Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • போலீஸிடம் வழங்கிய ஆதாரம் ஐடிவிங் நிர்வாகிக்கு சென்றது எப்படி? திமுக நிர்வாகி மீது புகார் அளித்த இளம்பெண் கண்ணீர் தமிழ்நாடு
  • யாழ்ப்பாணம் கலாச்சார மையத்துக்கு திருவள்ளூவர் பெயர் : தலைவர் அண்ணாமலை மகிழ்ச்சி அரசியல்
  • தருமபுரி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.,க்கு மிரட்டல்: திமுக மாவட்ட பொறுப்பாளர் மீது பாஜக புகார் அரசியல்
  • முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடுகள் மாதிரி அமைப்பு: மக்கள் தரிசனத்துக்கு இன்று முதல் அனுமதி தமிழ்நாடு
  • ஆதம்பூர் விமானப்படை வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் இந்தியா
  • பஹல்காமில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் வெறியாட்டம்; ‘‘நீ ஹிந்துவா?’’ என கேட்டு, கேட்டு 28 சுற்றுலாப்பயணிகளை கொன்ற கொடூரம் இந்தியா
  • துரு புடிச்சு இத்துப்போன ஸ்டாலினின் இரும்புக்கரம் தமிழ்நாடு
  • அமெரிக்காவின் பொற்காலம் இன்று முதல் தொடங்குகிறது: அதிபராக பதவியேற்ற பின் ட்ரம்ப் உரை உலகம்

நரேந்திர மோடி ஆட்சியில் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது : தருமபுரியில் எஸ்.ஜி.சூர்யா

Posted on June 19, 2025June 19, 2025 By வ.தங்கவேல் No Comments on நரேந்திர மோடி ஆட்சியில் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது : தருமபுரியில் எஸ்.ஜி.சூர்யா

பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது என பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தெரிவித்துள்ளார்.

தருமபுரி நகரில் தொழில்முறை சந்திப்பு கூட்டம் (ஜூன் 18) பாஜக மாவட்டத் தலைவர் சி.சரவணன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்டத்தை சார்ந்த மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கலந்து கொண்டு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 11 ஆண்டுகால சாதனைகள் குறித்து எடுத்துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா கூறியதாவது: பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான வரிசையில் கழிப்பறைகள், 105 கோடி வங்கி கணக்குகள் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது. அதேபோல, அரசின் உதவித் தொகைகள், மானிய திட்டங்கள் நேரடியாக பயனாளிகளுக்கு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதால், கடந்த 11 ஆண்டுகளில் 3 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு மிச்சமாகியுள்ளது.

தொழில்துறையில், 3.6 கோடி ரூபாயாக இருந்த சிறு, குறு தொழில்கள், 6.1 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுதவிர, சாலை வசதி, மருத்துவ கல்லூரிகள், மெட்ரோ ரயில் திட்டம் என, பல ஆயிரம் கோடி ரூபாயில் தமிழகத்தில் பணிகள் நடந்து வருகிறது.

சட்டசபை தேர்தலில் தி.மு.க.,-வை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு அ.தி.மு.க., தலைமையில் ஆட்சி அமையும். அதற்காக தேர்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பா.ஜ.க., தலைமையிலான மத்திய அரசின் 11 ஆண்டுகால சாதனைகளை கடைக்கோடி மக்களிடமும் கொண்டு செல்வோம். இவ்வாறு எஸ்.ஜி.சூர்யா கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் ஒரே நாடு மாநில செய்தியாளர் வ.தங்கவேல், முன்னாள் மாவட்டத் தலைவர்கள் வரதராஜ், பூபதி, மாவட்ட பொதுச்செயலாளர்கள் கணேசன், பிரவின், சங்கீதா, மாவட்ட செயலாளர்கள் வித்யா, கிருஷ்ணவேனி, மதியழகன், மாதன், மாவடத்துணைத்தலைவர் பொன்னுசாமி, நகரத் தலைவர் சாய் ஆறுமுகம், நகர பொதுச்செயலாளர் பிரபாகரன், ஐடி பிரிவு மாநில செயலாளர் ஜெய்சூர்யா உட்பட பல்வேறு அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

அரசியல் Tags:#Bjp, #Oreynaadu, #Tamilnadu

Post navigation

Previous Post: மாம்பழ விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் திராவிட மாடல் : நயினார் நாகேந்திரன்
Next Post: இளைஞர்கள் யோகாவை வாழ்நாள் முழுவதும் ஒருதுணையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி

Related Posts

  • புதிய கல்விக் கொள்கையில் ஹிந்தி மொழி கட்டாயப்படுத்தவில்லை: மத்திய அமைச்சர் எல்.முருகன் அரசியல்
  • தமிழக அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக இயக்கியதன் விளைவாக அமலாக்கத்துறை சோதனை: அண்ணாமலை அரசியல்
  • வடலூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு திமுக அரசுக்கு சம்மட்டி அடி: தலைவர் அண்ணாமலை அரசியல்
  • அமைப்பு பருவம் – 2025 புதிய மாவட்ட தலைவர்கள் பட்டியல் அறிவிப்பு அரசியல்
  • மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து பெற சென்ற தமிழிசையை 3 மணி நேரம் வெயிலில் காக்க வைத்த போலீஸ் அரசியல்
  • முருக பக்தர்கள் மீது கை வைப்பதா? சேகர்பாபு, ரகுபதியை எச்சரித்த தலைவர் அண்ணாமலை அரசியல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • காவல்துறையால் கொலை செய்யப்பட்ட இளைஞர்; ஸ்டாலினிடம் 9 கேள்விக்கான பதிலை பெற்றுத்தாருங்கள்; ஊடகங்களுக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை
  • 95 கோடி பேருக்கு சமூக பாதுகாப்பு ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்
  • திருநீறு பூசி, ருத்ராட்சம் அணிந்து மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும்: அண்ணாமலை
  • தொடர்ந்து இரண்டு முறை தி.மு.க., வென்றதாக சரித்திரம் இல்லை: நயினார் நாகேந்திரன்
  • ம.பொ.சி 119வது பிறந்த நாள்; நயினார் நாகேந்திரன் மரியாதை

Recent Comments

No comments to show.

Archives

  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • “ஆபரேஷன் சிந்தூர்” இந்தியா நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலி? இந்தியா
  • ஒவ்வொரு பாஜக தொண்டரும் திமுக ஆட்சியை வேறோடு பிடுங்கி எறியத் தயாராகி விட்டார்கள்: கோவையில் தலைவர் அண்ணாமலை கர்ஜனை அரசியல்
  • கெட்அவுட் ஸ்டாலின்: தருமபுரி பாஜக சார்பில் முழக்கம் அரசியல்
  • திமுக அரசு செய்த தவறை மறைக்க ஊடகங்களை தவறாக பயன்படுத்தி வருகிறது : கே.பி.ராமலிங்கம் நாடு
  • காசி தமிழ் சங்கமம் 3.0 அனுபவப் போட்டி: 46 பேருக்கு பரிசுகளை வழங்கினார் ஆளுநர் தமிழ்நாடு
  • முக்கியமான காலகட்டத்தில் பயணிப்பதால் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்: அமைச்சகங்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை இந்தியா
  • மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடியின் எக்ஸ் சமூக வலைத்தளத்தை கையாளும் செஸ் வீராங்கனை வைஷாலி இந்தியா
  • ஈரோடு இரட்டை கொலை; கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு அண்ணாமலை நேரில் ஆறுதல் தமிழ்நாடு

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme