன். பெண்கள், இளைஞர்கள் என எப்போதும் மாலை மற்றும் இரவு நேரங்களில் அதிகமாக செல்கிறார்கள். ஆனால் நாம் பார்க்கும் போதெல்லாம், அங்கு போலீஸ் பாதுகாப்பு குறைவாகத்தான் இருக்கிறது.

சரியான பாதுகாப்பு அங்கே இருக்காது. அதிகாலை, நள்ளிரவு நேரங்களில் அங்கு சரியான பாதுகாப்பு இருக்காது. இன்றைக்கு திமுக கட்சியின் கொடி போட்டிருந்த காரில் வந்தவர்கள், அந்த பெண்களிடம் மிக மோசமாக நடந்துக்கொள்ளக் கூடிய வீடியோ.. இதை எல்லாரும் பார்த்து இருப்பீங்க. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதற்கு பல உதாரணங்கள் பார்த்து இருப்போம். இருந்தாலும் கூட தினமும் ஒரு உதாரணங்கள் புதுசு புதுசாக வந்துகொண்டிருக்கின்றன.

நாட்டில் பெண் ஒருவர் சுதந்திரமாக என்றைக்கு நடந்து செல்கிறார்களோ அன்றைக்கு முழு சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம். இந்தியா முழுவதும் சுதந்திரம் கிடைத்துவிட்டதாக நினைக்கிறேன். ஆனால் தமிழகத்திற்கு மட்டும் முழு சுதந்திரம் கிடைக்கவில்லை. ஏனென்றால் நள்ளிரவில் பெண்கள் சென்றால் பிரச்சினை. பகலில் சென்றாலும் பிரச்சினை. அண்ணா பல்கலைக்கழகம் வளாகத்திலும் அங்கு படிக்கக் கூடிய பெண்களுக்கு பிரச்சினை.

இரவு 7 மணியை தாண்டினாலும் பிரச்சினை. எல்லா நேரத்திலும்கூட தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தினமும் நிரூபணம் ஆகிக்கொண்டு இருக்கிறது. இதற்கு இன்னொரு சான்றாக தான் ஈசிஆர் சம்பவம். திமுக அரசிடம் சொல்வது என்னவென்றால், காவல்துறைக்கு ரோந்து வாகனம் வாங்கி கொடுங்க. காவல்துறைக்கு எந்தவித உபகரணங்கள் கொடுக்காமல், வேலைக்கு ஆட்கள் எடுக்காமல், காவல் நிலையங்களை அதிகப்படுத்தாமல், கையாலாகாத திராவிட மாடல் என்று சொல்லும் திமுக அரசு, பெண்களுக்கு எதிராக நடக்கின்ற அட்டூழியங்களை அடக்குவதற்கு ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடாமல் இருக்கிறார்கள். இதனை மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதை முதல்வர் ஸ்டாலின் நினைத்து பார்க்க வேண்டும். இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறினார்.

அரசியல் Tags:#Annamalai, #Bjp, #Oreynaadu, #Tamilnadu

Post navigation

Previous Post: மகாத்மா காந்தி நினைவு தினம்: ராஜ்காட்டில் பிரதமர் மோடி மரியாதை
Next Post: மோடி ஐயா உங்களுடன் இருப்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளார் : மதுரை விவசாயிகள் மத்தியில் தலைவர் அண்ணாமலை பெருமிதம்

Related Posts

  • சி.பி.ராதாகிருஷ்ணனை அனைத்து கட்சிகளும் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும் : ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் அரசியல்
  • பொய் சொல்லவும், கற்பனையான அச்சங்களைப் பரப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டம்: பாஜக பங்கேற்காது – ஸ்டாலினுக்கு தலைவர் அண்ணாமலை கடிதம் அரசியல்
  • கல்வித்துறையில் ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கிய திமுகவால் பள்ளி குழந்தைகளுக்கு எதுவுமே செய்துக்கொடுக்கவில்லை : கரூரில் தலைவர் அண்ணாமலை அரசியல்
  • கடலூர் மாவட்ட பாஜகவினர் கைது : தலைவர் அண்ணாமலை கண்டனம் அரசியல்
  • மக்கள் விரோத ஆட்சி நடத்தும் திமுகவுக்கு சட்டமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டப்படும்: பெரம்பலூரில் நயினார் நாகேந்திரன் அரசியல்
  • உங்கள் வீட்டுப் பிள்ளை; நயினார் பேசுகிறேன்; தொடர்பில் இருப்போம்… தொடர்ந்து பேசுவோம்…! அரசியல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • இலவச கல்வி, 1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: பீகாரில் பாஜக கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
  • ரபேல் போர் விமானத்தில் பயணித்த ஜனாதிபதி திரௌபதி முர்மு
  • ‘மோந்தா’ புயல்; மாவட்டம் வாரியாக குழுக்கள் அமைத்து தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தரவு
  • கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலைவாய்ப்பு முகாம்
  • மக்கள் விரோத ஆட்சி நடத்தும் திமுகவுக்கு சட்டமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டப்படும்: பெரம்பலூரில் நயினார் நாகேந்திரன்

Recent Comments

No comments to show.

Archives

  • October 2025
  • September 2025
  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • சைவ சித்தாந்தம் என்பது மதம் சார்ந்தது அல்ல, ஆன்மா சார்ந்தது : மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா தமிழ்நாடு
  • ஸ்ரீ நாராயண குருவின் போதனைகள் காலத்தால் அழியாதவை: ஜனாதிபதி திரௌபதி முர்மு இந்தியா
  • மழையால் வீடு இழந்தவருக்கு புதிய வீடு; நயினார் நாகேந்திரன் திறந்து வைத்தார் தமிழ்நாடு
  • தலைவர் அண்ணாமலை விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதி வெற்றி: டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்த மத்திய அரசு தமிழ்நாடு
  • ‘தாலிபான் திமுக அரசு’ முடிவுக்கு கொண்டுவரப்படும்: மதுரையில் ஹெச்.ராஜா சூளுரை தமிழ்நாடு
  • ஒரே நாடு, ஒரே தேர்தல் முக்கியத்துவம் பற்றி தமிழக மக்களுக்கு எடுத்துரைக்க உள்ளோம்: நயினார் நாகேந்திரன் அரசியல்
  • நடிகர் ராஜேஷ் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷே விழா : நயினார் நாகேந்திரன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார் தமிழ்நாடு

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme