Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • தீர்வு கொடுக்காமல் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விஜய்: தலைவர் அண்ணாமலை காட்டம் அரசியல்
  • 2027 மார்ச்சில் மக்கள் தொகை கணக்கெடுப்பு; கெஜட்டில் அரசாணையை வெளியிட்டது மத்திய அரசு இந்தியா
  • பாகிஸ்தான் இனி தாக்குதல் நடத்தினால் அணு ஆயுத போர் தான்: நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • டங்ஸ்டன் சுரங்கம் வராது; மீறி வந்தால் களத்தில் இறங்க தயார்: தலைவர் அண்ணாமலை உறுதி அரசியல்
  • தமிழ் மொழியின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் பிரதமர்: காசி தமிழ்ச் சங்கமத்தில் தலைவர் அண்ணாமலை இந்தியா
  • “ஆபரேஷன் சிந்தூர்” இந்தியா நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலி? இந்தியா
  • திமுக ஆட்சியில் குற்றங்கள் தமிழ்நாடு
  • மத்திய அரசு வழங்கிய ரூ.1,050 கோடி நிதியை ஏப்பம் விட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் : தலைவர் அண்ணாமலை அரசியல்

டெல்லியில் வென்றது சாதாரண வெற்றி அல்ல; வரலாற்று சிறப்புமிக்கது: பிரதமர் மோடி பெருமிதம்

Posted on February 8, 2025 By admin No Comments on டெல்லியில் வென்றது சாதாரண வெற்றி அல்ல; வரலாற்று சிறப்புமிக்கது: பிரதமர் மோடி பெருமிதம்

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வென்றது சாதாரண வெற்றி அல்ல; வரலாற்று சிறப்புமிக்கது என பாஜக தலைமை அலுவலகத்தில் ஆற்றிய உரையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.

டெல்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 48 தொகுதிகளை கைப்பற்றி 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கிறது. இதனால் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று ( 08.02.2025 ) மாலை புது தில்லி பாஜக தலைமையகத்தில் நடந்த கொண்டாட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது : சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியை மக்கள் கொடுத்துள்ளனர். சேவை செய்ய எங்களுக்கு வாய்ப்பு கொடுத்த மக்களுக்கு எனது வணக்கங்கள்.

தலைசிறந்த தலைநகரை உருவாக்க வேண்டும் என்பதற்காக மக்கள் பாஜகவிற்கு வாக்களித்து உள்ளனர். அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது மக்கள் திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளனர். தற்போது ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்து டெல்லி விடுதலை பெற்றுள்ளது.

இந்த வெற்றியில் ஒவ்வொரு பா.ஜ., தொண்டருக்கும் பங்கு உண்டு. அவர்கள் கடுமையாக உழைத்தனர். இரட்டை இன்ஜின் அரசு டெல்லியின் முன்னேற்றத்திற்கு கடினமாக உழைக்கும். இரட்டை இன்ஜின் அரசு மீதான நம்பிக்கையை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

டெல்லி இனிமேல் இரட்டை வேகத்தில் முன்னேறும். மக்கள் எங்களுக்கு அளித்த அன்பை இரண்டு மடங்காக திருப்பித் தருவோம். ஷார்ட்கட் அரசியல், ஷார்ட் சர்க்யூட் ஆகி விட்டது. நாடாளுமன்ற தேர்தலில் டெல்லி மக்கள் என்னை எப்போதும் ஏமாற்றியது இல்லை. கடந்த 3 தேர்தல்களிலும் 7 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது.

நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பிறகு, ஹரியானா மற்றும் மஹாராஷ்டிராவில் சாதனை படைத்து இருந்தோம். தற்போது டெல்லியிலும் சாதனை படைத்து விட்டோம். டெல்லி என்பது சாதாரண நகரம் அல்ல. அது மினி இந்தியா. இனிமேல் டெல்லி இளைஞர்கள் சிறந்த நிர்வாகத்தை உணர்வார்கள்.

பன்முகத்தன்மை வாய்ந்த டெல்லி இந்த வெற்றி மூலம் பாஜகவிற்கு ஆசி வழங்கி உள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின் அராஜகம் மற்றும் அகங்காரத்திற்கு மக்கள் முடிவு கட்டி உள்ளனர்.

நானும் பூர்வாஞ்சல் பகுதியில் இருந்து எம்.பி., ஆக தேர்வு செய்யப்பட்டவன் எனப் பெருமையுடன் கூறிக் கொள்கிறேன். இப்பகுதி மக்கள் பாஜகவிற்கு ஆதரவு அளித்து உள்ளனர். டெல்லியில் ஒவ்வொரு மூலையிலும் தாமரை மலர்ந்துள்ளது.

இது சாதாரண வெற்றி அல்ல. மோடியின் வாக்குறுதி மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு தலைவணங்குகிறேன். அனைத்து தரப்பு மக்களும் பாஜகவிற்கு ஆதரவு அளித்து உள்ளனர். என்றும் மக்களுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவோம்.

தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் மாநிலங்கள், வளர்ச்சியில் உச்சம் பெற்றுள்ளன. டெல்லியில் கிடைத்த வெற்றி என்பது கொள்கை, வளர்ச்சி, நம்பிக்கைக்கானது. ஊழலுக்கும், அரசியலில் பொய்க்கும் இடமில்லை என்பதை மக்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.

வளர்ச்சிக்கு இடையூறாக இருந்த மிகப்பெரிய தடையை அகற்றி உள்ளீர்கள். ஆம் ஆத்மி அரசு டெல்லி மெட்ரோ பணிகளை தடுத்தது. ஆயுஷ்மான் பாரத் பலன்கள் மக்களை சென்றடைவதை தடுத்தது.
நிர்வாகம் என்பது நாடகத்திற்கான மேடை அல்ல. டெல்லியில் முன்னேற்றத்திற்காக உழைப்போம். தேசிய ஜனநாயக கூட்டணி எங்கு எல்லாம் உள்ளதோ அங்கு எல்லாம் வளர்ச்சி, நம்பிக்கை, சிறந்த நிர்வாகம் இருக்கும் என்பதை ஒட்டு மொத்த நாடும் அறியும்.

இந்தியாவில் பல மாநிலங்களில் பாஜக ஆட்சிகள் மீண்டும் தேர்வு செய்யப்படுகின்றன. இதற்கு பாஜக செய்த வளர்ச்சி பணிகள் மட்டுமே காரணம். மோடியின் வாக்குறுதிகள் என்பது வளர்ச்சிக்கானது. நடுத்தர மக்கள், ஏழைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

அரசியல், இந்தியா Tags:#Bjp, #Oreynaadu, #PM Modi, #Tamilnadu

Post navigation

Previous Post: துரு புடிச்சு இத்துப்போன ஸ்டாலினின் இரும்புக்கரம்
Next Post: டெல்லியில் 67 தொகுதிகளில் டெபாசிட் இழந்த காங்கிரஸ்

Related Posts

  • மஹா கும்பமேளாவில் புனித நீராடிய தலைவர் அண்ணாமலை இந்தியா
  • திருவள்ளுவரையும், திருக்குறளையும் களவாட நினைப்பதே திமுக கூட்டம்தான்: ஸ்டாலினுக்கு, வானதி சீனிவாசன் பதிலடி அரசியல்
  • ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை:பட்டியலின, பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு தலா ரூ.2 கோடி கடன்; பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு இந்தியா
  • நிர்வாகத் தோல்வியை மடைமாற்ற மும்மொழிக் கொள்கையை கையில் எடுத்த திமுக: தலைவர் அண்ணாமலை அரசியல்
  • 3 நாளில் பாகிஸ்தானை மண்டியிட வைத்த இந்திய ராணுவம்: ஜம்மு காஷ்மீர் ஆளுநர் இந்தியா
  • 2026 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க கனிமவள கொள்ளை கும்பலை நம்பியிருக்கும் திமுக : தலைவர் அண்ணாமலை அரசியல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷே விழா : நயினார் நாகேந்திரன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்
  • அண்ணாமலையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, நிகிதாவுடன் தொடர்புபடுத்தி அவதூறு : பாஜக நிர்வாகி ராஜினி காவல்நிலையத்தில் புகார்
  • அஜித்குமார் கொலையில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்: நயினார் நாகேந்திரன்
  • உள்துறை அமைச்சர் பற்றி அவதூறு பேச்சு: ராசா மீது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் புகார்
  • உலகின் வலிமைக்கு ஒரு நம்பிக்கை தூணாக இந்தியா உள்ளது : கானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பெருமிதம்

Recent Comments

No comments to show.

Archives

  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • கந்த புராணமும், கந்த சஷ்டி கவசமும் இருப்பது போல் கந்தர் மலையும் இந்துக்களுக்காக இருக்கும் : ஹெச்.ராஜா அரசியல்
  • சமூக வலைத்தள டிரெண்டிங்கில் பால்டாயில் பாபு அரசியல்
  • தமிழகத்தில் புனரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார் இந்தியா
  • 95 கோடி பேருக்கு சமூக பாதுகாப்பு ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா
  • மகாத்மா காந்தி நினைவு தினம்: ராஜ்காட்டில் பிரதமர் மோடி மரியாதை இந்தியா
  • “ஆபரேஷன் சிந்தூர்” இந்தியா நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலி? இந்தியா
  • பாஜக ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துரையாடிய நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • சசி தரூர், பினராயி விஜயன் இங்கே இருப்பதால் இண்டி கூட்டணியினர் பலர் தூக்கத்தை இழப்பார்கள்: கேரளாவில் பிரதமர் மோடி பேச்சு இந்தியா

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme