Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • முஸ்லிம் அமைப்பை கேள்வி கேட்க துப்பில்லாத காவல்துறை இந்துக்களுக்கு மட்டும் ஏன் கெடுபிடி? பேராசிரியர் இராம ஸ்ரீனிவாசன் தமிழ்நாடு
  • சேலம் பெருங்கோட்ட நிகழ்ச்சியில் ஒரே நாடு சந்தா சேர்ப்பு முகாம் தமிழ்நாடு
  • காவல்துறையால் கொலை செய்யப்பட்ட இளைஞர்; ஸ்டாலினிடம் 9 கேள்விக்கான பதிலை பெற்றுத்தாருங்கள்; ஊடகங்களுக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை தமிழ்நாடு
  • காசி தமிழ் சங்கமம் 3.0 அனுபவப் போட்டி: 46 பேருக்கு பரிசுகளை வழங்கினார் ஆளுநர் தமிழ்நாடு
  • திருநீறு பூசி, ருத்ராட்சம் அணிந்து மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும்: அண்ணாமலை அரசியல்
  • தோல்வி பயத்தால் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு தொல்லை தரும் திமுக: நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • அனைவருடைய கனவுகளையும் நிறைவேற்றக்கூடிய வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட்: பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா
  • ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கருணாநிதி வரவேற்றார்; ஸ்டாலின் எதிர்க்கிறார் : பவன் கல்யாண் தமிழ்நாடு

அண்ணாமலையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, நிகிதாவுடன் தொடர்புபடுத்தி அவதூறு : பாஜக நிர்வாகி ராஜினி காவல்நிலையத்தில் புகார்

Posted on July 5, 2025July 5, 2025 By வ.தங்கவேல் No Comments on அண்ணாமலையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, நிகிதாவுடன் தொடர்புபடுத்தி அவதூறு : பாஜக நிர்வாகி ராஜினி காவல்நிலையத்தில் புகார்

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, நிகிதாவுடன் தொடர்புபடுத்தி அவதூறு பரப்பிய ஊடகங்கள் மற்றும் திமுக 200 உபிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக மாவட்ட செயலாளர் ராஜினி பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

திருப்புவனம் போலீசாரால் அடித்துக்கொலை செய்யப்பட்ட அஜித்குமார் வழக்கில் தொடர்புடைய நிகிதாவுடன், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இணைந்து உள்ள புகைப்படம் எடுத்துக்கொண்டது போன்ற படத்தை திமுக இணைய கைகூலிகள் சமூக வலைத்தளங்களில் பரப்பியிருந்தனர். மேலும் சன்நியூஸ், சத்யம் நியூஸ், மாலை மலர், நியூஸ் 7 போன்ற தொலைக்காட்சியில் முக்கியச் செய்தியாக ஒளிபரப்பப்பட்டது.

இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அண்ணாமலையுடன் இருப்பது பாஜக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜினி என்பது தெரியவந்தது.

இதுகுறித்து ராஜினி தனது சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கமளித்து, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அதைத் தொடர்ந்து கட்சி பிரமுகர்களுடன் பொன்னேரி காவல் நிலையத்திற்கு (ஜூலை 04) சென்ற ராஜினி, தன்னுடைய புகைப்படத்தை நிகிதாவுடன் தொடர்புபடுத்தி செய்தி வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொன்னேரி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

இது தொடர்பாக ராஜினி அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

நான் பாஜக திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளராக மக்கள் சேவை புரிந்து வருகிறேன். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவலாளி அஜித்குமார் மர்மமான முறையில் இறந்ததும், அதற்கு நிகிதா என்ற பெண் அளித்த புகாரின் பேரில் நடநத்தாக தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

இச்செய்தியின் அடிப்படையில் இன்று (ஜூலை 4) திமுகவின் பிரமுகரான வேலூர் சரவணன் என்ற எக்ஸ் வலைத்தளத்திலும், செந்தில்வேல் என்ற முகநூல் பக்கத்திலும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ‘என் மண், என் மக்கள்’ பாதயாத்திரையில் பொன்னேரி தொகுதியில் பயணம் மேற்கண்ட முன்னாள் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரான அண்ணாமலை அவர்களுடன் நான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தினை, மேற்கண்ட அஜித்குமாரின் மரணத்தினை திசை திருப்பும் நோக்கத்தில், தமிழக பாஜகவின் நற்பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், தவறான தகவல்களை புனைந்து, நிகிதாவிற்கு பதிலாக எனது புகைப்படத்தினை பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

மேலும், தன் குடிமகனை தானே கொன்ற தமிழக அரசின் அலட்சியத்திற்கும், அவர்களின் அவப்பெயரை மறைக்கவே, இவ்வாறான பதிவு செய்து, சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.

இதன் உண்மைதன்மை அறியாமல், சன் நியூஸ், மாலை மலர், சத்யம் நியூஸ், நியூஸ் 7 போன்ற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. இச்சமூகத்தில் இதுப்போன்ற பொய்யான தகவல்களை பரப்பி, பாஜகவிற்கும், பெண்மையின் மாண்பிற்கும், பட்டியலின சமூகத்தில் முன்னேறி வரும் என் போன்ற பெண்ணிற்கும் அநீதி இழைத்துள்ளனர். இதனால், பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை அவர்களின் நற்பெயருக்கு கலங்கம் விளைவித்தும், எனது புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி வெளியிட்டதில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். எனவே, மேற்கண்ட தவறான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்பிய நபர்கள் மீதும், உண்மை தன்மை அறியாமல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பிய, தொலைக்காட்சி நிறுவனங்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்தும், தகுந்த மான நஷ்ட ஈடு வழங்க ஆவண செய்திட இதன் மூலம் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ராஜினி தனது புகாரில் கூறியுள்ளார்.

அரசியல் Tags:#Bjp, #Oreynaadu, #Tamilnadu

Post navigation

Previous Post: அஜித்குமார் கொலையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்: நயினார் நாகேந்திரன்

Related Posts

  • தொடர்ந்து இரண்டு முறை தி.மு.க., வென்றதாக சரித்திரம் இல்லை: நயினார் நாகேந்திரன் அரசியல்
  • ஒரே நாடு, ஒரே தேர்தல் முக்கியத்துவம் பற்றி தமிழக மக்களுக்கு எடுத்துரைக்க உள்ளோம்: நயினார் நாகேந்திரன் அரசியல்
  • தமிழக அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக இயக்கியதன் விளைவாக அமலாக்கத்துறை சோதனை: அண்ணாமலை அரசியல்
  • டெல்லியில் வென்றது சாதாரண வெற்றி அல்ல; வரலாற்று சிறப்புமிக்கது: பிரதமர் மோடி பெருமிதம் அரசியல்
  • பொதுமக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பட்ஜெட் : தலைவர் அண்ணாமலை வரவேற்பு அரசியல்
  • நரேந்திர மோடி ஆட்சியில் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது : தருமபுரியில் எஸ்.ஜி.சூர்யா அரசியல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, நிகிதாவுடன் தொடர்புபடுத்தி அவதூறு : பாஜக நிர்வாகி ராஜினி காவல்நிலையத்தில் புகார்
  • அஜித்குமார் கொலையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்: நயினார் நாகேந்திரன்
  • உள்துறை அமைச்சர் பற்றி அவதூறு பேச்சு: ராசா மீது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் புகார்
  • உலகின் வலிமைக்கு ஒரு நம்பிக்கை தூணாக இந்தியா உள்ளது : கானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பெருமிதம்
  • திருப்புவனத்தில் காவலர்களால் படுகொலை செய்யப்பட்ட இளைஞர்: பாஜக – அதிமுக இணைந்து ஆர்ப்பாட்டம்

Recent Comments

No comments to show.

Archives

  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • தாய்மார்கள், சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் : தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு
  • நிர்வாகத் தோல்வியை மடைமாற்ற மும்மொழிக் கொள்கையை கையில் எடுத்த திமுக: தலைவர் அண்ணாமலை அரசியல்
  • யாழ்ப்பாணம் கலாச்சார மையத்துக்கு திருவள்ளூவர் பெயர் : தலைவர் அண்ணாமலை மகிழ்ச்சி அரசியல்
  • ஈரோடு இரட்டை கொலை; கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு அண்ணாமலை நேரில் ஆறுதல் தமிழ்நாடு
  • மும்மொழிக் கல்விக்கு ஆதரவாக பாஜக சார்பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தொடக்கம் அரசியல்
  • கடலூர் மாவட்ட பாஜகவினர் கைது : தலைவர் அண்ணாமலை கண்டனம் அரசியல்
  • மத்திய அரசு வழங்கிய ரூ.1,050 கோடி நிதியை ஏப்பம் விட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் : தலைவர் அண்ணாமலை அரசியல்
  • சமூக வலைத்தளத்தில் அவதூறு பதிவு : சுந்தரவள்ளி மீது தருமபுரி எஸ்.பி., அலுவலகத்தில் பாஜக மகளிர் அணி புகார் தமிழ்நாடு

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme