---Advertisement---

நடிகர் ராஜேஷ் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய தலைவர் நயினார் நாகேந்திரன்

On: May 31, 2025 7:24 AM
Follow Us:
---Advertisement---

மறைந்த பிரபல நடிகர் ராஜேஷ் பூதவுடலுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மலரஞ்சலி செலுத்தினார்.

சென்னையில் கடந்த 29ஆம் தேதி நடிகர் ராஜேஷ் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், நடிகர் ராஜேஷ் பூதவுடலுக்கு மலர் வளையம் வைத்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் (மே 30) அஞ்சலி செலுத்தினார்.

இதுகுறித்து நயினார் நாகேந்திரன் கூறியதாவது: பன்மொழி திரையுலக நட்சத்திரமாகத் திகழ்ந்த, மறைந்த நடிகர் ராஜேஷ் அவர்களின் பூதவுடலுக்கு இன்று மலரஞ்சலி செலுத்தி வணங்கி மரியாதை செய்தேன். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொண்டேன். தமிழக பாஜக துணைத்தலைவர் கரு.நாகராஜன் அவர்களும் முன்னாள் சென்னை மேயர் கராத்தே தியாகராஜன் அவர்களும் உடனிருந்து மரியாதை செலுத்தினர். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Related Post

பிஹாரை போன்று நாளை தமிழ்நாட்டிலும் என்.டி.ஏ. வெற்றி பெறும்; தென்காசியில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

கோவையில் இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி: பி.எம்.கிசான் நிதி ரூ.18,000 கோடி விடுவிப்பு

பாலக்கோடு அருகே 3 ஆண்டுகளாக கோவில் வளாகம் மற்றும் தெருக்களில் நடக்கும் வகுப்பறை; இடம் வாங்கி கொடுத்தும் கண்டுகொள்ளாத விடியாத அரசு

5 சட்டமன்றத் தொகுதிகளையும் என்.டி.ஏ., கைப்பற்றியதால்தான் தருமபுரியை திமுக வஞ்சிக்கிறது: மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆவேசம்

விடியா அரசைக் கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு ஆலோசனைகள் வழங்கிய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்

Leave a Comment