பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண்களுக்காக பழிதீர்க்கவே ‘ஆபரேஷன் சிந்தூர்’ என இந்திய ராணுவம் பெயர் வைத்து பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாதிகள் மீது தாக்குதலை தொடங்கியுள்ளது.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் அப்பாவி ஹிந்து சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இதனால் காஷ்மீர் எல்லையில் போர் பதற்றம் நிலவியுள்ளது.
இந்நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தியது.
பஹல்காம் தாக்குதலின் போது 25 பெண்களின் கணவர்கள் கொல்லப்பட்ட நிலையில் அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
திருமணம் ஆன பெண்கள் நெற்றி வடுகில் வைக்கும் குங்குமம் ‘சிந்தூர்’ என அழைக்கப்படும். பஹல்காம் தாக்குதலில் பல பெண்கள கண் எதிரில் அவர்கள் கணவன் சுட்டுக்கொள்ளப்பட்டு தங்கள் குங்குமத்தை இழந்தனர்.
பெண்கள் நெற்றியில் வைக்கும் குங்குமத்தை குறிக்கவே, ராணுவ நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.