Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • தருமபுரியில் காலாவதியான அரசுப் பேருந்து மோதி சிறுமி உயிரிழந்திருக்கும் செய்தி நெஞ்சை கனக்க வைக்கிறது : நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • அமைச்சர் கமிஷன் காந்தி ஊழலுக்கு சப்பைக்கட்டு கட்டாமல் உடனடியாக பதவி விலக வேண்டும் : தலைவர் அண்ணாமலை அரசியல்
  • திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷே விழா : நயினார் நாகேந்திரன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார் தமிழ்நாடு
  • காவல்துறையால் கொலை செய்யப்பட்ட இளைஞர்; ஸ்டாலினிடம் 9 கேள்விக்கான பதிலை பெற்றுத்தாருங்கள்; ஊடகங்களுக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை தமிழ்நாடு
  • தமிழகத்தில் ரூ.22,800 கோடி ரயில்வே திட்டங்களுக்கு அனுமதி ; மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தமிழ்நாடு
  • பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கமலாலயத்தில் அஞ்சலி தமிழ்நாடு
  • இசை இறைவனுடன் ஒரு சந்திப்பு: தலைவர் அண்ணாமலை நெகிழ்ச்சி தமிழ்நாடு
  • வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதில் மகளிர் சக்திக்கு பெரும் பங்கு உள்ளது : பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா

ரூ.4 கோடி விவகாரத்தில் உண்மைக்கு மாறான தகவலை வெளியிடும் சிபிசிஐடி அதிகாரிகள் மற்றும் சன்நியூஸ், புதிய தலைமுறைக்கு நயினார் நாகேந்திரன் நோட்டீஸ்

Posted on July 24, 2025July 24, 2025 By வ.தங்கவேல் No Comments on ரூ.4 கோடி விவகாரத்தில் உண்மைக்கு மாறான தகவலை வெளியிடும் சிபிசிஐடி அதிகாரிகள் மற்றும் சன்நியூஸ், புதிய தலைமுறைக்கு நயினார் நாகேந்திரன் நோட்டீஸ்

கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது பிடிப்பட்ட 4 கோடி ரூபாய் வழக்கு விவகாரத்தில் உண்மைக்கு மாறான தகவலை ஊடகங்களுக்கு வெளியிடும் சிபிசிஐடி ஐ.ஜி., எஸ்.பி., டி.எஸ்.பி., மற்றும் அதனை செய்தியாக வெளியிடும் சன்நியூஸ், புதிய தலைமுறை தொலைக்காட்சிகளுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக பாஜக மாநிலத்துணைத் தலைவரும், வழக்கறிஞருமான பால்கனகராஜ் நோட்டீஸ் தொடர்பாக ஒரே நாடு பத்திரிகைக்கு கூறியிருப்பதாவது:

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் திருநெல்வேலி பாராளுமன்றத் தொகுதியில் நயினார் நாகேந்திரன் அவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார். அப்போது 6.04.2024 அன்று தாம்பரம் ரயில் நிலையத்தில் சுமார் 4 கோடி ரூபாய் வைத்திருந்ததாக மூன்று நபர்களை தேர்தல் அதிகாரிகள் பிடித்தனர்.

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் நயினார் நாகேந்திரன் அவர்கள் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கு கொண்டுசெல்லப்படும் பணம் என்று அந்த நபர்கள் தெரிவித்ததாக பொய்யான குற்றச்சாட்டை அரசியல் நோக்கத்துடன் அந்த வழக்கை தாம்பரம் போலீசார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருந்தனர். பின்னர் அந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கை சென்னையில் உள்ள சிபிசிஐடி டிஎஸ்பி விசாரணைக்காக எடுத்துக்கொண்டார். அந்த வழக்கில் பிடிப்பட்ட மூன்று நபர்களிடம் விசாரணை மேற்கொண்டார். அவர்கள் சொன்ன வாக்குமூலத்தின் அடிப்படையிலே அப்பணம் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது, யார் கொடுத்தார்கள் என்றெல்லாம் டிஎஸ்பி விசாரணை செய்தார்.

இதற்கிடையே உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் எல்லாம் நெருக்கப்படுகிறார்கள், அவர்களின் செல்போன்கள் எல்லாம் கேட்கிறார்கள் எனக்கூறப்பட்டதை தொடர்ந்து அதை கொடுக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனை எதிர்த்து சிபிசிஐடி சார்பில் உச்ச நீதிமன்றம் சென்றனர். இவ்வாறு விசாரணை நடந்துக்கொண்டிருக்கும்போது தற்போதைய தமிழகத்தின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களையும் விசாரணை செய்தார்கள். அவர் தெளிவாக கூறிவிட்டார். இந்தப் பணம் எனக்கு சம்மந்தப்பட்டது அல்ல தேர்தலுக்காக கொண்டுவரப்பட்டது என்று சொல்வது எல்லாம் உண்மைக்கு புறம்பானது. அந்த பணத்தை வேறு ஒருவர் தனது எனக்கூறியிருக்கிறார்.

எனவே இது தேர்தலுக்காக போடப்பட்ட வழக்கு ஆகும். ஆளும் திமுக அரசால் தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டை வாக்குமூலமாக பதிவு செய்து பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் எல்லோரையும் அவமானப்படுத்துகிறார்கள் என்றெல்லாம் வாக்குமூலம் கொடுத்து விட்டார்.

இந்த சூழ்நிலையில் பணம் பிடிப்பட்ட வழக்கு சம்மந்தமாக வேறு யாராவதை கைது செய்தால் அல்லது விசாரணைக்கு உட்படுத்தினால் இந்த சிபிசிஐடி காவல்துறை என்ன செய்கிறது என்று சொன்னால், காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய பிறகு அத்துறை சார்பில் ஒரு அறிக்கை ஒன்றை ஊடகத்திடம் கொடுக்கிறார்கள்.

காவல்துறை சார்பில் ஊடகங்களிடம் கொடுக்கப்படும் அறிக்கை; உதாரணத்திற்கு சன்நியூஸ், புதிய தலைமுறை போன்ற ஊடகங்கள் எல்லாம் இச்செய்தியை வெளியிடும் போது நான்கு கோடி விவகாரம், தேர்தலுக்காக வழங்குவதற்காக பிடிப்பட்ட பணம் என்று  நயினார் நாகேந்திரன் அவர்கள் விசாரணைக்கு ஆஜராகியபோது எடுத்த வீடியோ காட்சிகளை இணைத்து ஒரு தொடர் கதையாக சொல்லிக்கொண்டு வருகின்றனர்.

இதை தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் வழக்கறிஞர்கள் சார்பில் சிபிசிஐடி ஐஜி, எஸ்.பி., டி.எஸ்.பி., ஆகியோர்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளார். தற்போது டி.எஸ்.பி.,தான் புலன் விசாரணை அதிகாரியாக உள்ளார். அது மட்டுமின்றி சன்நியூஸ், புதிய தலைமுறை தொலைக்காட்சிகளுக்கும் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

அந்த நோட்டீஸில் என்ன சொல்கிறார் என்றால், இங்க பாருங்க என்னை கூப்பிட்டாங்க, விசாரணை செய்தார்கள். அதற்கு இப்பணத்திற்கும் எனக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்று நான் தெளிவாக பதில் சொல்லிவிட்டேன். தேர்தல் நேரத்தின் போது எந்த பணம் கைப்பற்றப்பட்டாலும் அதை யாரு மேல வேண்டுமானாலும் அவர்களுக்காக கொண்டு செல்லப்படுகிற பணம் என்று சொல்லலாம். எனவே கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அதை கொடுத்தவர்களுக்கும் தொடர்பு இல்லை என நயினார் நாகேந்திரன் நிருபித்துவிட்டு வந்துவிட்டார்.
தொடர்ந்து அந்த வழக்கில் நயினார் நாகேந்திரன் ஆஜராகி விளக்கம் சொன்ன பிறகும் கூட அவரைப்பற்றி தவறாக சொன்னதால் தற்போது சிபிசிஐடி ஐஜி, எஸ்.பி., டி.எஸ்.பி., சன்நியூஸ், புதிய தலைமுறை உள்ளிட்டோருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

இந்த நோட்டீஸில் நயினார் நாகேந்திரன் கூறும்போது; வழக்கு விசாரணை செய்யுங்க, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுங்க, நீதிமன்றத்தில் வாதாடுங்க, அதைவிடுத்து மீடியா முன்பு விசாரணை நடத்தக்கூடாது. தேவையின்றி எனது படத்தை போட்டு பொதுமக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை கொண்டு சேர்க்கக்கூடாது.

வேண்டும் என்றே காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசு, பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான பிறகு வேண்டும் என்றே அந்த வழக்கில் அழுத்தம் கொடுத்து அவரது பெயரையும், புகழையும் கெடுக்கின்ற வகையிலே தொடர்ந்து தொலைக்காட்சிகளில் புகைப்படத்தை போட்டு அவதூறை பரப்புகிறார்கள். எனவே இதுபோன்று தவறான செய்திகளை வெளியிடுவதற்கு காவல்துறை அறிக்கை கொடுக்கக்கூடாது. இதை கவனிக்க தவறிய ஐஜி, எஸ்.பி., டி.எஸ்.பி., ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பொய்யான செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் நிறுத்த வேண்டும். இல்லை என்றால் நீதிமன்றத்தில் உரிய பரிகாரத்தை பெறுவேன் என நோட்டீஸில் கூறியுள்ளார்.

இதுபோன்ற வழக்குகளில் காவல்துறை மற்றும் மீடியா ஆகியோர் நீதிமன்ற விசாரணை நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே கூறியுள்ளது. அப்படி மீறி புகைப்படத்தை இந்த விசாரணை வழக்கில் வேண்டும் என்றே இணைத்து செய்தி வெளியிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு பால்கனகராஜ் கூறியுள்ளார்.

தமிழ்நாடு Tags:#Bjp, #Oreynaadu, #Tamilnadu

Post navigation

Previous Post: லண்டன் சென்றடைந்தார் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு அளித்த இந்திய மக்கள்
Next Post: ராஜராஜன், ராஜேந்திர சோழனுக்கு பிரமாண்ட சிலைகள்: கங்கைகொண்ட சோழபுரம் ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி அறிவிப்பு

Related Posts

  • ம.பொ.சி 119வது பிறந்த நாள்; நயினார் நாகேந்திரன் மரியாதை தமிழ்நாடு
  • தமிழகத்தில் ரூ.22,800 கோடி ரயில்வே திட்டங்களுக்கு அனுமதி ; மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தமிழ்நாடு
  • மோடி ஐயா உங்களுடன் இருப்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளார் : மதுரை விவசாயிகள் மத்தியில் தலைவர் அண்ணாமலை பெருமிதம் தமிழ்நாடு
  • கல்வி நிலையங்களில் திமுகவினர் தரங்கெட்ட நாடகம்: அண்ணாமலை கண்டனம் தமிழ்நாடு
  • இசை இறைவனுடன் ஒரு சந்திப்பு: தலைவர் அண்ணாமலை நெகிழ்ச்சி தமிழ்நாடு
  • சமூக வலைத்தளத்தில் அவதூறு பதிவு : சுந்தரவள்ளி மீது தருமபுரி எஸ்.பி., அலுவலகத்தில் பாஜக மகளிர் அணி புகார் தமிழ்நாடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்கும் சிபிஆர் – நயினார் நாகேந்திரன் நேரில் வாழ்த்து
  • தியாகி இமானுவேல் நினைவிடத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மரியாதை
  • துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி : பிரதமர் மோடி வாழ்த்து
  • துணை ஜனாதிபதி தேர்தல் – முதல் நபராக வாக்கை பதிவு செய்த பிரதமர் மோடி
  • பாஜக சேவை இருவாரங்கள் மாநில பயிலரங்க நிகழ்வில் பங்கேற்ற நயினார் நாகேந்திரன்

Recent Comments

No comments to show.

Archives

  • September 2025
  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • அதிமுக, பாஜக தொண்டர்கள் இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் : கே.பி.ராமலிங்கம் அரசியல்
  • 2027 மார்ச்சில் மக்கள் தொகை கணக்கெடுப்பு; கெஜட்டில் அரசாணையை வெளியிட்டது மத்திய அரசு இந்தியா
  • ‘ஆபரேஷன் சிந்தூர்’ பெயர் வைக்க காரணம் என்ன? இந்தியா
  • சிங்கத்தை படம் பிடித்த பிரதமர் மோடி: உலக வனவிலங்கு நாளில் உற்சாகம் இந்தியா
  • தமிழகத்தை சேர்ந்த 25 பேர் ஐபிஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு: அண்ணாமலை வாழ்த்து அரசியல்
  • ஈரோடு இரட்டை கொலை; கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு அண்ணாமலை நேரில் ஆறுதல் தமிழ்நாடு
  • ஸ்ரீ கந்தர் மலைக்காக சிறைச்சென்று ஜாமினில் வந்த பாஜக நிர்வாகிக்கு உற்சாக வரவேற்பு தமிழ்நாடு
  • முக்கியமான காலகட்டத்தில் பயணிப்பதால் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்: அமைச்சகங்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை இந்தியா

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme