Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • பயிற்சி முடித்த 478 ராணுவ அதிகாரிகளுக்கு பட்டங்களை வழங்கினார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழ்நாடு
  • திமுக அரசு செய்த தவறை மறைக்க ஊடகங்களை தவறாக பயன்படுத்தி வருகிறது : கே.பி.ராமலிங்கம் நாடு
  • டெல்லியில் ஒவ்வொரு ஊழலும் விசாரிக்கப்படும்; கொள்ளை அடித்தவர்கள் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும்: பிரதமர் மோடி இந்தியா
  • கெட்அவுட் ஸ்டாலின்: தருமபுரி பாஜக சார்பில் முழக்கம் அரசியல்
  • ஆதம்பூர் விமானப்படை வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் இந்தியா
  • திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளது என்பதற்கு ஈசிஆர் சம்பவம் ஓர் உதாரணம் : தலைவர் அண்ணாமலை அரசியல்
  • டங்ஸ்டன் சுரங்கம் வராது; மீறி வந்தால் களத்தில் இறங்க தயார்: தலைவர் அண்ணாமலை உறுதி அரசியல்
  • மக்கள் அனைவரும் யோகா செய்ய வேண்டும் : சர்வதேச யோகா தினத்தில் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் தமிழ்நாடு

பஹல்காமில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் வெறியாட்டம்; ‘‘நீ ஹிந்துவா?’’ என கேட்டு, கேட்டு 28 சுற்றுலாப்பயணிகளை கொன்ற கொடூரம்

Posted on April 24, 2025April 24, 2025 By வ.தங்கவேல் No Comments on பஹல்காமில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் வெறியாட்டம்; ‘‘நீ ஹிந்துவா?’’ என கேட்டு, கேட்டு 28 சுற்றுலாப்பயணிகளை கொன்ற கொடூரம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் (ஏப்ரல் 22) ராணுவ உடையில் ஊடுருவிய இஸ்லாமிய பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகளிடம் சென்று ‘‘நீ ஹிந்துவா? நீ ஹிந்துவா?’’ என கேட்டு, கேட்டு கொன்ற கொடூரம் நெஞ்சை உலுக்கச்செய்துள்ளது. இத்தாக்குதலில் வெளிநாட்டவர் உட்பட 28 சுற்றுலாப்பயணிகள் உயிரிழந்தனர்.

ஜம்மு – காஷ்மீரில் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாட்டு கட்சி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பஹல்காம் மாவட்டம் மிக முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. இந்த மாவட்டத்தில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதி, நீண்ட பசுமையான புல்வெளிகள் காரணமாக ‘மினி சுவிட்சர்லாந்து’ என அழைக்கப்படுகிறது.

சுற்றிலும் அடர்ந்த பைன் மரக் காடுகள் உள்ள இந்த பகுதியில், பல்வேறு மாநில சுற்றுலா பயணியர் இயற்கை அழகை ரசித்தபடி குதிரை சவாரி செய்வது வழக்கம். இப்பகுதி எப்போதும் சுற்றுலா பயணியர் நிறைந்து காணப்படும். இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3:00 மணி அளவில் வழக்கம்போல் பைசரன் பள்ளத்தாக்குப் பகுதியில் சுற்றுலா பயணியர் குவிந்திருந்தனர்.

அப்போது, ராணுவ சீருடையில் வந்த இஸ்லாமிய பயங்கரவாதிகள், சுற்றுலா பயணியரை ஒவ்வொருவரிடமும் சென்று நீ ஹிந்துவா என கேட்டுள்ளனர். ஆம் என சொன்னவர்களை அங்கேயே துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். மேலும் சில ஆண்களின் ஆடையை அவிழ்த்து காண்பிக்க சொல்லி இஸ்லாமியர் இல்லை என தெரிந்ததும் அவர்களையும் சுட்டுக்கொன்றுள்ளனர்.

துப்பாக்கி குண்டு சத்தத்தைக் கேட்டு சுற்றுலா பயணியர் அங்குமிங்கும் சிதறியடித்து ஓடினர். இந்த தாக்குதலை நடத்திவிட்டு அங்கிருந்து இஸ்லாமிய பயங்கரவாதிகள் மலைப்பகுதிக்குள் தப்பி ஓடி விட்டனர்.

இந்த கொடூர தாக்குதலில் ஹிந்து சுற்றுலா பயணியர் 28 பேர் உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த மீட்புப் படையினர், காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணியர் என்றும், அவர்கள் குஜராத், கர்நாடகா, தமிழகம், மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்தது. உயிரிழந்தவர்களில் இருவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது. தாக்குதல் நடந்த பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து தப்பியோடிய பயங்கரவாதிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் – -இ- – தொய்பா பயங்கரவாத அமைப்பின் உள்ளூர் கிளையான, ‘ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்’ பொறுப்பேற்று உள்ளது.

இந்த தாக்குதலுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா, ஜம்மு – காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் வெளிநாட்டு தலைவர்கள் உட்பட பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

ஜம்மு – காஷ்மீரின் புல்வாமாவில், 2019ல், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது இஸ்லாமிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அதற்குப் பின் தற்போது தான், காஷ்மீரில் பயங்கரவாதிகள் பெரிய அளவில் தாக்குதல் நடத்தியுள்ளனர் என பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்தன.

28 பேர் பலி; பஹல்காமில் நடந்தது என்ன?

காஷ்மீர் பஹல்காமில் மினி சுவிட்சர்லாந்து என கூறப்படும் பைசரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் தாக்குதல்.

பஹல்காமில் இருந்து 3.5 கி.மீ. மலையேறி சுற்றுலாபயணிகள் பைசரன் பள்ளத்தாக்கை அடைய வேண்டும்.

பைசரன் பள்ளத்தாக்கு முழுக்க முழுக்க பைன் மரக்காடுகளால் சூழப்பட்டுள்ள ஒரு பகுதி, பல ஆண்டுகளாக பைசன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இல்லாததால் ராணுவம் போடப்படவில்லை.

ராணுவம் இல்லாததை பயன்படுத்திக் கொண்டு சுற்றுலா பயணிகள் சுமார் 28 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியுள்ளனர் பயங்கரவாதிகள்.

சுற்றுலா வந்த புதுமண ஜோடிகளிடம் சென்று உங்கள் மதம் என்ன என்று பயங்கரவாதிகள் கேட்டுள்ளனர்.

இஸ்லாமியர் இல்லை என தெரிந்த உடன் ஆண்களை மட்டும் சுட்டுக் கொலை செய்துள்ளனர் பயங்கரவாதிகள்.

இஸ்லாமியர் என கூறும் சுற்றுலா பயணிகளிடம் முஸ்லிம் மதம் தொடர்புடைய வாசகங்களை ஒப்புவிக்க கூறியுள்ளனர் பயங்கரவாதிகள்.

கலிமா கூறத் தெரியாதவர்களையும் ஈவு இரக்கமின்றி நெற்றி பொட்டில் சுட்டு கொலை செய்துள்ளனர் பயங்கரவாதிகள்.

தாக்குதலை தடுக்க வந்த உள்ளூர் கடை வியாபாரிகள், சுற்றுலா வழிகாட்டிகளையும் பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்துள்ளனர்.

சுற்றுலா பயணிகளை வரிசையாக நிற்க வைத்து அவர்களின் நாடு, மாநிலம், ஊர், மதம் போன்றவற்றை தெரிந்துக்கொண்ட பின்னரே சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியா Tags:#Attack, #Kashmir, #Oreynaadu, #Tamilnadu

Post navigation

Previous Post: தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்: சேலத்தில் தலைவர் நயினார் நாகேந்திரன்
Next Post: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கமலாலயத்தில் அஞ்சலி

Related Posts

  • காலத்தால் அழியாத சக்தி வாய்ந்த ஊடகம்: உலக வானொலி தினத்தில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி இந்தியா
  • தமிழ் மொழியின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் பிரதமர்: காசி தமிழ்ச் சங்கமத்தில் தலைவர் அண்ணாமலை இந்தியா
  • 2027 மார்ச்சில் மக்கள் தொகை கணக்கெடுப்பு; கெஜட்டில் அரசாணையை வெளியிட்டது மத்திய அரசு இந்தியா
  • முக்கியமான காலகட்டத்தில் பயணிப்பதால் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்: அமைச்சகங்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை இந்தியா
  • ராமஜென்ம பூமிக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் ஆச்சார்யா மகந்த் ஸ்ரீசத்யேந்திர தாஸ் : ஹெச்.ராஜா இந்தியா
  • ஆபரேஷன் சிந்தூர்: ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி விளக்கம் இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • காவல்துறையால் கொலை செய்யப்பட்ட இளைஞர்; ஸ்டாலினிடம் 9 கேள்விக்கான பதிலை பெற்றுத்தாருங்கள்; ஊடகங்களுக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை
  • 95 கோடி பேருக்கு சமூக பாதுகாப்பு ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்
  • திருநீறு பூசி, ருத்ராட்சம் அணிந்து மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும்: அண்ணாமலை
  • தொடர்ந்து இரண்டு முறை தி.மு.க., வென்றதாக சரித்திரம் இல்லை: நயினார் நாகேந்திரன்
  • ம.பொ.சி 119வது பிறந்த நாள்; நயினார் நாகேந்திரன் மரியாதை

Recent Comments

No comments to show.

Archives

  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • பிரதமர் மோடி மிகச்சிறந்த தலைவர்: அதிபர் டிரம்ப் புகழாரம் இந்தியா
  • மக்கள் அனைவரும் யோகா செய்ய வேண்டும் : சர்வதேச யோகா தினத்தில் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் தமிழ்நாடு
  • டெல்லியில் 76-வது குடியரசு தின விழா கோலாகலம்: தேசியக் கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரௌபதி முர்மு இந்தியா
  • ம.பொ.சி 119வது பிறந்த நாள்; நயினார் நாகேந்திரன் மரியாதை தமிழ்நாடு
  • 2027 மார்ச்சில் மக்கள் தொகை கணக்கெடுப்பு; கெஜட்டில் அரசாணையை வெளியிட்டது மத்திய அரசு இந்தியா
  • தேசிய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் காசி தமிழ் சங்கமம்: தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா புகழாரம் இந்தியா
  • பிரதமர் மோடியை சந்தித்தார் அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்டு இந்தியா
  • 2026 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க கனிமவள கொள்ளை கும்பலை நம்பியிருக்கும் திமுக : தலைவர் அண்ணாமலை அரசியல்

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme