Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • ஈரோடு இரட்டை கொலை; கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு அண்ணாமலை நேரில் ஆறுதல் தமிழ்நாடு
  • 95 கோடி பேருக்கு சமூக பாதுகாப்பு ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா
  • அப்பாவி இளைஞனைத் துள்ளத் துடிக்கக் கொன்றுவிட்டு “சாரி” என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி அரசியல்
  • டங்ஸ்டன் சுரங்கம் வராது; மீறி வந்தால் களத்தில் இறங்க தயார்: தலைவர் அண்ணாமலை உறுதி அரசியல்
  • 2026 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க கனிமவள கொள்ளை கும்பலை நம்பியிருக்கும் திமுக : தலைவர் அண்ணாமலை அரசியல்
  • பாஜக மாநில மையக்குழு கூட்டம் தமிழ்நாடு
  • குஜராத் சென்ற பிரதமர் மோடி மீது மலர் தூவிய கர்னல் சோபியா குரேஷி குடும்பத்தினர் இந்தியா
  • காலத்தால் அழியாத சக்தி வாய்ந்த ஊடகம்: உலக வானொலி தினத்தில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி இந்தியா

‘மோந்தா’ புயல்; மாவட்டம் வாரியாக குழுக்கள் அமைத்து தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தரவு

Posted on October 28, 2025October 28, 2025 By வ.தங்கவேல் No Comments on ‘மோந்தா’ புயல்; மாவட்டம் வாரியாக குழுக்கள் அமைத்து தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தரவு

‘‘மோந்தா’’ புயல் காரணமாக வரும் நாட்களில் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பரவலாக மழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் பாதிப்பில் இருந்து மக்களை காக்க மாவட்டம் வாரியாக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (அக்டோபர் 28) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

‘‘மோந்தா’’ புயல் காரணமாக வரும் நாட்களில் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பரவலாக மழை மற்றும் பலத்த காற்று வீசும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகையால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், மக்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் உதவிகளை மேற்கொள்ள மாவட்ட வாரியாக குழுக்கள் அமைக்க தேசிய தலைவர் ஜே.பி.நட்டாஜி அவர் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட வடக்கு கடலோர மாவட்டங்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்ற எச்சரிக்கையுடன் சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

கடலூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, சேலம், திண்டுக்கல், வேலூர், விழுப்புரம், தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி போன்ற மாவட்டங்களிலும் மிதமான முதல் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏற்கனவே கடலில் உள்ளவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்ப வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ளப்பெருக்கைத் தவிர்க்க எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதோடு அதிகாரப்பூர்வ வழிமுறைகளை கவனமாகப் பின்பற்ற வேண்டும்.

பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கவும், கனமழையின் போது வீட்டிலேயே இருக்கவும். முடிந்தவரை அண்டை வீட்டாருக்கு அல்லது தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்யவும் நான் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். நமது கூட்டு விழிப்புணர்வு மற்றும் தயார்நிலை உயிர் இழப்பைத் தடுக்கவும், சேதத்தைக் குறைக்கவும் உதவும்.

சரியான நேரத்தில் ஒருங்கிணைப்பு மற்றும் ஆதரவை உறுதி செய்வதற்காக, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட அளவிலான கண்காணிப்பு மற்றும் அவசரகால நடவடிக்கை குழுக்களை அமைக்க நான் அறிவுறுத்தியுள்ளேன். இந்தக் குழுக்கள் உள்ளூர் நிர்வாகங்களுடன் நெருக்கமாகப் பணியாற்றி பொதுமக்களுக்கு உதவவும். நிலைமையைக் கண்காணிக்கவும், தேவையான இடங்களில் நிவாரணம் வழங்கவும் உதவும். மேலும், தமிழ்நாடு பாஜகவின் மருத்துவப்பிரிவு மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் நான் கோருகிறேன்.

இந்த கடுமையான வானிலை காலத்தை எச்சரிக்கையுடனும், பொறுப்புடனும் எதிர்கொள்வதில் நாம் அனைவரும் விழிப்புடனும், ஒற்றுமையுடனும் இருப்போம். கீழ்கண்ட மாவட்டங்களுக்கு மாவட்ட வாரியாக குழுக்கள் நியமனம் செய்யப்படுகிறார்.

சென்னை மாவட்டங்களுக்கான குழுக்கள்:

1. கரு.நாகராஜன், மாநில துணைத் தலைவர்
2. கராத்தே தியாகராஜன், மாநில செயலாளர்
3. சுமதி வெங்கடேஷ், மாநில செயலாளர்
4. எம்.சி.முனுசாமி, மாநில செயற்குழு உறுப்பினர்
5. சஞ்சீவி, தென் சென்னை மாவட்ட தலைவர்
6. குமார், சென்னை கிழக்கு மாவட்ட தலைவர்
7. கிரி, மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர்
8. நாகராஜ் வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர்
9. பாலாஜி வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கான குழுக்கள்:

1. வினோஜ் செல்வம், மாநில செயலாளர்
2. மீனாட்சி, மாநில செயலாளர்
3. டாக்டர் அனந்த பிரியா, மாநில செயலாளர்
4. சுந்தரம், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர்
5. அஸ்வின் குமார், திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர்
6. பாஸ்கர், சென்னை மேற்கு மாவட்ட தலைவர்
7. பிரவீன்குமார், செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர்
8. அக்னி கிருஷ்ணமூர்த்தி, கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர்
9. தமிழ் அழகன், கடலூர் மேற்கு மாவட்ட தலைவர்
10. விநாயகம், விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர்
11. தாமரை ஜெகதீசன், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர்
12. ரகுராமன், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர்

தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கான குழுக்கள்:

1. முகானந்தம், மாநில பொதுச் செயலாளர்
2. முரளீதரன், இராமநாதபுரம் மாவட்ட தலைவர்
3. ஜெகதீசன், புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட தலைவர்
4. ஜெய்சதீஷ், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவர்
5. தங்க கென்னடி, தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தலைவர்
6. செல்வம், திருவாரூர் மாவட்ட தலைவர்
7. விஜயேந்திரன், நாகப்பட்டினம் மாவட்ட தலைவர்
8. நாஞ்சில் பாலு, மயிலாடுதுறை மாவட்ட தலைவர்

கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கான குழுக்கள்:

1. பொன் பாலகணபதி, மாநில பொதுச்செயலாளர்
2. மீனா தேவ், மாநில செயலாளர்
3. சீமா, மாநில அமைப்பாளர் மீனவர் பிரிவு
4. கோபகுமார் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைவர்
5. சுரேஷ் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தலைவர்
6. சித்ராங்கதன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர்
7. தமிழ்செல்வன், திருநெல்வேலி தெற்கு மாவட்ட தலைவர்

இராணிப்பேட்டை மாவட்டங்களுக்கான குழுக்கள்:

1. கார்த்தியாயினி, மாநில பொதுச்செயலாளர்
2. ஆனந்தன், இராணிப்பேட்டை மாவட்ட தலைவர்
3. தசரதன், வேலூர் மாவட்ட தலைவர்
இவ்வாறு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

தமிழ்நாடு Tags:#Bjp, #nainar nagendran, #Oreynaadu, #Tamilnadu

Post navigation

Previous Post: கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலைவாய்ப்பு முகாம்

Related Posts

  • திமுக ஆட்சியில் குற்றங்கள் தமிழ்நாடு
  • தருமபுரியில் காலாவதியான அரசுப் பேருந்து மோதி சிறுமி உயிரிழந்திருக்கும் செய்தி நெஞ்சை கனக்க வைக்கிறது : நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • பாஜக ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துரையாடிய நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • திமுக ஆட்சியில் போதையின் கூடாரமாகவும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற கோட்டையாக செங்கல்பட்டு மாறிவிட்டது: நயினார் நாகேந்திரன் அரசியல்
  • ஹேமமாலினி தலைமையிலான எம்.பி.,க்கள் குழு கரூரில் நேரடி விசாரணை தமிழ்நாடு
  • கல்வி நிலையங்களில் திமுகவினர் தரங்கெட்ட நாடகம்: அண்ணாமலை கண்டனம் தமிழ்நாடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ‘மோந்தா’ புயல்; மாவட்டம் வாரியாக குழுக்கள் அமைத்து தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தரவு
  • கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலைவாய்ப்பு முகாம்
  • மக்கள் விரோத ஆட்சி நடத்தும் திமுகவுக்கு சட்டமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டப்படும்: பெரம்பலூரில் நயினார் நாகேந்திரன்
  • ஸ்ரீ நாராயண குருவின் போதனைகள் காலத்தால் அழியாதவை: ஜனாதிபதி திரௌபதி முர்மு
  • விரைவில் திருட்டு திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தை விட்டு விரட்டப்படும்: வடசென்னையில் நயினார் நாகேந்திரன் சூளுரை

Recent Comments

No comments to show.

Archives

  • October 2025
  • September 2025
  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • மாம்பழ விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் திராவிட மாடல் : நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • திருவள்ளுவரையும், திருக்குறளையும் களவாட நினைப்பதே திமுக கூட்டம்தான்: ஸ்டாலினுக்கு, வானதி சீனிவாசன் பதிலடி அரசியல்
  • பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கமலாலயத்தில் அஞ்சலி தமிழ்நாடு
  • காவல்துறையால் கொலை செய்யப்பட்ட இளைஞர்; ஸ்டாலினிடம் 9 கேள்விக்கான பதிலை பெற்றுத்தாருங்கள்; ஊடகங்களுக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை தமிழ்நாடு
  • ம.பொ.சி 119வது பிறந்த நாள்; நயினார் நாகேந்திரன் மரியாதை தமிழ்நாடு
  • கந்த புராணமும், கந்த சஷ்டி கவசமும் இருப்பது போல் கந்தர் மலையும் இந்துக்களுக்காக இருக்கும் : ஹெச்.ராஜா அரசியல்
  • தோல்வி பயத்தால் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு தொல்லை தரும் திமுக: நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • மோடி ஐயா உங்களுடன் இருப்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளார் : மதுரை விவசாயிகள் மத்தியில் தலைவர் அண்ணாமலை பெருமிதம் தமிழ்நாடு

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme